இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு வேண்டாதவர்கள் செய்வினை செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்லிவிடுமாம் தெரியுமா? இதெல்லாம் உங்களுக்கு நடக்குதா?

dog-praying-men
- Advertisement -

சில விஷயங்கள் நமக்கு நடக்கும் பொழுது எதுவும் புரியாது ஆனால் பிரச்சனை வந்த பிறகு ஓ… இதெல்லாம் இதற்காகத்தான் நடந்திருக்கிறதா? என்று ஆச்சரியப்பட்டு போவோம். அந்த வகையில் நமக்கு நடக்க இருக்கும் கெட்ட விஷயங்களை, முன்கூட்டியே சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்கிறது சாஸ்திரங்கள். நமக்கு வேண்டாதவர்கள் சிலர், நம்மை பார்த்து பொறாமை படுபவர்கள் பலர் என்று நம்மை சுற்றி இருப்பவர்கள் மூலமே நமக்கு முன்னேற்றம் ஏற்படாமல் தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனை வருவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இப்படி நம்மை சுற்றி இருக்கும் கெட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய அறிகுறிகள் என்னென்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் அறிய இருக்கிறோம்.

நமக்கு ஒரு கெட்டது நடக்கப் போகிறது என்றால், கண்டிப்பாக நம்முடைய வீட்டை சுற்றி அல்லது நமக்கு ஏதாவது ஒரு புதிதான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும். ஏதோ ஒரு சிறிய விஷயம், இதுவரை நம்முடைய வாழ்க்கையில் நடக்காத ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கும். அது குழப்பத்தையும் நமக்கு கொடுத்துக் கொண்டிருக்கும். ஆனால் அந்த சமயத்தில் அது நமக்கு புரியாமல் போய்விடும். நமக்கு அந்த கெட்டது நடந்து முடிந்த பின்பு அதை நாம் அறியக்கூடிய சூழ்நிலை இருக்கும். இப்படி அல்லாமல், நமக்கு இந்த விஷயங்கள் எல்லாம் நடைபெறும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை சாஸ்திரங்கள் எதை குறிப்பிடுகிறது?

- Advertisement -

திடீரென உங்களுடைய கனவில் நாய் கடிப்பது போல வந்தால், கண்டிப்பாக உங்களுடைய வீட்டிற்குள் துர் விஷயங்கள் நுழைந்து விட்டதாக அர்த்தம். மாந்த்ரீகத்தால் நீங்கள் கட்டப்பட்டு விட்டீர்கள் அல்லது கட்டப்பட போகிறீர்கள் என்பதை இந்த கனவு அறிவுருத்துகிறது. உங்களுக்கு வேண்டாதவர்கள் உங்கள் மீது இது போன்ற செயல்களில் ஈடுபடும் பொழுது கனவில் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்.

கருவண்டு வீட்டை சுற்றிலும் சுற்றிக் கொண்டே இருக்கும். எப்பொழுதும் கருவண்டு வருவது வழக்கம் தான் ஆனால் அது வந்து உடனே சென்று விடும். ஆனால் வீட்டையே சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கிறது என்றால், அந்த வீட்டில் இருக்கும் முக்கியமான நபர் ஒருவருக்கு ஆபத்து வரப் போவதை அறிவுறுத்துவதாக அறிந்து கொள்ளலாம். கருவண்டு, கருங்காகம் வீட்டிற்குள் நுழைவது நல்லதல்ல!

- Advertisement -

சிலர் மரத்தில் ஆணி அடிப்பதை நாம் பார்த்திருப்போம். இதை மாந்திரீகத்தில் பெரும்பாலும் துர் விஷயங்களுக்காக, துர் விஷயங்களை போக்குவதற்காக செய்வதையும் அறிந்திருப்போம். அதில் அத்தி மரம், ஆலமரம் இந்த ரெண்டு மரத்தில் ஆணி அடிப்பதை நீங்கள் பார்த்து விட்டீர்கள் என்றால், உங்களுக்கு பிரச்சனை ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நமக்கு வர இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்தக்கூடிய அற்புதமான சக்தி படைத்துள்ளதை அறிந்திருப்போம். நமக்கு ஒரு கண்டம் இருக்கிறது என்றால், அதை முதலில் இந்த செல்ல பிராணிகள் ஏற்றுக்கொண்டு விடும். இதனால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிட்டது போல் பலருக்கும் நடக்கும். வீட்டில் பசுக்கள் இருந்தால் அது வீட்டு வாசலில் தலை வைத்து இறக்கும். இப்படி நேர்ந்தால் உங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை அது எடுத்துக் கொண்டது என்பது தான் அர்த்தம். அது போல வீட்டில் வளர்க்கக்கூடிய புறா, ஆடு, மாடு, கோழி, நாய், பூனை போன்றவையும் அப்படித்தான். மாந்திரீகம் வீட்டில் கட்டப்பட்டு விட்டால் வீட்டில் ஒரு புறா கூட தாங்காது! எல்லாமே பறந்து போய்விடும். இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு செய்வினை, ஏவல் போன்றவை நிகழ்ந்திருக்க நிறையவே வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -