கொடுத்த பணம் திரும்ப கிடைக்க விநாயகர் வழிபாடு

vinayagar valipadu
- Advertisement -

அனுதினமும் கஷ்டப்பட்டு உழைத்து சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை பிறர் உதவி என்று கேட்கும் பொழுது எந்தவித தயக்கமும் இன்றி கொடுத்து உதவும் பலரும் அந்த பணத்தை திரும்பப் பெற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். வட்டிக்காக கொடுத்தாலும் சரி, வட்டி இல்லாமல் கொடுத்தாலும் சரி கொடுத்த பணம் திரும்ப நம்மிடம் வந்து சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்த முறையில் விநாயகரை வழிபட கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முழு முதல் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானிடம் நாம் பல வேண்டுதல்களை வைத்து வழிபாடு செய்கிறோம். எந்த வேண்டுதலை வைத்து வழிபாடு செய்தாலும் அந்த வேண்டுதலை நிறைவேற்றி தரக்கூடிய அற்புதமான கடவுளாக தான் விநாயகப் பெருமான் திகழ்கிறார். நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்றவாறு சில வழிமுறைகளை பின்பற்றி விநாயகரை வழிபடும் பொழுது அதன் பலனை நம்மால் முழுமையாக பெற முடியும். அந்த வகையில் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் அமாவாசை கழித்து வரும் தசமி திதி அன்றுதான் செய்ய வேண்டும். அன்றைய தினம் காலையிலேயே நாட்டு மருந்து கடைகளில் இருந்து நவதானிய செட்டை வாங்கி வரவேண்டும். பிறகு வீட்டில் ஒரு தாம்பாளத்தை எடுத்து அந்த தாம்பாளத்தின் மேல் இந்த நவதானியத்தை கொட்டி பரப்பி விட வேண்டும். பிறகு அதற்கு மேல் நம்மிடம் யார் பணம் வாங்கினார்களோ யார் நம்முடைய பணத்தை திரும்ப தராமல் நம்மை கஷ்டப்படுத்துகிறார்களோ அவர்களுடைய பெயரை எழுத வேண்டும். இதில் ஒரு பெயரை தான் எழுத வேண்டும். நிறைய பெயர்களை எழுதக்கூடாது. யாரால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதோ அவர்களின் பெயரை மட்டும் எழுத வேண்டும்.

இப்படி எழுதிய பிறகு இந்த நவதானியத்தின் மேல் நம் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகரின் சிலையை வைக்க வேண்டும். பிறகு விநாயகருக்கு கற்பூர தீப ஆராதனை காட்டி நம்முடைய வேண்டுதலை மனதார அவரிடம் கூற வேண்டும். தினமும் வீட்டில் விளக்கேற்றும் பொழுது இந்த விநாயகரையும் சேர்த்து நாம் வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை செய்த பிறகு வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று விநாயகப் பெருமாளுக்கு கற்பூர தீப தூப ஆராதனை காட்டிவிட்டு அவருக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை சமர்ப்பித்து விட்டு அவரை பழைய இடத்திலேயே வைத்து விட வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த நவதானியங்களை எடுத்து வந்து எறும்பு புற்று இருக்கும் இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று தேய்பிறை தசமி திதியில் வழிபாடு செய்வதன் மூலம் நம்மிடம் யார் கடன் வாங்கி பணத்தை திரும்பத் தராமல் கஷ்டப்படுத்துகிறார்களோ அவர்களே திரும்ப வந்து நம்முடைய பணத்தை தந்து விடுவார்கள். இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் மூன்று தசமி திதிகளிலும் ஒரே நபரின் பெயரை மட்டும் தான் எழுத வேண்டும். மாற்றி மாற்றி எழுதக்கூடாது. அவர் பணத்தை திரும்ப தந்த பிறகு விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து நெய்வேத்தியம் வைத்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீடு கோவிலாக மாற பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய பணம் திரும்ப அவர்களிடம் வந்து சேரும்.

- Advertisement -