நீங்கள் விரைவில் கோடீஸ்வர யோகம் பெறுவதற்கு உங்கள் வீட்டில் இந்த ஒரு பொருள் மட்டும் இருந்தால் போதும்

pachai-karpoor
- Advertisement -

இன்றைய சமுதாயம் பணம் உள்ள மனிதர்களை மட்டும் தான் உயர்ந்தவனாக பார்க்கிறது. பணம் இல்லாதவர்களை சற்றும் மதிப்பதில்லை. எனவே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை சூழ் நிலையை உயர்த்திக் கொள்வதற்காக பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். என்ன தான் பணத்தின் பின்னாடி சென்றாலும் அது எளிதில் கிடைப்பதில்லை. அதற்காக நிறைய துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. சரியான வேலை கிடைத்தால் மட்டுமே நிலையான வருமானம் கிடைக்கும். இப்படி கடின உழைப்பிற்குப் பிறகு கிடைக்கின்ற வருமானம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும் அதாவது நம்மையும் மீறிய சக்தி ஒன்று இருக்கிறது அந்த தெய்வ சக்தியின் அருளும் நமக்கு இருக்க வேண்டும். இப்படி தெய்வத்தின் அருள் கிடைத்து, கோடீஸ்வர யோகம் பெற வீட்டில் பயன்படுத்த வேண்டிய பொருள் என்ன என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

என்னதான் நிலையான வருமானம் கிடைத்தாலும் அது நமது தேவைக்கு போதுமானதாக இருக்க வேண்டும். இப்படி சம்பாதிப்பது அனைத்தும் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சரியாக இருக்குமே தவிர, அவற்றினால் நமது வாழ்க்கை என்பது முன்னேற்ற பாதைக்கு செல்லாது. இவ்வாறு பணம் நமது கையில் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் யோசிப்பது கிடையாது. என்னதான் ஓடிஓடி உழைத்தாலும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும்.

- Advertisement -

அதிஷ்டம் என்று ஒன்று நிச்சயம் நமக்கு இருந்தால் மட்டுமே நமது கடின உழைப்பிற்கும் நல்ல பலன்கிடைக்கும். அவ்வாறு மகாலட்சுமியின் அம்சமான பொருட்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் கோடீஸ்வர யோகத்தை பெற முடியும். வீட்டிற்குள் சுபிட்சத்தை நிலைத்திருக்க வைக்க முடியும். அவ்வாறு நேர்மறை ஆற்றல்களை மிகுதியாக ஈர்க்கக்கூடிய பச்சை கற்பூரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

பச்சைக் கற்பூரத்தை நிலை வாசலில் வைப்பதன் மூலம் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழையாமல் அகற்றவும், நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கவும் உதவுகிறது. அடுத்ததாக ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் சிறிதளவு பச்சை கற்பூரம், ஏலக்காயை எடுத்துக்கொண்டு, அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்திற்கு சந்தன, குங்கும பொட்டு வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு மல்லி பூ அல்லது ரோஜா பூ போன்ற வாசனை மலர்களை வைக்க வேண்டும்.

- Advertisement -

இவற்றை பூஜை அறையில் வைத்து தினமும் விளக்கேற்றும்போது இவற்றிற்கும் தூப ஆராதனை காண்பிக்க வேண்டும். இந்த பச்சை கற்பூரத்தை தினமும் மாற்றிவிட வேண்டும். இதனை எடுத்து தண்ணீரில் கரைய விட்டு விட வேண்டும். பிறகு புதிய பச்சை கற்பூரத்தை வைக்கவேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தை தண்ணீரில் அலசி மஞ்சள், குங்குமம் மற்றும் புதியதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்வினைகள் அழிக்கப்பட்டு, நேர் வினைகள் மட்டுமே நிறைந்திருக்கும். இந்த பச்சை கற்பூரத்தின் ஈர்ப்புத் தன்மை காரணமாக நமது வீட்டிற்குள் அதிர்ஷ்ட யோகம் வந்து விடும். மகாலட்சுமியின் அம்சம் நிரந்தரமாக இருக்கும். சகல சவுபாக்கியங்களும் கிடைத்து விடும். எனவே உங்கள் வருமானம் இரட்டிப்பாகும் அல்லது தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் பணப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து சுக போக வாழ்வு கிடைக்கும்.

- Advertisement -