பிறரிடம் கொடுத்து ஏமார்ந்த பணம், நகை எல்லாம் திரும்ப பெற பௌர்ணமி அன்று இதை மட்டும் எரித்து விடுங்கள். பணத்தை வாங்கி சென்றவர்களே தேடி வந்து திருப்பித் தரும் அதிசயம் நடக்கும்.

bhairava cash
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு ஒரு சிரமமான காரியமோ அதை விட பல மடங்கு சிரமமான காரியம் சம்பாதித்த பணத்தை நல்ல முறையில் செலவழித்து சேமித்து வைப்பது. நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலே உடனே சுற்றி இருப்பவர்களில் இருந்து உறவினர் வரை கடனாகவோ கைமாற்றாகவோ கேட்டு வந்து விடுவார்கள். நாமும் அவர்களின் அவசர தேவை கருதி கொடுப்போம். ஆனால் வாங்கிய பின் அவர்கள் அதை திருப்பித் தருவதை பற்றி பேசவே மாட்டார்கள். சில இடங்களில் வாங்கியதையே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இப்படியான சிக்கலில் சிக்கித் தவிப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்யும் போது பிறரிடம் கொடுத்த பணம் நகை எல்லாம் தானாக திருப்பி வருவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

கொடுத்த பணம், நகை மீண்டும் கைக்கு வர
இந்த பரிகாரத்தை நாம் அம்மவாசை அல்லது பௌர்ணமி ஆகிய இரண்டு தினங்களில் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்ய 21 நல்ல நிலையில் உள்ள உடையாத கிராம்பை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கிராம்பை ஒரு கொட்டாங்குச்சியிலோ, தூபம் போடும் தூப காலிலோ பச்சைக் கற்பூரத்தை வைத்து தீபம் ஏற்றி அதில் இந்த கிராம்புகளை போட்டு முழுவதுமாக எரித்து விட வேண்டும். அதன் பிறகு இதை யாரும் கால்படாத இடத்தில் தூக்கி தூர போட்டு விடுங்கள். இதை வீட்டிற்குள் வைத்தும் செய்யலாம் அல்லது வீட்டிற்கு வெளியில் வைத்தும் செய்யலாம்.

- Advertisement -

அடுத்து இதற்கு ஒரு முக்கியமான வழிபாடு உள்ளது. இதை செய்ய சனிக்கிழமை ராகு கால நேரத்தில் பைரவர் ஆலயத்திற்கு சென்று நீங்கள் யாருக்கு கடனை கொடுத்தீர்களோ யார் உங்களுக்கு பணத்தை திருப்பி தரவில்லையோ அவர்களின் பெயரை சொல்லி பைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இதை தொடர்ந்து செய்து வரும் போது உங்களிடம் பணத்தை வாங்கி திருப்பித் தரவே கூடாது என்று முடிவெடுத்தவர்கள் கூட தானாக தேடி வந்து திருப்பித் தருவார்கள் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக ஒருவரிடம் பணத்தை கொடுக்கும் போது நாம் பலமுறை யோசித்து செய்ய வேண்டும். யாரேனும் உதவியாக நம்முடன் பெரிய தொகை கேட்டால் நம்மால் முடிந்த ஏதாவது ஒரு சிறிய தொகையை கொடுத்து அத்துடன் அதை முடித்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இன்றைய கால சூழ்நிலை அப்படி உள்ளது. வாங்கும் போது அவர்களின் சூழ்நிலையும் திருப்பித் தரும் வகையில் இருந்திருக்கும் ஒரு வேளை வாங்கிய பிறகு அவர்கள் சூழ்நிலையே திருப்பி தராதபடி மாறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பூஜை அறையில் சுவாமி படங்களை இப்படி மட்டும் தனியாக வைக்காதீர்கள்! குடும்பத்தில் ஒற்றுமை தடைப்படும் தெரியுமா?

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பத்திரமாக செலவழித்து அதை நல்ல முறையில் சேமித்து வைக்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டாலே போதும். பிறரை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்து அதன் பிறகு வருத்தப்படுவதில் எந்த பலனும் இல்லை. ஒரு வேளை தவிர்க்க முடியாமல் இது வரை கொடுத்த பணம் கைக்கு வராமல் இருந்தால் இந்த எளிய தாந்திரீக பரிகாரங்களின் மூலம் அதனை திரும்பத் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகார முறைகளை முயற்சித்துப் பார்க்கலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -