கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க மந்திரம்

bhairavar manthiram
- Advertisement -

கடன் அன்பை முறிக்கும் என்ற வாசகத்தை நாம் பல கடைகளில் பார்த்திருப்போம். அது நமக்கு நடக்கும் பொழுதுதான் உண்மை என்று புரியும். தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று யாராவது கஷ்டம் என்று வந்து நிற்கும் பொழுது அவர்களின் கஷ்டத்தில் உதவி புரிய வேண்டும். அவர்களின் உறவு நமக்கு தொடர வேண்டும் என்ற காரணத்தினால் நம்மிடம் இருக்கக்கூடிய பணத்தையோ அல்லது பிறரிடம் வட்டிக்காகவோ வாங்கி தருவது உண்டு.

அப்படி தந்த பணத்தை அவர்கள் திரும்பத் தராமல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் திரும்பத் தராமல் போய்விட்டால் அதனால் பல விதமான பாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் நம்மை தான் வந்து சேரும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பைரவரை நினைத்து எந்த மந்திரத்தை உச்சரித்தால் நாம் கொடுத்த பணம் நம்மை வந்து சேரும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பொதுவாக கடன் கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். அதனால் பணம் ரீதியான பிரச்சினைகளை சந்திப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் கடனை திருப்பிப் பெறுவதற்கு என்று சில தெய்வங்களையும் நாம் வழிபடுவதுண்டு. அவற்றுள் மிகவும் குறிப்பாக சொல்வது துர்க்கை அம்மன் மற்றும் பைரவர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியாக வழிப்பாட்டு முறைகளையும், பரிகாரங்களையும் நாம் மேற்கொள்வதுண்டு. கால பைரவரை பொறுத்தவரை நாம் தேய்பிறை அஷ்டமியில் அவரை வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. அப்படிப்பட்ட காலபைரவரை செவ்வாய்க்கிழமையில் நாம் நம் வீட்டிலேயே வழிபடுவதன் மூலம் நம்முடைய பணமானது நமக்கு திரும்ப கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று காலையில் செவ்வாய் ஹோரையில் அதாவது 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்ய வேண்டும். எப்பொழுதும் போல் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை எடுத்து அதில் மஞ்சள் கலந்து அட்சதையாக தயார் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் கருப்பு எள் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த அட்சதை எள்ளை வீட்டு மாடியிலோ அல்லது வரண்டாவிலோ தூவி விட வேண்டும். இவ்வாறு நாம் தூவும்பொழுது நமக்கு யார் பணம் தர வேண்டியதாக இருக்கிறதோ அவர்களின் பெயரை உச்சரித்தவாறு அவர்கள் நம்மிடம் பணத்தை திரும்பி தர வேண்டும் என்று கூறியவாறு தூவி விட வேண்டும். இவ்வாறு தூவதன் மூலம் பறவைகளும், எறும்புகளும் அதை வந்து உணவாக எடுத்துக் கொள்வார்கள்.இவ்வாறு செய்துவிட்டு வீட்டு பூஜை அறைக்கு வந்து வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு பைரவரை முழு மனதோடு நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஹ்ரீம் வம் பைரவாய நமஹ”

இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் பைரவரை நினைத்து 27 முறை ஒவ்வொரு வாரமும் நாம் கூறி வர விரைவிலேயே நாம் கொடுத்த பணமும் நகையும் நம்மை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு ஏற்பட பிரதோஷ மந்திரம்

மிகவும் எளிமையான இந்த பைரவர் வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் முழு மனதுடன் பின்பற்றுபவர்களின் வாழ்வில் கடன் ரீதியான பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது.

- Advertisement -