கடன் சுமை நீங்க கொள்ளு பரிகாரம் – Kollu pariharam in Tamil
ஏழை எளியவர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவருக்கும் கடன் என்பது இருக்கிறது. அவர் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கடன் தொகை வித்தியாசப்படுமே தவிர்த்து கடன் என்பது அனைவருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட கடன் சுமையில் இருந்து நாம் வெளிவருவதற்கு எந்த பொருளை தானமாக எப்படி தரவேண்டும் என்றுதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கடன் சுமைக்கு ஆளானவர்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பது இருக்கவே இருக்காது. ஆனால் கடனால் நாம் இழந்த நிம்மதியை திரும்ப பெற உதவக்கூடிய ஒரு எளிமையான தானியம் தான் கொள்ளு. ஒருவருக்கு ஏற்படும் கடனிற்கு காரிய கர்த்தாவாக விளங்குகிறார் கேது பகவான். அந்த கேதுவிற்குரிய தானியமான கொள்ளை சில முறைகளை பின்பற்றி தானமாக வழங்குவதன் மூலம், கேதுவால் ஏற்படும் கிரஹ தோஷம் நீங்கி கடன் சுமையில் இருந்து எளிதாக வெளியில் வர முடியும்.அப்படிப்பட்ட கொள்ளு பரிகாரம் (kollu pariharam in Tamil) எப்படி செய்வதென்று இப்போது பார்ப்போம்.
கடன் நீங்க கொள்ளு பரிகாரம்
கடன் பிரச்சனையில் இருப்பவர் ஒரு நல்ல நாள் பார்த்து விடியற்காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரிய உதயத்தின் பொழுது அதாவது காலை 6 மணிக்கு தங்கள் கைகளில் கொள்ளை ஒரு பிடி எடுத்துக்கொண்டு சூரியனை பார்த்தவாறு நின்று 27 முறை தங்கள் கைகளால் தலையை சுற்ற வேண்டும். அவ்வாறு சுற்றும் பொழுது “என்னுடைய கடன் பிரச்சினை அனைத்தும் தீர வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே சுற்ற வேண்டும்.
இவ்வாறு செய்த பிறகு கையில் இருக்கும் அந்த தானியத்தை பறவைகளுக்கு தானமாக வழங்க வேண்டும். எந்த பறவையாக இருந்தாலும் பரவாயில்லை. இவ்வாறு நாம் தொடர்ந்து விடாமல் 16 நாட்கள் செய்ய வேண்டும். நடுவில் ஏதாவது ஒரு நாள் விடுபட்டால் கூட மறுபடியும் முதல் நாளில் இருந்து 16 நாட்கள் செய்ய வேண்டும் என்பது மிகவும் கவனிக்க கூடிய ஒன்று.
இவ்வாறு நாம் செய்வதால் கேதுவால் நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி கடன் சுமையிலிருந்து படிப்படியாக வெளியில் வருவோம். மேலும் இந்த கொள்ளு தானியத்தை நாம் குதிரைகளுக்கு தானமாக வழங்கினாலும் நம்முடைய கடன் சுமைகள் குறையும். அது மட்டும் அல்லாமல் கோவில்களில் கொள்ளு சுண்டல் போடுவதற்காக தானமாக கொடுக்கலாம்.
இவ்வாறு செய்வதால் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகி நம் பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மிகவும் எளிமையான அனைவருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய கொள்ளு தானியத்தை வைத்து மேற் சொன்ன பரிகாரங்களை செய்து தங்கள் வாழ்வில் இருக்கும் அனைத்து கடன்களையும் நிவர்த்தி செய்து சந்தோஷமாக வாழலாம்.