கேட்டது உடனே கிடைக்க வேண்டுதல் வைக்கும் முறை

pray lady kovil
- Advertisement -

இறைவனை வணங்கும் போது நாம் அவருக்கு பிடித்தமான நெய்வேத்தியம் வைப்பது, மலரை சாற்றுவது, பிடித்த பொருள்களை வைத்து வணங்குவது அனைத்துமே அவருடைய அருளை எளிதில் பெறலாம். இதையெல்லாம் செய்யாமல் மனதார இறைவனை வணங்கினாலும் அவரின் அருள் கிடைக்கும். அதில் துளியும் சந்தேகமில்லை.

ஏனெனில் இறைவன் நம்மிடம் எதையும் எதிர்பார்த்து அருள் புரிவது கிடையாது.நமக்குப் பிடித்த ஒருவரை காண செல்லும் போது நம்மை பார்த்தாலே அவர் மகிழ்ச்சி அடைவார். ஆனால் போகும் போது அவருக்கு பிடித்த பொருளை கையில் கொண்டு போனால் மேலும் மகிழ்ச்சி அடைவார். அதே போலத் தான் இறைவனை வணங்கும் போது அவருக்கு உகந்த பொருட்களைக் கொண்டு வணங்கும் போது அவர் மனம் மகிழ்ந்து பலன்களை இரட்டிப்பாக உடனே அருள்வார்.

- Advertisement -

அந்த வகையில் இறைவனை வணங்கும் போது இந்த ஒரு பொருள் கையில் இருந்தால் நம்முடைய வேண்டுதல் உடனே நிறைவேறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பொருள் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நினைத்தது உடனே நிறைவேற

இறைவனை வணங்கும் போது அவரை மனதார நினைத்து அவரின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும். அந்த வேண்டுதலில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும் இதுதான் மிகவும் முக்கியம் அத்துடன் சேர்ந்து நாம் கையில் வைத்திருக்க வேண்டிய பொருள் கொட்டைப் பாக்கு.

- Advertisement -

முன்பெல்லாம் அனைத்து வழிபாடுகளிலும் இந்த கொட்டை பார்ப்பது தான் இடம்பெற்றிருக்கும் இப்போது காலப்போக்கில் அதை தவிர்த்து சாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு இருக்கும் வாக்குகளை பயன்படுத்துகிறோம். ஆனால் தெய்வீக ஆற்றல் நிறைந்த பொருளாக பார்க்கப்படுகிறது. இதை வழிபாட்டில் வைக்கும் பொழுது நம்முடைய வழிபாட்டின் பலன் இருமடங்காக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

நவகிரக பூஜைகள் மகாலட்சுமி தாயாரின் பூஜைகள் போன்றவற்றுக்கு கொட்டைப்பாக்கு நிச்சயமாக பயன்படுத்துவார்கள். அது மட்டுமின்றி குலதெய்வ வழிபாட்டில் குலதெய்வத்தின் அருள் கிடைக்க இந்த கொட்டைப்பாக்கு மிகவும் முக்கியம். அப்படியான இந்த கொட்டைப்பாக்கை கையில் வைத்துக் கொண்டு நாம் வேண்டுதல் வைக்கும் போது அது நிச்சயம் நிறைவேறும்.

- Advertisement -

இதை ஆலயத்திற்கு செல்லும் போதும் நாம் கையில் கொட்டை பாக்கை கொண்டு சென்று வேண்டிய பிறகு மறுபடியும் வீட்டில் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடலாம். அதே போல் வீட்டிலும் பூஜை செய்யும் பொழுது இந்த கொட்டைப்பாக்கை வைத்து வேண்டிய பிறகு பூஜையறையில் வைத்து விடுங்கள். அதன் பிறகு மஞ்சள் கலந்த தண்ணீரில் அலசி மறுபடியும் அதே கொட்டை பாக்கை பயன்படுத்தலாம் தவறில்லை.

இந்த கொட்டைப்பாக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது தெய்வீக பொருட்கள் விற்கும் கடைகளிலும் கிடைக்கும் அது கிடைக்காத பட்சத்தில் அதற்கு பதிலாக கிழங்கு மஞ்சளையும் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது இருப்பினும் கொட்டைப்பாக்கு கிடைத்தல் அதையே பயன்படுத்துங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர பிரதோஷ வழிபாடு

இறைவனை முழுவதுமாக சரணடைவதே நம்முடைய துன்பங்கள் தீரவும் நமக்கு வேண்டியவற்றை பெறவும் தான். அதற்கு இப்படி ஒரு எளிமையான வழியை பின்பற்றினால் உடனே கிடைக்கும் என்றால் இதை பயன்படுத்துதல் எந்த தவறும் இல்லையே. இந்த வழிப்பாட்டு தகவலில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இது போல வழிபட்டு நல்ல பலனை அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -