கெட்ட கெட்ட எண்ணங்கள் உங்கள் மனதில் வந்து உட்கார்ந்து கொண்டு, நிம்மதியாக வாழ விடாமல் பாடய் படுத்துகிறதா? நிம்மதியாக வாழ இந்த அம்மனின் பெயரை மனதார 1 முறை சொன்னாலே போதும்.

prathiyagara
- Advertisement -

சில பேரின் எதிர்மறை எண்ணங்கள் அவர்களை நிம்மதியாக வாழவே விடாது. ஏதாவது கெட்ட எண்ணம் ஆழ்மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அதாவது ஒரு சிலரால் நேர்மறையாக எதையுமே சிந்திக்க முடியாது. எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். உதாரணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றால் விபத்து நடந்து விடுமோ, தன்னுடைய குழந்தை விளையாடச் சென்றால் விழுந்து அடிபட்டு விடுமோ, வீட்டில் இருக்கும் இபவர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ, அவர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ, இவர்களுக்கு ஆபத்து வருமோ, என்று எதிர்மறையாகவே சிந்தனையோடு இருப்பார்கள். இவர்களுடைய சிந்தனைக்கு ஏற்றது போல ஏதாவது சில விபரீத விஷயங்களும் நடந்துவிடும். தான் எதிர்மறையாக நினைத்ததாலாயே இப்படிப்பட்ட கெட்டது தன்னுடைய வீட்டில் நடந்து விட்டது என்று மனதை போட்டு குழப்பிக் கொள்வார்கள்.

நம்முடைய உடம்பில் ஏதாவது கெட்ட சக்தி வந்து குடி கொண்டு உள்ளதோ, அல்லது நம்முடைய வீட்டில் ஏதாவது கெட்ட சக்தி இருக்கிறதோ என்று மனக்குழப்பமும் போராட்டமும் நிறைய இருக்கும். இப்படிப்பட்ட சிந்தனையைக் கொண்டவர்கள் நிம்மதியாக தூங்க கூட முடியாத சூழ்நிலை இருக்கும். நன்றாக மனதில் நாம் ஒரு விஷயத்தை பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நாம் நினைப்பதாலோ நாம் வேண்டிக் கொள்வதாலோ அல்லது நாம் சில விஷயங்களை பேசுவதாலோ சிந்திப்பதாலோ எதுவுமே நடக்கப்போவது கிடையாது.

- Advertisement -

நமக்கு மேலே இருக்கும் ஒருவன், நமக்கு என்னென்ன நடக்க வேண்டும் என்ன நடக்கக்கூடாது என்பதை முன்கூட்டியே எழுதி வைத்து விட்டான். நாம் பிறக்கும் போதே நம்முடைய தலையெழுத்து எழுதி விட்டது. ஆகவே, நாம் நினைப்பதால் தான் இப்படிப்பட்ட கெட்டது நடக்கிறது என்று யாரும் எதையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். சரி, இப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ப்ளாக் சால்ட் என்று சொல்லப்படும் கருப்பு உப்பு தேவை. மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை கிழக்கு பார்த்தவாறு ஒரு நாற்காலியில் சௌகரியமாக அமர வைக்க வேண்டும் அவர்களுடைய கால்களுக்கு கீழே ஒரு பக்கெட் வைத்துக் கொள்ளுங்கள். அகலமான பிளாஸ்டிக் பக்கெட் இருந்தால் கூட போதும். அதில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி இரண்டிலிருந்து மூன்று கைப்பிடி அளவு இந்த கருப்பு உப்பை நன்றாக தூள் செய்து போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் அவர்களுடைய பாதங்கள் ஒரு பத்து நிமிடம் இருக்க வேண்டும்.

- Advertisement -

உடம்பில் இருக்கும் கெட்ட சக்தியாக இருக்கட்டும் கெட்ட எண்ணங்களை சிந்திக்கத் தூண்டும் எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும், அது உங்களுடைய பாதங்களின் வழியாக இந்த உப்பு தண்ணீரில் இறங்கிவிடும். உப்பு தண்ணீரில் கால்களை வைத்திருக்கும் போது மனதார பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர் வாயால் ‘ஓம் பிரத்தியங்கரா தேவியே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். உங்களுடைய எதிர்மறை சிந்தனைகள் அத்தனையும் உங்கள் கால்களின் வழியாக கீழே இறங்கி விடும். மன உறுதியும் தைரியமும் நீங்கள் சொல்லக் கூடிய மந்திரத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.

வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு யாருக்காவது இப்படி பிரச்சனை இருந்தாலும் அவர்களிடம் இந்த பரிகாரத்தைச் சொல்லி செய்ய சொல்லுங்கள். நிச்சயமாக ஒரு சில வாரங்களில் அவளுடைய எண்ணங்களில் சிந்தனையில் நல்ல மாற்றம் இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -