முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த மந்திரம்

murugan6
- Advertisement -

இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக பார்க்கப்படும் கடவுள் முருகப்பெருமான். கலியுகத்தில் கடவுளை நேரில் பார்க்க முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால் நாம் பக்தியோடு முருகப்பெருமானை அழைத்து, முருக பெருமானின் மந்திரத்தை சொன்னால், அவன் நிச்சயம் தன் பக்தர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் காட்சி தருவான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

நாளைய தினம் முருகருக்கு உகந்த பங்குனி உத்திர திருநாள் வரவேற்கின்றது. இந்த நாளில் உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னால் உங்கள் கஷ்டத்தை தீர்க்க முருகப்பெருமான் நிச்சயம் நேரில் வருவார். அந்த மந்திரம் என்ன. அந்த மந்திரத்தை நாளைய தினம் எந்த நேரத்திற்குள் எப்படி உச்சரிக்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பங்குனி உத்திரத்தன்று சொல்ல வேண்டிய மந்திரம்

நாளைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. நாளை காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். பூஜை அறையில் நீங்கள் முருகரை பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் பிரச்சனைகளை முருகரிடம் சொல்லுங்கள். உங்கள் தாயிடம் சொல்வது போல, உங்கள் தந்தையிடம் சொல்வது போல பிரச்சனைகளை சொல்லுங்கள். பிறகு 108 முறை ‘கருணைக்கடலே கந்தா போற்றி’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். நாளை தினம் சூரிய உதயத்திற்கு முன்பாக அதாவது காலை 3:00 மணியிலிருந்து, 5:30 மணிக்கு முன்பாக இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லி முடித்திருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த வழிபாட்டை செய்வதற்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் எடுக்கும். அவ்வளவுதான். ஆனால் இந்த 15 நிமிடத்தில் நீங்கள் அந்த முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற இந்த மந்திரம் உங்களுக்கு உதவி செய்யும். அப்படி பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் நாளை காலை 10:30 மணிக்கு முன்பாக மந்திரத்தை சொல்லி பூஜை அறையில் முருகரை வழிபாடு செய்து விடுங்கள்.

சரி இந்த மந்திரத்தை சொன்னால் முருகப்பெருமானை நேரில் பார்க்கலாமா. பார்க்கலாம். எந்த ரூபத்தில் தெரியுமா? உங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அந்த முருகர் அவதாரத்தில் யாராவது ஒரு மனிதன் வந்து உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் பிரச்சனைகளை போக்க வழியை காட்டித் தரக்கூடிய அந்த மனிதனின் ரூபத்தில் நீங்கள் முருகரை காணலாம்.

- Advertisement -

ஒரு சிலருக்கு முருகப்பெருமான் கனவில் வந்து ஆசி வழங்குவதற்கு கூட நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் நீங்கள் முழு பக்தியோடு நம்பிக்கையோடு முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பட்சத்தில் மேலே சொன்ன அதிசயங்கள் எல்லாம் உங்களுக்கு நிச்சயம் ஒருநாள் நடக்கும். ஒரு சில தருணங்களில் நம்மை அறியாமலையே யோசிப்போம்.

அடடா இவ்வளவு பெரிய சிக்கலில் இருந்தோம். இவ்வளவு சுலபமான தீர்வை இந்த மனிதன் சொல்லிவிட்டானே. கடவுள் ரூபத்தில் வந்த மனிதர் தான் இவர் என்று, நாமே சிலபேரை கடவுள் ரூபத்தில் பார்த்திருப்போம். அதேபோலத்தான் முருகப்பெருமான் உங்களுக்கு ஒரு சில திருவிளையாடல்களை நடத்திக் காண்பிப்பார்.

இதையும் படிக்கலாமே: பங்குனி உத்திர தீப வழிபாடு

ஆனால் அதற்கு உண்மையான பக்தி ரொம்ப ரொம்ப முக்கியம். நம்பிக்கையோடு நாளை முதல் முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கும் அந்த முருகப் பெருமான் காட்சியை தருவார் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -