கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க பைரவர் வழிபாடு.

bhairavar valipadu
- Advertisement -

ஒருவர் கடனை வாங்கினால் அந்த கடனால் அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதே போல் தான் ஒரு சிலருக்கு கடனை கொடுப்பதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும். கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்காக பல போராட்டங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கால பைரவரை இந்த நாளில் இப்படி வழிபட்டால் கொடுத்த பணமும் நகையும் திரும்ப வந்து சேரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நமக்கு ஏதாவது ஒரு சூழ்நிலையில் கெடுதல் நடந்து விட்டால் கெட்ட நேரம் அதான் இப்படி மாட்டிக் கொண்டோம் என்று புலம்புவோம். அந்த கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றுவதற்கு நமக்கு உதவி புரியும் தெய்வம் தான் கால பைரவர். அதிலும் குறிப்பாக கடன் மற்றும் இழந்த பொருட்களை மீட்பதற்கு காலபைரவர் பெரிதும் உதவி செய்கிறார்.

- Advertisement -

தொடர்ந்து 6 சனிக்கிழமைகள் கால பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் நம்மிடம் கடன் வாங்கியவர்களே நம்மை தேடி வந்து வாங்கிய பொருளையும் பணத்தையும் திரும்ப தருவார்கள். அப்படி வழிப்பட வேண்டிய முறையைப் பற்றி பபார்ப்போம்.

சனிக்கிழமை அன்று அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வீற்றிருக்கும் கால பைரவருக்கு முன்பாக 6 அகல் விளக்குகளை வைக்க வேண்டும். இந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட வேண்டும். பிறகு அந்த விளக்கிற்கு முன்பாக வெற்றிலையை வைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு வாழ இலையை எப்படி வைப்போம்? அதே பக்குவத்தில் வெற்றிலையை வைத்து அந்த வெற்றிலையின் நடுவில் மஞ்சளை வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு மஞ்சளுக்கு மேல் கொட்டை பாக்கை வைக்க வேண்டும். கொட்டை பாக்கிற்கு மேல் தாமரை மலரின் காம்பை எடுத்துவிட்டு வைக்க வேண்டும். அதாவது வெற்றிலை அதற்கு மேல் மஞ்சள் அதற்கு மேல் பாக்கு அதற்கு மேல் தாமரை பூ இந்த வகையில் வைக்க வேண்டும். தாமரைப்பூ வெள்ளை அல்லது ரோஸ் போன்ற எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒவ்வொரு விளக்கிற்கு முன்பாகவும் இவ்வாறு வைக்க வேண்டும் அதாவது ஆறு விளக்குகளுக்கு முன்பாக ஆறு வெற்றிலைகள் மஞ்சள் கொட்டை பாக்கு ஆறு தாமரை பூ என்று வைக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றிய பிறகு நமக்கு யார் பணமோ நகையோ தர வேண்டுமோ அவர்களின் பெயரை மனதிற்குள் நினைத்து அவர்கள் விரைவிலேயே என்னிடம் வாங்கிய கடனை திருப்பி தர வேண்டும் என்று மனதார கால பைரவரை வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் நபர்களையும் கொடுக்க வைப்பார் கால பைரவர். மேலும் ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தவர்கள் மனதிலும் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி நம்முடைய பணத்தை நம்மிடம் திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பார்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டால் பணம் தாராளமாக வந்து சேரும்.

காலபைரவரை முழுமையாக நம்பி சனிக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை நாம் மேற்கொண்டு கொடுத்த பணத்தையும் நகையையும் திரும்பப் பெறுவோம்.

- Advertisement -