எந்த கிழமையில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் தெரியுமா? இந்த கிழமையில் பிறந்தவர்களிடம் கொஞ்சம் உஷாராய் இருப்பது நல்லது.

astro
- Advertisement -

உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கிழமையில் தான் பிறந்துருப்பார்கள். அவர்களின் பிறந்த கிழமைக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரின் குணநலன்கள் மாறுபாடிருக்கும். ஒருவரை புதியதாக சந்திக்கும் பொழுது அவரைப் பற்றி எதுவும் தெரியாமல் பழக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்பொழுது அவர்கள் பிறந்த கிழமை மட்டும் தெரிந்திருந்தால் போதும் அதன் மூலம் அவரின் குணநலன்களை தெரிந்துகொள்ளலாம். வாருங்கள்! எந்த கிழமையில் பிறந்தவர்கள் எவ்வாறான குணம் பெற்று இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.

ஞாயிற்றுக்கிழமை:
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் பத்திரிக்கை, திரைப்படம், அரசியல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்களாகவும், உல்லாச பயணங்கள் செல்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஒரு சிலர் அவசரக்காரர்களாகவும், மற்றவர்களின் பண்புகளை எடை போட்டுப் பார்ப்பதில் சிறந்த வல்லுநர்களாகவும் இருப்பார்கள். எதிர்கால வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள். இந்தக்கிழமையில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதமிருந்து சூரிய பகவானை வழிபட்டு வந்தால் நல்ல வாழ்க்கை அமையும்.

- Advertisement -

திங்கட்கிழமை:
திங்கட்கிழமை பிறந்தவர்கள் கலைத்துறையில் மிகவும் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். நேர் வழியில் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட இவர்கள் அதிகம் செலவு செய்யமாட்டார்கள். நீதி, நேர்மை வழியில் மட்டுமே செயல்படுவார்கள். ஒருவரால் செய்ய முடியாத காரியத்தை கூட அலட்டிக்கொள்ளாமல் எளிதில் செய்து முடிப்பார்கள். இயல்பாகவே அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் இவர்கள் தீர யோசித்த பின்னரே எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவார்கள். இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் திங்கட்கிழமையில் அம்பிகையை வழிபடுவதோடு, பவுர்ணமி விரதத்தை கடைபிடித்து வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

செவ்வாய்க்கிழமை:
செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் வீரமும், விவேகமும் உடையவர்களாகவும், எந்த ஒரு காரியத்தையும் முழுமையாக செய்பவர்களாகவும் இருப்பர். யாரிடம் யோசனை கேட்டாலும், இறுதியில் தான் எடுத்த முடிவினையே செயல்படுத்துவர். நாளை வேண்டும் என்று சேமிக்கும் எண்ணம் இல்லாதவர்கள் இவர்கள். கோபம் காரணமாக இவர்களுக்கு பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். எனினும் எதையும் எதிர்த்து போராடும் இவர்கள் நமக்கும் ஓர் காலம் வரும் என்ற உறுதியுடன் செயல்படுவர். இந்தக் கிழமையில் பிறந்தவார்கள் சஷ்டி விரதம் இருந்து, முருகனை வழிபட்டு வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

- Advertisement -

புதன்கிழமை:
புதன் கிழமை பிறந்தவர்கள் சங்கீதம், இலக்கியம், கலை இவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாகவும், அடிக்கடி திட்டங்களை மாற்றும் பழக்கம் உடையவர்களாகவும் இருப்பர். மிகுந்த புத்தி சாதுர்யத்துடன் இருக்கும் இவர்கள், அடுத்தவர்களுக்கு யோசனை சொல்வதில் வல்லுனராவார்கள். புதுமை விரும்பிகளாக இருந்தாலும், பழமையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரைமுறை வகுத்து வாழ்பவர்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபட்டு வருவது சிறந்ததாகும்.

வியாழக்கிழமை:
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் கூர்மையான அறிவும், எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாகவும், எந்த ஒரு செயலையும் பலமுறை யோசித்து செய்பவர்களாகவும், இருப்பார்கள். கோபப்படும் பொழுது இவர்களை சமாதான படுத்துவது மிகவும் சிரமம். பெரியோர்களின் பேச்சை கேட்டு நடக்கும் இவர்கள் தெய்வ பக்தியும், தேச பக்தியும் உடையவர்களாக இருப்பார்கள். எனவே பொது நலத்தில் புதிய பொறுப்புகள் தானாகவே இவர்களைத் தேடிவரும். இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் வியாழன்தோறும் விரதமிருந்து, குரு பகவானை வழிபட்டு வர நன்மைகளே நடக்கும்.

வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கலை, சினிமா, இலக்கியம், நடனம் போன்றவற்றில் ஆர்வம் உடையவர்கள். மற்றவர்களை கேலி செய்வதில் அலாதி ஆர்வம் கொண்டவர்கள். பெரும்பாலானோர் குறைவில்லா செல்வங்களை பெற்றிருப்பார்கள். உடன் இருப்பவர்கள் இவர்களை கேட்டே முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவார்கள். விஷயங்கள் அனைத்தும் தெரிந்திருந்தாலும் மற்றவர் சொல்லும் பொழுது எதுவுமே தெரியாதது போல் இருப்பார்கள். எந்த செயலிலும் முன் வைத்த காலை பின் வைக்காதவர்கள். இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் லட்சுமியை வழிபடுவதன் மூலம் செல்வ நிலை உயரும்.

சனிக்கிழமை:
புத்தகங்களை அதிகம் படிப்பதில் ஆர்வம் கொண்ட இவர்கள் சான்றோர்களின் சொற்படி நடப்பார்கள். எதிர்காலத்திற்கு வேண்டுமென்று சேமித்து வைக்கும் எண்ணம் இல்லாத இவர்கள் எதற்கும் கலங்க மாட்டார்கள். எப்போதும் பிறருக்கு கட்டளையிடும் சக்தியை பெற்றிருப்பார்கள். தோற்றத்தில் இரக்கமற்றவர்கள் போலிருந்தாலும், இனிய குணம் படைத்தவர்கள். மனதை அடக்கி ஆளும் திறன் படத்த இவர்களுக்கு, நீடித்த நட்பும் கிடையாது, நீடித்த பகையும் இருக்காது. இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் சனிக்கிழமைதோறும் விரதமிருந்து அனுமன், விநாயகர், சனிபகவான் ஆகிய கடவுள்களை வணங்கி வருவது நன்மை அளிக்கும்.

- Advertisement -