பணத்தைப் பிறரிடம் கொடுத்து ஏமாந்து விட்டீர்களா? எப்படி திரும்ப பெறுவது என்று தெரியாமல் கஷ்டப்படுகிறீர்களா? எலுமிச்சம் பழத்தை வைத்து இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து பாருங்கள். கடன் வாங்கியவர்களே உங்களை தேடி வந்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பார்கள்.

lemon money giving sad person
- Advertisement -

கடன் கொடுத்தாலும் பிரச்சினை தான். கடன் வாங்கினாலும் பிரச்சினைதான் கடன் என்ற ஒன்று நம் வாழ்க்கையில் வந்துவிட்டால் நிம்மதி இழந்து, சந்தோஷம் இழந்து, நமக்கு பிரச்சினைகள் தான் அதிகரிக்கும். சில பேருக்கு மட்டும் தான் கொடுத்த தொகை மறுபடியும் திரும்ப கிடைக்கும். பல பேர் நம்பி கொடுத்த பணத்தை ஏமாந்து விட்டு தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள். எப்படி அவர்களிடமிருந்து திரும்ப பணத்தை பெறுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி போய் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து எப்படி பரிகாரம் செய்தால் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

உலகத்தை ஆட்டிப்படைக்க கூடியது சக்தி வாய்ந்தது பணம். அந்த பணத்தை சம்பாதிக்க பல வழிகள் இருந்தாலும் சிலரோ பணத்தை பிறரிடம் இருந்து ஏமாற்றி வாங்குவதிலேயே குறியாக இருப்பார்கள். அவ்வாறு ஏமாற்றம் ஏற்படும் சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் கஷ்டப்படும் நபர்கள் இந்த பரிகாரத்தை மேற்கொண்டால் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் செய்வது மிகவும் எளிமை தான். ஆனால் முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பரிகாரத்தை நாம் செய்து வந்தால் நாம் யாரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து போனோமோ அவர்களே நம்மை தேடி வந்து திரும்பவும் பணத்தை நம்மிடம் ஒப்படைப்பார்கள்.

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் தொடங்க வேண்டும். காலையில் எழுந்து நீராடி முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு எலுமிச்சம் பழத்தை எந்தவித புள்ளியும் இல்லாமல் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மா இலை ஒன்று தேவைப்படும். அடுத்ததாக நமக்கு மஞ்சள் பொடி தேவைப்படும்.

- Advertisement -

நம்முடைய முன்னோர்களையும், குருமார்களையும், குலதெய்வத்தையும் மனதார நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு மா இலையில் யார் பணத்தை திரும்பத் தர வேண்டுமோ அவரின் பெயரை மஞ்சளால் எழுத வேண்டும். பிறகு எலுமிச்சம் பழத்தை அதன் மேல் வைக்க வேண்டும்.

இவ்வாறு நாம் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். நான்காவது நாள் நாம் பரிகாரம் செய்து அனைத்து பொருட்களையும் ஓடுகின்ற நீரில் விட்டு விட வேண்டும். இவ்வாறு நாம் யாரை நினைத்து இந்த பரிகாரத்தை செய்கிறோமோ அவரே நம்மை தேடி வந்து நம் பணத்தை திரும்பத் தந்து விடுவார். அல்லது அதற்கு சாதகமான, சமூகமான செய்திகள் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டத்துக்கு மேல் கஷ்டப்பட்டு நொந்து நூலாகி போய் விட்டீர்களா? உங்கள் கஷ்டங்களை தீர்ப்பதற்கு இந்த ஒரு பொருளை வைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து பாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் விலகி நல்ல காலம் பிறந்து விடும்.

இந்த எளிய பரிகாரத்தை செய்து கொடுத்த பணத்தை திரும்ப பெற்று நிம்மதியுடன் வாழலாம்.

- Advertisement -