உங்களிடம் பணத்தை வாங்கி கொண்டு ஊரை விட்டு ஓடியவரும் தேடி வந்து பணத்தை திருப்பி தர வைக்க ஒரு கைப்பிடி கருப்பு உளுந்து இருந்தால் இப்படி பயன்படுத்துங்கள் போதும்.

panam ulunthu
- Advertisement -

இப்போதெல்லாம் கடன் வாங்கியவர்களை விட கடனை கொடுத்தவர்கள் தான் அதிகம் பயப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. வாங்கும் போது என்னவோ பவ்யமாக கேட்டு வாங்கி செல்வார்கள். ஆனால் திருப்பி கேட்கும் பொழுது அவர்கள் பேசும் விதமே வேறு மாதிரி இருக்கும். எல்லோரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் இப்படித் தான் இருக்கிறார்கள். இப்படி நம்மிடம் பணத்தை வாங்கி விட்டு தராமல் ஏமாற்றுபவர்களும் தேடி வந்து நம்மிடம் பணத்தை தர வைக்கும் அற்புத பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த பரிகாரம் செய்வதற்கு முன்பு முதலில் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது யாருக்காவது அவசர தேவைக்கு நாம் பணத்தை கைமாறாக கொடுத்த நியாயமான பணத்தை திரும்ப பெற தான் இந்த பரிகாரம் பயன் அளிக்கும். வேறு விதத்தில் நீங்கள் பணத்தை இன்னொருவரிடம் இருந்து வாங்க வேண்டும் என நினைத்தால் அது நிச்சயம் பலன் அளிக்காது. எந்த பரிகாரத்திலும் நியாயம் என்பது நம்மிடம் இருந்தால் மட்டுமே அதற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

கொடுத்த பணம் திரும்ப வர:
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு கருப்பு உளுந்து (இதற்கு உடைத்த உளுந்து உடைக்காத உளுந்து எது வேண்டுமானாலும் வாங்கி கொள்ளுங்கள்) ஒரு சின்ன மண் குடுவை இவை இரண்டும் தேவை. இதை பரிகாரம் செய்வதற்கு முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று காலையில் செய்து விட வேண்டும். சனிக் கிழமை காலை உங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்து விட்டு உங்கள் குலதெய்வம் இஸ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு விளக்கை பார்த்த படி நீங்கள் சப்பனமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு கைப்பிடி கருப்பு உளுந்தை வலது கையில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த கையை இடது கை வைத்து மூடி கொள்ளுங்கள். (வலது கையில் கருப்பு உளுந்து வைத்து உங்களின் வலது கால் தொடையின் மீது கைகளை வைத்து இடது கையை கொண்டு உளுந்து இருக்கும் வலது கையை மூடி வைத்துக் கொள்ள வேண்டும்).

இப்போது கண்களை மூடி உங்களிடம் பணத்தை வாங்கிய நபரின் பெயரை சொல்லி எவ்வளவு பணம் வாங்கினார் என்பதையும் விரைவில் அது திரும்ப வர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த உளுந்தை உங்கள் முன்னிற்கும் மண் குடுவையில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு மண் குடுவையில் நான்கு சொட்டு சுத்தமான தண்ணீரை விட்டு அந்த குடுவையை பூஜையறையில் வைத்து விடுங்கள். இதே போல் 11 நாட்கள் தொடர்ந்து செய்த பிறகு 11வது நாள் இந்த உளுந்தை ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும். இதற்குள்ளாக இந்த கருப்பு உளுந்துகள் முளைவிட்டு கூட இருக்கும் இருந்தாலும் நீங்கள் அதை அப்படியே தண்ணீரில் விட்டு விடலாம் அல்லது யாரும் கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.

உங்களுக்கு இரண்டு மூன்று நபர்கள் பணம் தர வேண்டியதாக இருந்தால், ஒரு முறை வேண்டி 11 நாட்கள் முடிந்த பிறகு, அடுத்த நபரின் பெயரை சொல்லி அடுத்த 11 நாட்கள் வேண்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பெற்றவர்கள் வயிறு பற்றி எரிந்து சாபம் கொடுத்தால் கண்டிப்பாக பலிக்குமாம் தெரியுமா? பெற்றவர்கள் சாபத்தை தெரியாமல் கூட வாங்கி விடாதீர்கள்!

இந்த பரிகாரத்தை செய்து வரும் பொழுது உங்களிடம் பணத்தை வாங்கி சென்றவர் தானாகவே தேடி வந்து உங்களுக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி தருவார் என்று சொல்லப்படுகிறது. இந்த கருப்பு உளுந்து பரிகாரத்தை நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து கொடுத்த பணத்தை திரும்ப பெற வேண்டி கொள்ளுங்கள்.

- Advertisement -