பணம் சேர பிரதோஷ வழிபாடு

sivan vilava ilai
- Advertisement -

சிவபெருமான் உகந்த வழிபாடு என்றாலே ஞாபகத்திற்கு வருவது பிரதோஷ வழிபாடு தான். இந்தப் பிரதோஷம் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது அந்த வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய இந்த பிரதோஷம் பல சிறப்பம்சங்களை கொண்டு உள்ளது. ஏனெனில் ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய பிரதோஷ காலத்தில் ராகு காலமும் இணைந்து வருகிறது.

பொதுவாக ராகு காலத்தில் வரக்கூடிய பிரதோஷத்தில் சிவபெருமானை வழிபடும் பொழுது ராகு தோஷங்கள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பிரதோஷ காலத்தை நம்முடைய வறுமை நீங்கி செல்வம் சேர எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வறுமை நீங்கி செல்வம் பெருக பிரதோஷ வழிபாடு

நாளைய இந்த பிரதோஷ காலத்தில் அனைவரும் சிவாலயம் சென்று எம்பெருமானை வழிபாடு செய்வதை தவறாமல் செய்து விடுங்கள். ஏனெனில் ஒரு பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வது நம்முடைய ஓராண்டு பாவங்கள் தீர்க்கக் கூடியதாக அமையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அத்தகைய பிரதோஷ காலத்தில் அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு உங்களால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுங்கள். அதிலும் குறிப்பாக பால், தேன், சந்தனம் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பது நம் குடும்பத்திற்கு சுபிட்சத்தை தேடி தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பிரதோஷ வழிபாட்டுடன் நாம் வீட்டில் செய்ய வேண்டிய இந்த எளிமையான வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்வதற்கு வீட்டில் சிவபெருமான் படம் வைத்திருந்தால் அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். சிவலிங்கம் வைத்திருப்பவர்கள் அதை வைத்து பூஜை செய்யலாம் இத்துடன் 108 வில்வ இலை கட்டாயமாக தேவைப்படும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் சந்தனத்தை பன்னீர் ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள். சந்தனம் இல்லை என்றால் குங்குமம் குறைத்துக் கொள்ளலாம். வில்வ இலைகளை சுத்தமாக துடைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒவ்வொரு வில்வ இலையிலும் கீழ்வரும் இந்த மந்திர வார்த்தை எழுதுங்கள்.

- Advertisement -

ஓம் நமசி வசி

என்ற வார்த்தையை குச்சி அல்லது பூக்களின் காம்பு ஏதாவது ஒன்றை பயன்படுத்தி சந்தனத்தை தொட்டு வில்வ இலையில் எழுதுங்கள. ஒரு இலையில் ஒரு முறை எழுதினால் போதும் இதே போல் 108 முறை எழுதி பூஜை அறையில் வைத்து விடுங்கள். வில்வ இலை கிடைக்காத பட்சத்தில் வெள்ளை நிறத் தாளில் நீல நிற பேனாவினால் எழுதலாம். ஆனால் வில்வ இலையில் எழுதுவது தான் சிறப்பு.

இதை எழுதிய பிறகு உங்கள் பூஜை அறையில் வைத்து சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு வேண்டுங்கள். இந்த வழிபாட்டின் மூலம் எங்கள் வீட்டில் உள்ள வறுமை நிலை மாறி செல்வ வளம் பெருக்கெடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இலையை மாற்ற வேண்டாம் பூஜை அறையில் அப்படியே இருக்கட்டும். அடுத்த பிரதோஷத்தன்று கால் படாத இடத்தில் போட்டு விட்டு புதிதாக எழுதி வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க தண்ணீர் பரிகாரம்

அனைத்து செல்வத்தையும் அருளக் கூடிய சிவபெருமானை நினைத்து இந்த ஒரு வழிபாட்டை செய்யும் போது நம்முடைய வாழ்வு வளமானதாக மாறும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த வழிபாடு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -