கொடுத்த பணத்தை திரும்ப பெற உதவும் பரிகாரம்.

secret pariharam
- Advertisement -

கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு பணத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைக்கக்கூடிய பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அவ்வாறு சேமித்து வைத்த பணத்தை நாம் முறையாக கையாளும் பொழுது தான் நம்முடைய வாழ்க்கை முன்னேற்ற பாதைக்கு செல்லும். அப்படி செய்யாமல் பிறருக்கு உதவி செய்யும் நல்ல எண்ணத்தில் சேமித்து வைத்த பணத்தை கொடுத்து பிறகு அதை திரும்ப பெற முடியாமல் கஷ்டப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் அப்படி நம்பி கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு ரகசியமாக செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை நன்றாக பழகியவர்கள் கஷ்டம் என்று வந்து கேட்கும் பொழுது கொடுத்து உதவும் நல்ல எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அப்படி கொடுத்து உதவிய பணத்தை திரும்பி தராத பட்சத்தில் தான் மறுபடியும் யாராவது கஷ்டம் என்று வந்து கேட்கும்பொழுது பணத்தை கொடுக்க யோசிப்பார்கள். சிலரோ வீட்டில் இருக்கும் நபர்களுக்கு தெரியாமல் ரகசியமாக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை கொடுப்பார்கள்.

- Advertisement -

வட்டி கிடைத்தால் அதன் மூலமாக ஏதாவது பொருட்களை வாங்க முடியும் ஒரு வருமானத்தை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதை செய்வார்கள். ஆனால் வாங்கியவர்களோ வட்டியும் கொடுக்காமல் அசலையும் திருப்பிக் கொடுக்காமல் இருக்கும் சூழ்நிலையில் தான் கொடுத்த பணத்தை வீட்டில் இருப்பவர்களிடமும் சொல்ல முடியாமல் கொடுத்தவரிடம் இருந்தும் வாங்க முடியாமல் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகி விடுவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே அவர்கள் கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியும். இதற்கு நமக்கு தேவைப்படுவது மூன்றே மூன்று பொருட்கள் தான். இதை வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த மூன்று கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமையில் செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சைக் கற்பூரத்தை வைக்க வேண்டும். சிறு துண்டுகளாக இருக்கும் பட்சத்தில் மூன்று நான்கு துண்டுகளை வைக்கலாம். இப்பொழுது இந்த பச்சை கற்பூரத்தை தீப்பெட்டியை பயன்படுத்தி பற்ற வைக்க வேண்டும். பச்சை கற்பூரம் எரிய ஆரம்பித்தவுடன் ஒரு எவர்சில்வர் தட்டை எடுத்து அந்த பச்சை கற்பூரத்தின் ஆவி தட்டில் படியுமாறு தட்டு முழுவதும் காட்ட வேண்டும்.

அதாவது பச்சை கற்பூரத்தில் இருந்து வரும் புகையானது தட்டில் பட்டு தட்டு கருமை நிறத்தை அடைய வேண்டும். இவ்வாறு தட்டு முழுவதும் கருமை நிறம் ஆன பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பரையோ அல்லது வெள்ளை நிற துணியையோ எடுத்துக் கொள்ள வேண்டும். தெற்கு முகமாக பார்த்து அமர்ந்து நம்முடைய நடுவிரலை பயன்படுத்தி அந்த கரியை தொட்டு நம்மிடமிருந்து யார் பணம் வாங்கினார்களோ அவர்களின் பெயரை எழுத வேண்டும் பிறகு எந்த எவ்வளவு பணம் வாங்கி இருக்கிறார்களோ அதையும் எழுத வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த பேப்பரையோ அல்லது துணியையோ நான்காக மடித்து பூஜை அறையில் இருக்கும் விநாயகரின் புகைப்படத்திற்கு கீழோ அல்லது சிலைக்கு கீழே வைத்து விட வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்த பரிகாரத்தை யாரிடமும் கூறக்கூடாது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: புத்திர பாக்கியம் விரைவில் பெறுவதற்கு விநாயகரை இந்த முறையில் வழிபட வேண்டும்.

இந்த தாந்திரீக பரிகாரத்தை நாம் செய்தால் நம்மிடம் யார் கடன் வாங்கினார்களோ அவர்கள் திரும்பவும் வந்து வாங்கிய தொகையை திருப்பி தந்து விடுவார்கள்.

- Advertisement -