கொடுத்த பணத்தை திரும்ப பெற வெறும் ஆறு மொச்சை பயிரை இப்படி பயன்படுத்தினால் போதும். பணத்தை திருப்பி தரவே வேண்டாம் என்று நினைத்தவர் கூட தேடி வந்து திருப்பித் தருவார்கள்.

mochai cash
- Advertisement -

இந்த காலத்தில் பணத்தை சம்பாதிப்பதை விட அதை தக்க வைத்துக் கொள்வதில் தான் பெரிய சாமர்த்தியம் அடங்கி இருக்கிறது. ஏனென்றால் நம்முடன் இருப்பவர்கள் உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் அவசரத்திற்கு உதவி என்று கேட்டு பணத்தை கைமாறாக வாங்கி செல்வார்கள். வாங்கும் போது இருக்கும் நாணயம் அவர்களிடம் திருப்பித் தரும் போது இருக்காது. இப்படியானவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வாங்குவது பெரும் பாடாக இருக்கும்.

இப்படி கொடுத்த பணத்தை திருப்பி பெற முடியாதவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் வாங்கியவர்களே திருப்பி தரக் கூடிய யோகத்தை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கொடுத்த பணத்தை திரும்ப பெற மொச்சை பரிகாரம்:
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று தொடங்குவது சிறப்பு. இந்த பரிகாரம் செய்வதற்கு வெள்ளை நிறத்தில் ஒரு துணி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணி கைகுட்டை போல நான்கு புறமும் சமமாக இருக்க வேண்டும். இதில் ஆறு மொச்சை பயிரு, ஆறு டைமண்ட் கல்கண்டு, ஒரு கைப்பிடி கல் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து வெள்ளை நிற நூலால் மூட்டையாக கட்டி விடுங்கள்.

கட்டிய இந்த மூட்டையை பூஜை அறையில் வைத்து வணங்கிய பிறகு உங்கள் வீட்டின் நிலை வாசலில் உள்புறம் இதை கட்டி தொங்க விட வேண்டும். ஒரு வாரம் கழித்து மறுபடியும் இந்த முடிச்சை எடுத்து துணியை மட்டும் நன்றாக அலசி எடுத்துக் கொள்ளுங்கள். இதன் உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் கால் படாத இடத்தில் போட்டு விட்டு மீண்டும் இதே போல மொச்சை, கல் உப்பு, டைமண்ட் கல்கண்டு வைத்து கட்டி விடுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சு உங்கள் நிலை வாசலில் இருக்கும் போது உங்களிடம் பணத்தை வாங்கி கொடுக்க வேண்டாம் என நினைத்தவர்கள் கூட, உங்களை தேடி வந்து பணத்தை கொடுப்பதற்கான மனநிலையை இந்த பொருட்கள் உருவாக்கும். இந்த முடிச்சை மட்டும் நீங்கள் வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று தவறாது மாற்றி கட்டி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இதை செய்தால் விரைவிலேயே குழந்தை பிறக்குமாம் தெரியுமா? சந்தோஷமாக செய்தால் தான் பலனும் உண்டாம்!

இந்த பரிகாரம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்காக மட்டுமின்றி விற்காத வீடு, நிலம் விற்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு கட்டலாம். அதே போல வீட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு சிக்கலாக இருந்தாலும் அது தீர வேண்டும் என வேண்டிக் கொண்டு கட்டலாம். இந்த மொச்சை பயிர் பரிகாரத்தை தொடர்ந்து செய்து நீங்கள் இழந்த பணத்தை பெற கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -