கொடுத்த பணம் திரும்ப கிடைக்க அத்தி இலை தீபம்

money athi leaf
- Advertisement -

பணத்தால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டு இருக்கிறது. பணம் இல்லாமல் இந்த உலகத்தில் நம்மால் எதையும் பெற முடியாது. செய்ய முடியாது. ஏன் உயிர் வாழ கூட முடியாது. அப்படிப்பட்ட பணத்தை நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்து ஏதாவது ஒரு சூழ்நிலையில் தெரிந்தவர்களுக்கு அவர்களின் கஷ்ட காலத்திற்கு உதவ வேண்டும் என்ற காரணத்தினால் கொடுத்துவிட்டு பிறகு அந்த பணம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் எந்த முறையில் தீபமேற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கொடுத்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்றாலும் அல்லது நம்முடைய சொந்த வீடு இடம் விற்று அதன் மூலம் வரக்கூடிய பணத்தை வைத்து வீட்டில் ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆக இருந்தாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நமக்கு சொந்தமான பணம் நம்மை வந்து சேர்வதற்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் விலக்கக்கூடிய அற்புதமான வழிபாடாக இந்த வழிபாடு திகழ்கிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை புதன்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். காலை ஆறு முப்பது மணிக்குள் செய்துவிட வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஆறு அத்தி இலைகள் தேவைப்படும். இதே போல் ஆறு அகல் விளக்குகள் தேவைப்படும். எப்போதும் போல் புதன்கிழமை காலையில் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி பூஜைகளை முடித்த பிறகு இந்த ஆறு அத்தி இலைகளை சுத்தம் செய்து பூஜையறையில் வரிசையாக வைத்து அதற்கு மேல் ஆறு அகல் விளக்குகளை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு ஒரு பேப்பரில் யாரிடமிருந்து பணம் வர வேண்டுமோ அவர்களின் பெயரை எழுதி எவ்வளவு தொகை வரவேண்டுமோ அந்த தொகையையும் எழுதி அதை மடித்து அந்த தீபங்களுக்கு அருகில் வைத்து விட வேண்டும். இந்த தீபத்தை மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஏற்றுவது மிகவும் சிறப்பு மிகுந்தது. பிறகு மகாலட்சுமி தாயாரின் மந்திரமான “ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் மஹாலட்சுமியே நமோ நமஸ்துதே” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக நமக்கு யார் பணம் தர வேண்டுமோ அவர்களின் பெயரை 21 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்துவிட்டு மனதார வழிபாடு மேற்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு யார் பணம் தர வேண்டுமோ அவர்களுக்கு பணவரவு ஏற்பட்டு அதன் மூலமாக அவர்களை நம்மை தேடி வந்து நம்மிடம் வாங்கிய பணத்தை திரும்பி தருவார்கள். யாரையும் கஷ்டப்படுத்தாமல் யாரையும் நிந்திக்காமல் நாம் கொடுத்த பணம் நம்மிடம் திரும்பி வந்து சேர்வதற்குரிய ஒரு எளிய வழிபாடு முறையாக தான் இந்த வழிபாடு திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: தொடரும் துன்பங்கள் தொடராமல் இருக்க பரிகாரம்

இந்த தீபத்தை முழு நம்பிக்கையுடன் ஏற்றி வழிபட்டு நம்முடைய வேண்டுதலை முன்வைக்கும் பொழுது கண்டிப்பாக முறையில் நாம் மட்டுமல்லாமல் நம்மிடம் இருந்து பணம் வாங்கியவர்களும் நல்ல வாழ்வை பெற முடியும்.

- Advertisement -