வரவேற்பறையில் இந்த ஒரு பூ இருந்தால் போதும். உங்க வீட்டுக்கு சண்டை போடும் எண்ணத்தோடு யாராவது வந்தால் கூட, அவர்கள் சமாதானமா மாறிடுவாங்க. எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றும் அரிய குறிப்பு இது.

uruli3
- Advertisement -

இன்னைக்கு நிறைய பேர் வீடுகளில் நிம்மதி கெட்டுப் போவதற்கு ஒரு காரணம் உறவுகள். உறவுகளுக்குள் வரக்கூடிய சண்டை. உறவுகள் எதிரிகளாக மாறிவிடுகிறார்கள். அதனால் எங்களுக்கு என்னங்க நஷ்டம். இந்த சொந்த பந்தங்கள் இருப்பதைவிட, இல்லாமல் இருப்பதே மேல். அப்படி என்று சில பேர் சொல்லலாம். அப்படி கிடையாது. சொந்தங்களும் பந்தங்களும் நிறைந்தது தான் வாழ்க்கை. சொந்தபந்தமே இல்லாமல் தனியாக வாழ்வதற்கு எதற்காக இந்த பூமியில் பிறக்க வேண்டும். சொந்த பந்தத்திற்குள் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். அதற்காக உறவுகளை முறித்துக் கொண்டு செல்வதா.

உடன்பிறந்தவர்கள், மாமன் மச்சான், அங்காளி பங்காளி, இவர்களோடு சண்டை போட்டுக் கொண்டு மீண்டும் சேர்வதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் நமக்கு கிடைக்கப் போவது கிடையாது. ஆகவே குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, உறவுகளுக்குள் விட்டுக் கொடுத்துச் சென்றால் தவறு கிடையாது. இதை மனதில் நிறுத்திக் கொண்டு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

குடும்ப ஒற்றுமைக்கு வரவேற்பு அறையில் வைக்க வேண்டிய உருளி:
அந்த காலத்தில் எல்லாம் வீட்டிற்கு வெளியில் கட்டாயமாக செம்பருத்தி பூ செடி இருக்கும். அதிலும் சிவப்பு செம்பருத்தி பூ செடி இருக்கும். இந்த சிவப்பு செம்பருத்தி பூ செடி என்ன வேலை செய்யும் தெரியுமா. நம் வீட்டிற்குள் வருபவர்களின் மன நிலைமையை அமைதிப்படுத்தும். அவர்களுடைய மனதை குளிர்ச்சிப்படுத்தும். ஏதாவது கோபத்தோடு நம் வீட்டிற்குள் நம் சொந்தக்காரங்க வராங்கன்னு வச்சுக்குவோம். அவர்களை கூட அமைதிப்படுத்தி சாந்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த செடிக்கு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

நெகட்டிவ் எனர்ஜியை கிளன்ஸ் செய்யும் வேலையை இந்த செடி செய்யுது. அவ்வளவுதான். இப்போது நம்மால் வீட்டிற்கு வெளியில் இந்த செம்பருத்தி பூ செடியை வைக்க முடியாது. என்ன செய்வது. சின்னதாக உருளி எடுத்துக்கோங்க. அது நிரம்ப தண்ணீரை வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு சிவப்பு நிற செம்பருத்தி பூவை போடுங்கள். ஒன்று என்பது கணக்கிற்காக. நிறைய செம்பருத்தி பூ கிடைத்தாலும் வாங்கி வந்து அந்த தண்ணீரில் போட்டு வைக்கலாம். தவறு கிடையாது.

- Advertisement -

அலங்கரிக்கப்பட்ட இந்த ஊரிலியை வரவேற்பறையில் வைத்து விட்டால் போதும். நெகட்டிவ் எனர்ஜியை சுத்தமாக அழித்து விடும். உங்கள் வீட்டிற்குள் வரும் எதிரி கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். வீட்டிற்குள் இருக்கும் உறவுகளுக்கு சண்டை சச்சரவுகள் வராது. குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். இந்த சிவப்பு நிற செம்பருத்தி பூ அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியையும் உங்கள் குடும்பத்தின் மீது விழாமல் பாதுகாக்கும்.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக வந்து வீட்டில் நிம்மதியே இல்லையா? அப்படியானால் குலதெய்வ கோவிலுக்கு இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கிக் கொடுத்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.

உங்களை கெடுக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு சில சொந்தக்காரங்க வராங்கன்னா கூட அவங்களால், உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் பாதிப்பு வராமல் பாதுகாக்கும் வேலையை இந்த செம்பருத்தி பூவும், அதற்கு கீழே இருக்கும் தண்ணீரும் செய்யும். நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -