நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இதை செய்தால் விரைவிலேயே குழந்தை பிறக்குமாம் தெரியுமா? சந்தோஷமாக செய்தால் தான் பலனும் உண்டாம்!

- Advertisement -

இன்று இருக்கும் புதுமண தம்பதிகளின் மிகப்பெரிய பிரச்சனை நாலைந்து மாதம் ஆனாலே விசேஷம் ஏதும் இல்லையா? என்று கேட்பது தான். மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப மனிதனுடைய உடல் ஆரோக்கியமும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதில் குழந்தை பேறும் ஒன்று. பத்தில் ஒருவருக்கு குழந்தை பாக்கியத்தில் தடைகள் ஏற்படுகிறது. எனவே இன்று இருக்கும் புதுமண தம்பதிகள் அவர்களாகவே குழந்தை வரத்தை தள்ளி போடாமல் இருப்பது தான் நல்லது. இத்தடைகளை அகற்றக் கூடிய எளிய பரிகாரம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆன்மீகத்தில் மிக எளிய பரிகாரங்களை செய்து பல்வேறு மகா பலன்களை அடைப்பவர்கள் ஏராளமானோர் உண்டு. அந்த வரிசையில் குழந்தை பாக்கியத்திற்காக நீண்ட வருடங்கள் காத்திருப்பவர்கள் இந்த பரிகாரத்தை மன நிறைவுடன் செய்தால் நிச்சயம் அவர்களுக்கு விரைவாகவே மழலை செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

உங்களுக்கு பிடித்தமான இஷ்ட தெய்வத்தின் உடைய கோவிலில் இருக்கும் தல விருட்சத்திற்கு செல்ல வேண்டும். எல்லோருக்கும் எல்லா தெய்வத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதில்லை. ஒரு சில தெய்வத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். அந்த கோவிலில் இருக்கக்கூடிய விருச்சத்தில் பல்வேறு சாஸ்திரங்களும், சடங்குகளும் நடைபெறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

சிலர் காசு கொடுத்து மரத் தொட்டில்களை வாங்கி ஸ்தல விருட்சத்தில் கட்டி வைப்பார்கள். சிலர் விரைவில் திருமண பாக்கியம் கைகூடி வருவதற்கு மாங்கல்ய கைற்றை கட்டி வைப்பதையும் நாம் பார்த்திருப்போம். அப்படி அல்லாமல் இந்த ஒரு பரிகாரம் சற்று வித்தியாசமாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீங்கள் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் புடவையிலிருந்து முந்தானை தலைப்பை கிழித்து அதில் தொட்டில் கட்ட வேண்டும்.

- Advertisement -

விருட்சத்தில் தொட்டில் போல இந்த துணியை கட்டி அதில் கல் ஒன்றை வைக்க வேண்டும். அருகில் கிடக்கும் ஏதாவது ஒரு பொருத்தமான கல் ஒன்றை கையில் எடுங்கள். அதை நன்கு கழுவி விட்டு தொட்டிலில் வைத்து கொள்ள வேண்டும். அக்கல்லை குழந்தையாக பாவித்து தொட்டிலை ஆட்டி விட வேண்டும். மூன்று முறை தொட்டிலை ஆட்டிய பிறகு மனதார ஸ்தல விருட்சத்தை வணங்கி வேண்டி கொள்ள வேண்டும். ‘இவ்வளவு வருஷங்கள் எனக்கு குழந்தை இல்லை, சீக்கிரமே எனக்கு மழலை செல்வத்தை கொடுங்கள்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

புதிய துணியை கிழிக்கிறோமே என்று சங்கடப்படக் கூடாது என்பது தான் இதில் இருக்கும் முக்கிய அம்சமே ஆகும். மன நிறைவுடன் சந்தோஷமாக இந்த விஷயத்தை நீங்கள் செய்து உங்களுடைய இஷ்ட தெய்வத்தை வணங்கி வேண்டிக் கொண்டால் நிச்சயம் விரைவிலையே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அக்கால நம்பிக்கையாக இருந்து வருகிறது. வருடக்கணக்கில் இதற்காக அலைந்து திரிந்து நம்பிக்கை இல்லாதவர்கள் கடைசியாக இந்த முயற்சியை கையில் எடுத்து பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம் செய்ததற்கு பலன் கிடைத்தால் அக்கோவிலில் அன்னதானம் செய்வதாக வேண்டிக் கொள்ளுங்கள். தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் ஆகும். ஒருவருடைய பசியை ஆற்றுவது என்பது பல கோடி புண்ணியத்தை பெற்று தரக்கூடியது. இத்தகைய அன்னதானத்தை செய்வதாக மனதார வேண்டிக் கொண்டு உங்கள் கோரிக்கை நிறைவேறியவுடன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

- Advertisement -