சமையலறையில் புதுசா ஏதாவது தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்களா? இந்த 10 குறிப்புகளையும் கொஞ்சம் தெரிஞ்சு வச்சிக்கோங்க.

kitchen-cockroach
- Advertisement -

சமையலறையில் புதுசு புதுசா நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று பெண்களுக்கு ஆர்வம் இருக்கும். அப்படி ஒரு சில வீட்டு குறிப்புகளையும், சமையல் குறிப்புகளையும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டுக்கு தேவையான பயனுள்ள 10 குறிப்புகள் உங்களுக்காக.

மீதமான சாப்பாடு இருந்தால் அதை வீணாக்காதீர்கள். மிக்ஸியில் போட்டு நன்றாக கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதுடன் தேவையான அளவு கடலை மாவு, பச்சை மிளகாய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, தயிர், சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து தோசை சுட்டு சாப்பிட்டால் மிக மிக ருசியாக இருக்கும்.

- Advertisement -

1 ஸ்பூன் லெமன் ஜூஸில் பச்சரிசி மாவு 1/2 ஸ்பூன், உப்பு 1 சிட்டிகை, மஞ்சள் தூள் 1/2 சிட்டிகை, சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பிரஷ்ஷில் தொட்டு 5 நிமிடங்கள் பற்களை மசாஜ் செய்து இலேசாக துலக்கும்போது, பற்களில் இருக்கும் மஞ்சள் கரை நீங்கும்.

கொஞ்சமாக மஞ்சள்தூள், கொஞ்சமாக தூள் உப்பு, கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை சமையலறையில் மூலைமுடுக்குகளில் சிறிய சிறிய ஓட்டை இருக்கும் இடத்தில் தூவி விட்டால் அங்கு கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் கிருமிகள் செத்துப் போகும். நிறைய தண்ணீர் அடிக்கடி ஊற்றும் இடத்தில் நன்றாக காய்ந்து இருக்கும்போது, இந்த பொடியை தூவி விடுங்கள்.

- Advertisement -

நொச்சி இலையை சமையல் அறையில் ஏதாவது ஒரு இடத்தில் பரப்பி வைத்து விட்டால், கொசுக்கள் வராமல் இருக்கும். குட்டி குட்டி ஈ கொசு பறக்கும் அல்லவா. அந்த தொல்லை குறையும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் வினிகர் 2 ஸ்பூன், யூகலிப்டஸ் ஆயில் 1 ஸ்பூன், சேர்த்து இதை சாதாரண 1/2 கப் தண்ணீருடன் கலந்து சமையலறையில் ஸ்ப்ரே செய்து விட்டால், கரப்பான் பூச்சி தொல்லை இருக்கவே இருக்காது. குறிப்பாக சிங்கிள், சிங்கின் அடியில், சிங்க் தண்ணீர் போகும் ஓட்டையில் கூட இதை செய்து விடுங்கள்.

- Advertisement -

முதலில் அரிசியை கழுவி அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். அதன் பின்பு தண்ணீர் ஊற்றி அரிசி ஊற வைப்பார்கள் அல்லவா. அந்த தண்ணீரை கீழே கொட்டாதீர்கள். அரிசி கழுவிய தண்ணீரை குழந்தைகள் குளிக்கும் தண்ணீரோடு கலந்து, குழந்தைகளை குளிப்பாட்டினால் குழந்தைக்கு இருக்கும் சரும நோய் தீரும். புதியதாக சரும நோய் வராமலும் தடுக்கும். இந்த தண்ணீரில் குழந்தைகளை குளிப்பாட்டுவது ஆரோக்கியத்தையும் கொடுக்கும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

தேனீ குளவி போன்ற பூச்சிகள் கடித்து தடிமனாக தொடங்கினால் அந்த இடத்தில் உடனே சுண்ணாம்பு வைத்துவிடுங்கள். சமையலறையில் இருக்கும் 3 கிராம்பை எடுத்து வாயில் போட்டு கடித்து அந்த உமிழ்நீரை விழுங்க வேண்டும். இதன் மூலம் பூச்சியின் விஷத்தினால் நம்முடைய உடலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

உருளைக்கிழங்கை மசித்து, உருளைக்கிழங்கு மசாலா, உருளைக்கிழங்கு பொரியல், இப்படி ஏதாவது டிஷ் செய்யும் போது அதில் சிறிதளவு ஓமத்தை சேர்த்து செய்தால் நல்ல வாசத்தோடும் இருக்கும். அதே சமயம் வாயு பிரச்சனையும் இருக்காது.

முட்டை மசாலா, முட்டை பொரியல், முட்டை குருமா செய்யும்போது அதில் இறுதியாக கொத்தமல்லி தழைகளை கொஞ்சமாக நசுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது முட்டை நீச்ச வாடை வீசாமல் நல்ல மணமாக இருக்கும்.

பேக்கரியில் இருந்து வாங்கிவந்த கேக், பிரெட், பன், எது இருந்தாலும் ஒரு வாரத்திற்கு மேல் வைத்து சாப்பிடக்கூடாது. பிரிட்ஜில் வைத்துக் கூட பயன்படுத்தக்கூடாது. தூக்கி குப்பையில் போட்டு விடுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு கேடு.

- Advertisement -