உங்கள் வீட்டில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, கோடீஸ்வர யோகம் பெற இந்த சிறப்பு பரிகாரத்தை தவறாமல் செய்து வாருங்கள்

vinayagar-sangu
- Advertisement -

மனிதனின் வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாமல் இருக்க முடியாது. உடனே தீர்ந்துபோகும் சிறிய பிரச்சனை முதல் மலை போல் நிமிர்ந்து நிற்கும் பெரிய பிரச்சினைகள் வரை அன்றாடம் கடந்து கொண்டு தான் இருக்கிறோம். இவற்றை வென்று வாழ்க்கையில் முன்னேறுவது என்பது தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை போராட்டமாக இருக்கிறது. அதிலும் பணப்பற்றாக்குறை காரணமாக உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமையும் இருக்கிறது. இப்படிப்பட்ட சமுதாயத்தில் தன்னை உயர்த்திக்கொள்ள நிச்சயம் மனிதன் உழைக்க வேண்டும். உழைப்பின் மூலம் வருகின்ற ஊதியத்தை பல மடங்காக பெருக்க வேண்டும். இதற்கு புத்திசாலித்தனம், உழைப்பு, முயற்சி மற்றும் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். மற்ற அனைத்தும் இருந்து அதிர்ஷ்டம் இல்லாமல் போன்லும் பணக்காரர்கள் பட்டியலில் நமது பெயர் இடம்பெறாது. அதற்காக இந்த சங்கு பரிகாரத்தை முறையாக செய்து பாருங்கள். நீங்கள் எண்ணிப் பார்க்காத அளவில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வாழ்க்கைப் பயணம் என்பது கற்களும், முட்களும் நிறைந்த பாதையாக தான் இருக்கிறது. இவை அனைத்தையும் கடந்து சென்றால் மட்டுமே பூக்கள் நிறைந்த பாதையை அடைய முடியும். நாம் எந்த அளவிற்கு கடினமாக உழைக்கிறோமோ அதன் பிறகு நமது குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக தமது வாழ்க்கையைத் தொடங்குவார்கள். எனவே நமது குடும்பத்திற்காக நாம் பல நூறு கஷ்டங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு கஷ்டப்பட்டு உழைத்து அந்த வருமானத்தை தக்க வைத்து பல கோடியாக பெருக்குவதற்கு நமது வீட்டில் எப்பொழுதும் ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வேண்டும். அதற்கு நாம் செய்யும் பூஜைகளின் பலன்கள் தான் காரணமாக அமையும். இவ்வாறு அன்றாடம் செய்யும் பூஜையை விட சற்று விசேஷமான பூஜையை செய்து வர கோடீஸ்வர யோகத்தை பெற முடியும்.

அதற்கு முதலில் ஒரு சங்கை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சங்கை பன்னீரில் சுத்தமாகக் கழுவிக் கொண்டு, அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்த வேண்டும். பிறகு ஒரு தாம்பூலத்தட்டு அல்லது பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முழுவதுமாக நெல் வைத்து நிரப்பிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதன் மீது சங்கை வைத்து விட வேண்டும். பிறகு உட்பகுதியில் ஒரு வெற்றிலை பாக்கின் மீது நெய் தடவி அதனை வைத்து விட வேண்டும். பின்னர் சிறிதளவு பச்சை கற்பூரத்தை எடுத்துக் கொண்டு அதனை வெற்றிலை பாக்கின் மீது வைத்து விட வேண்டும். பிறகு இதன் மீது சிறிதளவு நெல் மணிகளை தூவி விட வேண்டும். பின்னர் எப்பொழுதும் போல தீப தூப ஆராதனை காண்பித்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

எமது வீட்டில் உள்ள தீமைகள் அனைத்தும் அழிந்து, தீய பார்வைகள் ஒழிந்து நல்லவை மட்டுமே நிலைத்திருக்க வேண்டும். இனி நடக்கும் அனைத்தும் நன்மையாக நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இதனை செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் துவங்கி கொள்வது நன்மை தரும். வெற்றிலை காய்ந்தவுடன் வெற்றிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல் நெல் காய்ந்து விட்டால் அதையும் மாற்றிக் கொள்ளலாம். இது எப்போதும் உங்கள் பூஜை அறையில் இருக்க கோடீஸ்வர யோகம் கிடைப்பது உறுதியாகும்.

- Advertisement -