தங்கள் வாழ்க்கையில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் பிற்காலத்தில் கோடீஸ்வர யோகம் பெறுபவர்கள்.

kodeeswara yogam
- Advertisement -

வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது யாருக்கு தான் பிடிக்காது. அப்படி வசதியான வாழ்க்கையை வாழ்வதற்கு அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்காது. சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். எந்த ஜாதக அமைப்பில் பிறப்பவர்கள் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் பிற்காலத்தில் வசதி வாய்ப்புடன் நன்றாக வாழ்வார்கள் என்று தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் இந்த உலகத்தில் பிறக்கும் பொழுது அவருடைய தாய் தந்தையினர் வசதியாக இருந்தால் அவரும் வசதியான வாழ்க்கையை வாழ்வார். அதே சமயம் அவர்களின் பெற்றோர் ஏழ்மையான சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவர்களும் ஏழ்மையான சூழ்நிலையில் தான் வாழ்வார்கள்.

- Advertisement -

அப்படி வாழ்பவர்கள் தங்களுடைய விடாமுயற்சியாலோ அல்லது அதிர்ஷ்டத்தாலோ கோடீஸ்வரர்களாக ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அனைவரும் அப்படி ஆவார்களா என்று கேட்டால் கண்டிப்பாக முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சிலருக்கு மட்டுமே அந்த கோடீஸ்வர யோகம் என்பது அமையும்.

பொதுவாக சந்திரனுக்கு இரண்டில் சனி இருக்கும் பொழுது ஒருவர் பிறந்திருந்தால் அவர் இளமை காலத்தில் வறுமையாலும், காசு, பணம் இல்லாமலும் கஷ்டப்படுவார்கள். ஆனால் அவரே 30 வயதிற்கு மேல் தன்னுடைய கர்ம வினைகள் அனைத்தையும் தீர்த்து விட்டு வசதியாக வாழ்வதற்கு வாய்ப்புகள் தேடி வரும் என்றும் ஜாதக சாஸ்திரத்தில் கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

அதேபோல் ஏழரை சனி நடக்கும் பொழுது பிறப்பவர்களும் அவர்களுடைய 30 வயதிற்கு மேல் நல்ல வசதி வாய்ப்புடன் சொத்துபத்துடன் வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டும் அல்லாமல் வைகாசி, ஆனி, ஐப்பசி, தை போன்ற மாதங்களில் பிறந்தவர்கள் தங்களுடைய முப்பது வயதை கடந்த பிறகு வீடு, நிலம், வாசல், சொத்து, சுகம் என்று அனைத்து வசதி வாய்ப்புகளுடனும் கோடீஸ்வர யோகம் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: 12 ராசிகளில் ஏமாறுவதற்குகென்றே பிறந்த ஐந்து ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

யார் ஒருவர் மேல் சொன்ன அமைப்பில் பிறந்திருக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பான முறையில் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டாலும் முப்பது வயதை கடந்த பிறகு நல்ல சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் சொத்து சுகம் அனைத்தும் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்பது ஜாதக ரீதியாக கூறப்படுகிறது.

- Advertisement -