பூஜை அறையில் சுவாமி படங்களை இப்படி மட்டும் தனியாக வைக்காதீர்கள்! குடும்பத்தில் ஒற்றுமை தடைப்படும் தெரியுமா?

murugan-perumal
- Advertisement -

இந்து மதத்தை பொறுத்தவரை வீட்டில் மனிதர்களுடன், தெய்வ படங்களுக்கும் மிகுதியான இடங்கள் உண்டு. சாமி படங்களை பல வீடுகளில் வரிசையாக அடுக்கி வைத்திருப்பதை பார்த்திருக்க முடியும். இப்படி சுவாமி படங்கள் வைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன? இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த பயனுள்ள தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

வரிசையாக அடுக்கி வைத்திருக்கும் சுவாமி படங்களுக்கு இடையிடையே இடைவெளி இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இடைவெளி இல்லாமல் சுவாமி படங்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி வைக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகிறது. மேலும் தெய்வ விக்கிரகங்கள் வைத்திருப்பவர்கள், உங்கள் உள்ளங்கையின் அளவிற்கு விக்ரஹங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கு மேல் உயரமான விக்கிரகங்களை பாதுகாப்பது என்பது ரொம்பவும் கடினமானது.

- Advertisement -

தெய்வ விக்ரஹங்கள் வீட்டில் வைத்திருந்தால், அதிலும் உலோகங்களால் ஆன விக்ரகங்களை வைத்திருப்பவர்கள், கண்டிப்பாக அவர்களுக்கு உரிய அபிஷேக, ஆராதனைகள் செய்ய வேண்டும். அப்படியே எதுவும் செய்யாமல் விட்டுவிட்டால் குடும்பத்திற்கு ஆகாது போய்விடும். அது போல சுவாமி படங்கள் தனித்தனியாக வைத்திருந்தாலும், அதில் தம்பதி சமேதராக இருக்கக்கூடிய தெய்வத்திரு உருவங்களுக்கு பெருமதிப்பு உண்டு.

சிவன் படத்தை வைத்திருப்பவர்கள் சிவனை தனியாக வைத்திருப்பதை காட்டிலும், சிவ பார்வதி ஆக வைத்திருப்பது தான் விசேஷமானது. லிங்கத்தை தனியாக வைக்கலாம் ஆனால் சிவன் படத்தை தனியாக வைப்பது தவறு. சிவனுடன் பார்வதி தேவி இணைந்திருக்கும் பொழுது தான் முழு சக்தி பெறுகிறார். எனவே சிவன் படத்தை தனியாக வைக்காதீர்கள், உடன் பார்வதி படத்தையும் வாங்கி சேர்த்து வையுங்கள். சிவன் மட்டுமல்லாது மற்ற தெய்வங்களையும் தம்பதி சமேதராக வைக்கும் பொழுது நல்ல ஒரு அதிர்ஷ்டகரமான சுபிட்சம் நிலவும். பெருமாள் படத்தை வைத்திருப்பவர்கள் உடன் தாயார் படத்தையும் வைத்திருக்க வேண்டும். சிலர் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் போது இது போன்ற படங்களை தனியாக வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது உண்டு.

- Advertisement -

புனித ஸ்தலங்களில் இருந்து வாங்கி வரும் பொழுது தம்பதியராக நீங்கள் வாங்கி வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகும். பிரிந்திருந்த தம்பதியரும் ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கும். அதுவே நீங்கள் தனியாக ஒரு கடவுளுடைய படத்தை வாங்கி வந்து வைத்தால், குடும்ப ஒற்றுமைக்கு இடையூறுகள் வரக்கூடும். ஆஞ்சநேயர் போன்ற பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் கடவுள்களை தனியாக வாங்கி வைக்கலாம், ஆனால் தம்பதியராக இருக்கக்கூடிய கடவுள்களை பிரித்து வைக்க கூடாது. முருகனுடன் வள்ளி, தெய்வானை இருக்கும் படத்தை வாங்கி வைத்தால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவி பிரச்சனை தீருவதாக ஒரு ஐதீகம் உண்டு.

இதையும் படிக்கலாமே:
விளக்கேற்றும் பொழுது உங்கள் கை இப்படி இருந்தால் வேண்டிய கோரிக்கை உடனே நிறைவேறுமாம் தெரியுமா? வீட்டில் பெண்கள் தான் விளக்கேற்ற வேண்டுமா என்ன?

இரு மனைவியர் இருக்கும் கடவுள்களை பெண்கள் வெறுக்கின்றனர். அந்த இரு கடவுள்களும் ஒருவரே என்பதை தான் சாஸ்திரம் இறுதியில் வலியுறுத்துகிறது. ஏதோ ஒரு தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே புதுப்புது அவதாரங்கள் எடுத்து வெவ்வேறு பெயர்களுடன் கடவுளர்கள் திருமணம் செய்வதாக கூறப்படுகிறது. எனவே இதனை உணர்ந்து மெய் கடவுள்களை தனியாக வைத்து பாவம் செய்யாதீர்கள். சாமி படங்களை தூசு படாமல் வாரம் தோறும் துடைத்து சுத்தம் செய்து, மஞ்சள் குங்குமம் இட்டு வாசனை மிக்க திரவியங்களை தெளித்து நெய் அல்லது நல்லெண்ணையால் விளக்கு ஏற்றி பூஜித்து வந்தால் சகல செல்வங்களும், சௌபாக்கியங்களும் உங்களுக்கு வந்தடையும்.

- Advertisement -