வேண்டிய வேண்டுதல் உடனே நிறைவேற கோமதி சக்கரத்தை உங்களுடைய வீட்டில் இப்படித்தான் வைக்க வேண்டும்.

komathi-chakram
- Advertisement -

நேர்மறை ஆற்றலை தன்னிடமிருந்து எப்போதுமே வெளிப்படுத்தக் கூடிய தன்மை இந்த கோமதி சக்கரத்திற்கு உண்டு. அந்த நேர்மறை ஆற்றல் எப்போதுமே நம்மைச் சுற்றியும் இருக்கும். இன்னும் புரியும்படி சொல்லப்போனால் கோமதி சக்கரத்திற்கு உயிர் உள்ளது என்றும் சிலர் சொல்லுவார்கள். இந்த கோமதி சக்கரத்தை வாங்கி அப்படியே பூஜை அறையில் வைத்து விட்டால் போதாது. அதற்கு உண்டான அபிஷேகங்களை முறையாக வாரம் ஒரு முறையாவது நிச்சயமாக செய்ய வேண்டும். அப்போதுதான் அதனுடைய சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.

komathi-sakaram

சில பேர் வாரத்தில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் இதற்கு பால் அபிஷேகம் செய்து, அதன் பின்பு தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்வார்கள். இப்படி செய்தால் தவறில்லை. இருப்பினும் வாரத்தில் ஒரு நாள் கூட இந்த கோமதி சக்கரத்தினை பூஜை செய்யாமல் நம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் அது நமக்கு பிரச்சனைகளை தருவதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

கோமதி சக்கரத்தை வைத்து வழிபாடு செய்து நம்முடைய வேண்டுதல்களை, மனதார வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் 5 கோமதி சக்கரங்களை வாங்கி, மஞ்சள் குங்கும பொட்டிட்டு, மஞ்சள் துணியில் வைத்து முடிந்து, நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து தினமும் அதற்கு பூஜை செய்து வர வேண்டும்.

komathi-chakram1

சில பேரது வீட்டில் குடும்ப பிரச்சனைகள், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சண்டைகள் வந்த வண்ணமே இருக்கும். இப்படி இருந்தால் 6 கோமதி சக்கரத்தை மஞ்சள் துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து, மனதார வேண்டுதல் வைத்தால் நிச்சயமாக வீட்டில் இருக்கும் சண்டை சச்சரவுகள் கூடிய விரைவில் நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது வீட்டில் எந்த ஒரு சுப காரியங்களையும் நடத்த முடியவில்லை, என்ற பிரச்சனை இருந்தால் 3 கோமதி சக்கரத்தை வாங்கி மஞ்சள் நிறத் துணியில் வைத்து முடிந்து, பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வந்தால் போதும். வீட்டில் சுபகாரியங்கள் கூடிய விரைவில் நடக்க தொடங்கும்.

komathi-chakram2

நிறைய பேருக்கு வெற்றி என்பது எட்டாக் கனியாகவே இருக்கும். இவர்கள் ஆரஞ்சு நிற துணியில் ஒரே ஒரு கோமதி சக்கரத்தை முடிந்து வைத்து, பூஜை அறையில் வைத்து மனதார குலதெய்வத்தை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்து வழிபாடு செய்து வந்தால் போதும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் சுலபமாக வெற்றி அடைந்து விடலாம்.

- Advertisement -

house

இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு வீடு கட்டும் ஆசை கனவாகவே இருந்து வருகிறது. அதை நிஜமாக்க 9 கோமதி சக்கரங்களை வாங்கிய சிவப்புத் துணியில் வைத்து, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து வீடு கட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையை தொடர்ந்து வைத்து வந்தால் கூடிய விரைவில் வீடு கட்டும் யோகம் வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

எந்தத் துணியில் நீங்கள் முடிந்து வைத்தாலும் சரி, வாரத்தில் இரண்டு நாட்கள் அந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே இருக்கும் கோமதி சக்கரத்திற்கு பாலபிஷேகம் செய்து தண்ணீரில் நன்றாக கழுவி சந்தன குங்குமப் பொட்டு வைத்து அதன் உள்ளே வாசனை மிகுந்த பூக்களை போட்டு வைப்பது மேலும் நல்ல பலனைத் தரும்.

கோமதி சக்கரம் இருக்கும் இடத்தில் வேண்டுதலை வைக்கும்போது நேர்மறையான எண்ணத்தோடு, நேர்மறையான வேண்டுதலை தான் வைக்க வேண்டும். ‘நல்லது நடக்க வேண்டும். வெற்றி அடைய வேண்டும். வீடு கட்ட வேண்டும்.’ என்ற வார்த்தைகள் வெளிவர வேண்டுமே தவிர, ‘கெடுதல் நடந்து விடுமோ! நல்லது நடக்காமல் போய்விடுமோ! நஷ்டம் ஏற்பட்டு விடுமோ!’ என்ற வார்த்தைகளை வெளிப்படுத்தி வேண்டுதல் வைக்கக்கூடாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -