இந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டால் பணம் தாராளமாக வந்து சேரும்.

money
- Advertisement -

பணம் பத்தும் செய்யும். பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் பழ மொழிகளை நம் வாழ்நாளில் கேட்டிருப்போம். ரசித்திருப்போம். அதே சூழ்நிலையில் தான் நாமும் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. எந்த ரூபத்தில் பணம் வருகிறது என்பது முக்கியமில்லை எந்த அளவிற்கு பணம் வருகிறது என்பதுதான் முக்கியம் என்ற சூழ்நிலையும் இன்றைய காலகட்டத்தில் உருவாகிவிட்டது. ஆனால் நியாயமான முறையில் நாம் சம்பாதிக்கும் பணமே நம்மிடம் நிலையாக இருக்கும் என்பதை யாரும் கருத்தில் கொள்வதில்லை. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பல வழிகள் பணத்தை சேர்ப்பதற்கு எந்த பொருளை தண்ணீரில் போட்டு பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பணம் என்பது மகாலட்சுமியின் அம்சம் என்று கூறப்படுகிறது. அதே போல் கிரகங்கள் என்று பார்க்கும் பொழுது சுக்கிரனின் அம்சமாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை நாம் சம்பாதிப்பதற்கு நமக்கு படிப்பும், வேலையும், தொழிலும் தேவை என்றாலும் அதையும் மீறி மகாலட்சுமியின் அருளும் சுக்கிரனின் அம்சமும் இருந்தால்தான் பணம் நம்மிடம் சேரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

எத்தனையோ பேர் பல வழிகளில் தொழில்களை செய்தாலும் அவர்களால் பணத்தை ஈட்ட முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். அதே போல் தான் வேலைக்கு சேரும் அளவிற்கு புத்தி கூர்மை இருப்பவர்களால் அந்த வேலையில் நிலையாக இருந்து சம்பாதிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு பொருளை தண்ணீரில் தினமும் போட்டு வந்தாலே அவர்களுக்கு இருக்கக்கூடிய பண தடைகள் அனைத்தும் நீங்கி பணம் வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். மேலும் வீட்டில் வடகிழக்கு மூலையே இதற்கு மிகவும் பொருத்தமான இடமாக கருதப்படுகிறது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கண்ணாடி பாட்டில் நிறைய தண்ணீர் தேவைப்படும். கண்ணாடி பாட்டில் நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்து வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும். பிறகு நம்முடைய கட்டைவிரல் மற்றும் சுண்டு விரலை பயன்படுத்தி ஒரே ஒரு வெள்ளை மொச்சையை எடுத்து அந்த தண்ணீரில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தினமும் ஒவ்வொரு மொச்சையாக ஏழு நாட்களுக்கு மொச்சையை போட்டு விட வேண்டும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரும் பொழுது இந்த பாட்டிலில் இருக்கும் தண்ணீரை துளசிச் செடியில் ஊற்றிவிட்டு உள்ளே இருக்கும் மொச்சைகள் அனைத்தையும் எடுத்து பறவைகளுக்கு தானமாக வைத்து விட வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து பரிகாரத்தை மேற்கொள்ளும் பொழுது சுக்கிர பகவான் மற்றும் மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டிற்குள் எந்த வித தீய சக்திகளும் நுழையாமல் இருக்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்.

இந்த எளிமையான பரிகாரத்தை நாமும் நம் இல்லங்களில் செய்து நமக்கு இருக்கக் கூடிய பணத்தடைகள் அனைத்தும் நீங்கி பணம் வருவதற்குரிய வாய்ப்பை பெறுவோம்.

- Advertisement -