வறுமை நீங்க வடகிழக்கு மூலை வாஸ்து.

vasthu1
- Advertisement -

வீட்டின் செல்வ செழிப்புக்கு, ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு முக்கியமான திசை என்றால், அது வடகிழக்கு திசைதான். இந்த வடகிழக்கு திசை நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடியது. ஆன்மீகத்திற்கு உரிய திசை வடகிழக்கு திசை. தெய்வங்களுக்கு உரிய திசை வடக்கிழக்கு திசை. இந்த திசையை நம்முடைய வீட்டில் எப்படி பராமரிக்க வேண்டும், இந்த திசையில் வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன, என்பதை பற்றிய வாஸ்து ரீதியான ஆன்மீகம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தொழிலில் லாபம் பெற

தொழிலில் அதிகமாக லாபம் பெற வேண்டும் என்றால், நீங்கள் தொழில் செய்யும் இடத்திலோ அல்லது உங்கள் கடையிலோ வடகிழக்கு திசையில் குப்பைக் கூலங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். அந்த இடத்தில் ஒரு ஸ்டூல் போட்டு, அதன் மேலே ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை வைத்து பச்சை கற்பூரம் போட்டு வாசமாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த தண்ணீரில் இரண்டு துளசி இலைகளை போட்டு வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. இன்னும் உங்களுக்கு இட வசதி இருந்தால் இந்த திசையில் ஒரு சின்ன தொட்டியில் புதினா செடி வளர்த்து வந்தால் மேலும் மேலும் பண வசியம், தன வசியம் ஏற்படும். புதினாவின் வாசத்திற்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

வீட்டில் செல்வ வளம் பெறுக

வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும் என்றால் வடகிழக்கு திசையில் எப்போதும் வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் ஏற்றி வைக்கலாம். அந்த இடத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் பச்சைக் கற்பூரம் போட்டு அந்த தண்ணீருக்கு மேலே வாசனை நிறைந்த பன்னீர் ரோஜாக்களை போட்டு வைக்கலாம். ஒரு ஊரிலியில் இப்படி தயார் செய்து வைத்தால் கூட அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, பணம் வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வறுமை நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

பொதுப்படையாக சொல்லப்போனால் வடகிழக்கு மூலை அழகாக இருக்க வேண்டும். வாசமாக இருக்க வேண்டும். அசுத்தமாக இருக்கக் கூடாது. அதற்குண்டான முயற்சிகளை நீங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வாருங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

அதே போல வடகிழக்கு மூலையில் இருக்கவே கூடாத விஷயம் என்றால் அது கழிவறை குளியல் அறை தான். பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் வேறு வழியில்லாமல், வடகிழக்கு பகுதியில் கழிவறையோ குளியலறையோ இருக்கிறது என்றால் என்ன செய்வது. உடனடியாக அதை இடிக்க முடியாது.

- Advertisement -

நீங்கள் வடகிழக்கில் பயன்படுத்தக்கூடிய கழிவறையில் மூன்று வெண்கல கிண்ணங்களை வைத்து விடுங்கள். அந்த வாஸ்து தோஷமானது குறைந்து, உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் கொஞ்சம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. தவறான இந்த வாஸ்து குறைபாட்டை முழுமையாக சரி செய்ய முடியாது. அதிலிருந்து வரும் பாதிப்புகளை நீக்க நீங்கள் இந்த சின்ன எளிமையான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: ஜாதகத்தில் உள்ள சனி தோஷம் நீங்க பரிகாரம்.

வடகிழக்கு மூலையை நீங்கள் அழகுபடுத்தக்கூடிய தண்ணீரை, தினமும் மாற்ற வேண்டும். இரண்டு நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு விட்டு விடக்கூடாது. அசுத்தம் அடைந்த நீர் அந்த இடத்தில் இருந்தாலும் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எளிமையான இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -