வீடு கோவிலாக மாற பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

mahalashmi3
- Advertisement -

இன்று நாம் பார்க்கப் போகும் பரிகாரம் எல்லா பெண்களும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நம்மில் பெரும்பான்மையானவர்கள் வீட்டில் இந்த பிரச்சனை இருக்கு. என்னுடைய கணவர் வெளி ஆட்களிடம் எல்லாம் நன்றாகத் தான் பேசுவார் பழகுவார். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த உடன் அவருடைய சுபாவம் மாறிவிடும். என்னுடைய மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றால் நல்லபடியாகத்தான் நடந்து கொள்கிறாள்.

ஆனால் வீட்டிற்குள் வந்தால் அவளுடைய சுபாவம் மாறிவிடும். பத்ரகாளியாக மாறிவிடுகின்றாள். அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. இப்படி எல்லாம் சில கணவருக்கும் பிரச்சினை இருக்கும், சில மாணவிகளுக்கும் பிரச்சனை இருக்கும். குடும்பத்தோடு எங்கேயாவது கிளம்பி சுற்றுலா சென்றால் கூட, சந்தோஷமாக போவார்கள். வெளியில் எல்லாம் சந்தோஷமாகத்தான் இருப்பாங்க. ஆனால், வீடு திரும்பியவுடன் சண்டை ஆரம்பித்து விடும்.

- Advertisement -

இதற்கெல்லாம் என்ன காரணம். வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி. வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, முதலில் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை எல்லாம், பாசிட்டிவ் எனர்ஜியாக மாற்ற வேண்டும். பாசிட்டிவ் எனர்ஜியை வீட்டிற்கு கொண்டு வர, வீடு முழுவதும் சந்தோஷம் நிறைவாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய ஒரு சில ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

முதல் விஷயம் வீட்டிற்குள் நுழைபவர்களுடைய நெகட்டிவ் எனர்ஜி நிலை வாசல் படியிலேயே விடுபட வேண்டும். அதற்கு என்ன செய்வது. ஒரு சின்ன கண்ணாடி பௌலில் நிரம்ப கல் உப்பு கொட்டிடுங்க. அது மேலே ஒரு விரலி மஞ்சள் வையுங்கள். அந்தக் கல்லுப்பின் மேலே மூன்று மிளகு, சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு வைத்து, நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

கீழே வைத்தால் கொட்டி விடும் என்ற பயம் இருந்தால் ஒரு மனப்பலகையின் மீதோ, ஒரு ஸ்டூலின் மீதோ இதை வைக்கலாம். அவ்வளவுதான். வீட்டிற்குள் நுழைப்பவர்களுடைய நெகட்டிவ் எனர்ஜியை இந்த கல்லுப்பு மஞ்சள் மிளகு ஈர்த்க்கொள்ளும். வீட்டிற்குள் நுழைபவர்கள் பாசிட்டிவ் எனர்ஜியோடு நுழைவார்கள். வியாழக்கிழமை பௌலில் இருக்கும் பொருளை அப்படியே தண்ணீரில் கொட்டி கரைத்து விட்டு மீண்டும் புதுசாக கல் உப்பு வைக்கவும். இது முதல் பரிகாரம்.

இரண்டாவது, வீடு முழுவதும் பச்சை கற்பூரத்தின் வாசம் நிறைவாக இருக்க வேண்டும். ஒரு சின்ன கிண்ணத்தில் பச்சை கற்பூரத்தை தூள் செய்து போட்டு, வீட்டில் ஆங்காங்கே எல்லா இடத்திலும் வச்சிருங்க. இது உங்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்துக் கொண்டே இருக்கும் இது இரண்டாவது பரிகாரம்.

- Advertisement -

தினமும் வாசல் தெளித்து கோலம் போடக் கூடிய வழக்கம் எல்லார் வீட்டிலும் பெண்கள் தான் செய்வார்கள். அந்த வாசல் தெளிக்கும் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு கலந்து நிலை வாசலுக்கு தண்ணீர் தெளித்து கோலம் போடுங்கள். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வம் வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: குபேரர் அருள் பெற வழிபாடு

இவ்வளவுதான் இதை செய்து வந்தாலே போதும் உங்களுடைய வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரித்து விடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். வீட்டிற்குள் வருபவர்கள் கோபத்தோடு வந்து எறிந்து எறிந்து விழ மாட்டார்கள். உங்கள் குடும்பம் கோவிலாக மாறிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -