இந்த அம்மனை இறுகப் பற்றிக் கொள்கிறவர்களை, எந்த கிரக தோஷமும், துன்பமும் ஒன்றும் செய்து விடாது. இதன் பிறகு உங்கள் வாழ்வில் நேரம் சரியில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.

- Advertisement -

மனிதரின் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் கிரகங்களின் பலன்களை கொண்டே தீர்மானிக்கப் படுகிறது. எந்த ஒரு கிரகமும் எல்லா நேரத்திலும் தீமையை செய்து கொண்டிருக்கும் என்றும் சொல்லி விட முடியாது அதே நேரத்தில் நன்மைகளை மட்டுமே தந்து கொண்டிருக்க முடியும் என்று சொல்ல முடியாது. கிரகங்கள் நன்மை அளிப்பதும் தீமை அளிப்பதும் அவரவர் கர்மவினையை பொறுத்து அமையும். இப்போது அப்படி கிரகங்களின் கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஒரு மனிதன் எந்த கிரகத்தின் பிடியில் இருந்தாலும், கர்ம வினைகளின் பிடியில் இருந்தாலும், எல்லாவற்றிலிருந்தும் வெளி வந்து அவர்களை காக்க தெய்வ சக்தி ஒன்று இருக்க தான் செய்யும். இது போல பிரச்சனைகளில் இருந்து வெளி வர வணங்க வேண்டிய தெய்வம் காளி. இந்த தெய்வத்தை சரணடைந்தால் போதும் எந்த கிரகங்களின் தோஷமும், வினைகளும் உங்களை ஒன்று பாதிக்காது.

- Advertisement -

இந்த கிரகத்தின் தோஷத்தில் இருந்து விலக காளியை எப்படி வணங்க வேண்டும் என்பது இப்போது தெரிந்து கொள்வோம். அதற்கு முக்கியமாக தங்க அரளி பூ தேவை. அதாவது மஞ்சள் நிறத்தில் இருக்கும் அரளிப் பூ . இந்த அரளி பூவை வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் இப்போது செய்யப் போகிறோம்.

இந்த பரிகாரம் செய்ய உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. இந்த தங்க அரளிப் பூவை மாலையாக தொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு ஒரு மஞ்சள் நிற காட்டன் துணியை வாங்கி அதை வெந்நீரில் நனைத்து எடுத்து பிழிந்த பிறகு கொஞ்சம் பன்னீர் கலந்த தண்ணீரில் முக்கி, அதன் பிறகு அந்த துணியை வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துணியில் தான் விளக்கு திரி போட வேண்டும். இத்துடன் மூன்று அகல், வேப்ப எண்ணெய் இவ்வளவு தான் இந்த பரிகாரத்திற்கு தேவையானது.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று காளியம்மன் கோவிலுக்கு சென்று இந்த அரளி பூ மாலையை சாமிக்கு போட கொடுத்து விடுங்கள். நீங்கள் எடுத்துச் சென்று இருக்கும் அகல் விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்த பிறகு விளக்கில் வேப்ப எண்ணெய் ஊற்றி திரி போட்டு மூன்று தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபங்கள் ஒன்றை ஒன்று பார்த்து ஒரே முகமாக எரியும் படி இருக்க வேண்டும். இப்படி 18 வாரங்கள் தொடர்ந்து செய்து வரும் போது உங்களுக்கு எந்த கிரக தோஷம் இருந்தாலும் விலகி விடும்.

பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது வீட்டு விலக்கு ஆகி விட்டால், அது கணக்கில் எடுத்துக் கொள்ள படாது. அதன் பிறகு நீங்கள் தொடர்ந்து விளக்கு போடலாம். ஆண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது மாலையாக தொடுக்க முடியாது போனால், அந்த அரளிப் பூவை அம்மன் சன்னதியில் கொடுத்து விடலாம் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து உங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -