செய்வினை ஏவல் பில்லி சூனியம் போன்ற எந்த அமானுஷ்யமான சக்தியாலும் உங்கள் உடலை நெருங்கவே முடியாது. வாரத்தில் ஒரு நாள் இப்படி குளித்தால்.

kadugu
- Advertisement -

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை கண் திருஷ்டி போன்ற பாதிப்புகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களாலா நீங்கள். அல்லது இப்படிப்பட்ட பாதிப்பு உடம்பில் தங்கி இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளவர்களும் இதை செய்யலாம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு ஏராளமான பரிகாரம் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது‌ அதிலிருந்து ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த எளிமையான செலவில்லாத பரிகாரத்தை வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து செய்து வரும்போது உங்கள் உடம்பை பிடித்திருக்கும் கெட்ட சக்தியானது விலகிவிடும்.

இல்லை உடல் சோர்வும் உடல் அசதியும் மட்டும்தான் இருக்கிறது ஏதாவது கண் திருஷ்டி காரணமாக இருக்கும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இந்த பரிகாரத்தை செய்த பிறகு எந்த ஒரு கெட்ட சக்தியாலும் உங்களுடைய உடம்பை நெருங்கவே முடியாது. உங்கள் உடலானது ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்து விடும். அப்படி ஒரு சக்தி வாய்ந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

அமானுஷ்யமான சக்திகளிடமிருந்து நம்முடைய உடம்பை பாதுகாக்க செய்ய வேண்டிய பரிகாரம்:
வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை இதை செய்ய வேண்டும். வேப்பங்கொழுந்து, அதாவது வேப்ப இலை, வேப்பம்பூ இந்த பொருட்களை எல்லாம் எடுத்து வந்து தண்ணீரில் அலசிவிட்டு அதில் கொஞ்சமாக மஞ்சள் பொடி போட்டு கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அம்மியிலும் அரைத்துக் கொள்ளலாம். மிக்ஸியிலும் அரைத்துக் கொள்ளலாம்.

இப்படியாக அரைத்த இந்த விழுதை உடம்பு முழுவதும் பூசி ஐந்து நிமிடம் கழித்து எப்போதும் போல தலைக்கு குளித்து விட்டால் போதும். சோப்பு போட்டு குளிக்க கூடாது. வெறும் தண்ணீரை தலைக்கு ஊற்றி குளித்தால் உடம்பை பிடித்த கெட்ட சக்தியானது விலகிவிடும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.

- Advertisement -

வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் இதை செய்யலாம். கெட்ட சக்தியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில அறிகுறிகள் தெரியும். உடல் சோர்வு இருக்கும். சரியாக சாப்பிட மாட்டார்கள். நேரத்திற்கு நல்ல தூக்கம் இருக்காது. எதையோ கண்டு அலறி பயந்து கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உங்கள் உடம்பில் இருந்தால் அதற்கு காரணம் எதிர்மறை சக்தி தான் என்ற எண்ணம் உங்களுடைய ஆழ்மனதில் பதிந்திருந்தால், இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

செவ்வாய்க்கிழமை காலை இந்த வேப்ப இலை குளியலை செய்து விட்டீர்கள். அதே செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மேல் யார் பாதிக்கப்பட்டவர்களோ அவர்களை கிழக்கு பார்த்து நிற்க வைத்துக் கொள்ளுங்கள். கையில் ஒரு கைப்பிடி அளவு கடுகை எடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தலையை மூன்று முறை சுற்றி அந்த கடுகை நெருப்பில் போட்டு பொசுக்கி விட வேண்டும்.

- Advertisement -

தொடர்ந்து 11 செவ்வாய் கிழமை இந்த 2 பரிகாரத்தை செய்யும் போதே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரிய தொடங்கிவிடும். உங்களை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு கெட்ட சக்தி உங்களை விட்டு விலகியதாக உணர்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும். மன அழுத்தத்திலிருந்தும் விடுபடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: வரவேற்பறையில் இந்த ஒரு பூ இருந்தால் போதும். உங்க வீட்டுக்கு சண்டை போடும் எண்ணத்தோடு யாராவது வந்தால் கூட, அவர்கள் சமாதானமா மாறிடுவாங்க. எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றும் அரிய குறிப்பு இது.

இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலை துரத்தி அடிக்க பரிகாரங்கள் நமக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும், நமக்கு வரக்கூடிய எல்லா பிரச்சனைக்கும் காரணம் ஏவல் செய்வினை பில்லி சூனியம் என்று நம்பி மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். இதையும் தாண்டி உங்களுடைய ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதையும் மருத்துவரிடம் அணுகுவது நல்லது. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -