திருச்செந்தூர் முருகன் அருளை பெற சூட்சம வழிபாடு

pray lady murugan
- Advertisement -

பக்தர்கள் மனம் உருகி கூப்பிட்டு குரலுக்கு ஓடி வரக்கூடிய கருணை மீது கடவுள் தான் இந்த கந்தர் பெருமாள் இதை அனைவரும் உணர்ந்ததால் தான் இன்று பெரும்பாலான பக்தர்கள் முருகன் என்றால் அப்படியே உருகி போய் சரணடையும் அளவில் இருக்கிறார்கள். அப்படியான முருகப் பெருமானிடம் கூட சில நேரங்களில் நாம் கேட்கும் வரங்கள் கிடைக்க தள்ளிப் போகும்.

இதற்கு காரணம் முருகன் அருள் இல்லை என்பது கிடையாது நம்முடைய கர்ம வினைகள் மட்டுமின்றி இப்போது வாதம் நம் வாழ்க்கையில் செய்யும் சில தவறுகளாகவும் இருக்கலாம் ஆனால் இவை மீறி கூட நாம் கேட்ட வரத்தை அப்படியே பெறக்கூடிய ஒரு சூட்சம வழிபாட்டு முறை உள்ளது. அதைப் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வேண்டுதல் பலிக்க முருகன் வழிபாடு

திருச்செந்தூர் முருகன் வழிபாடு பலரும் திருச்செந்தூர் சென்று வந்தாலே திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் தினந்தோறும் பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி படையெடுத்து சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இந்த முறையில் வழிபட்டு சென்றால் நிச்சயம் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்று பார்க்கலாம்.

திருச்செந்தூர் செல்ல முடிவு முடிவு செய்து விட்டால் அதற்கு முன் வரும் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அன்றைய தினத்தில் காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராடி விட்டு, பூஜை அறையில் முருகர் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்ற வேண்டும் இந்த தீபமானது வடக்கு நோக்கி எரிய வேண்டும்.

- Advertisement -

அத்துடன் முருகருக்கு நெய்வேத்தியமாக ஒரு டம்ளர் பால் வைத்து விடுங்கள்.அடுத்து ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 11 ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒவ்வொரு நாணயத்தையும் மஞ்சள் துணியில் வைக்கும் போது ஓம் சரவண பவ என்று சொல்ல வேண்டும்.

இந்த நேரத்தில் நீங்கள் எதற்காக செல்ல நினைக்கிறீர்களோ உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனதார முருகனிடம் கேட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த 11 ரூபாயும் இப்படி வைத்த பிறகு ஒரு மஞ்சள் நிற நூலை இந்த துணியை கட்டி வைத்து விடுங்கள். இது அப்படியே பூஜை அறையில் இருக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு வரக் கூடிய வெள்ளிக்கிழமையில் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபாடு செய்த பிறகு உண்டியலில் இந்த நாணயம் முடிந்து போட வேண்டும். இதை உண்டியலில் செலுத்திய பிறகு அங்கே அமர்ந்து முருகப்பெருமானே மனதார வேண்டிக் கொண்டு அங்கேயும் ஓம் சரவணபவ என்ற நாமத்தை உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ சொல்லுங்கள்.

அதன் பிறகு நீங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள் இந்த ஒரு சூட்சம வழிபாடு உங்கள் வேண்டுதலை கட்டாயமாக நிறைவேற்றி தரும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த முடிச்சை கட்டி வைக்கும் தினமும் வெள்ளிக்கிழமையாக தான் இருக்க வேண்டும். ஆலயத்தில் கொண்டு சேர்க்கும் தினமும் வெள்ளிக்கிழமையாக தான் இருக்க வேண்டும்.

இதையும் படிக்காலமே: பங்குனி உத்திரத்தன்று சொல்ல வேண்டிய மந்திரம்

இவை எல்லாம் முறைப்படி செய்யும் போது உங்கள் வேண்டுதல் கட்டாயமாக நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் இந்த வழிப்பாட்டு முறை பின்பற்றி பலன் அடையு

- Advertisement -