உங்கள் முகத்தில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க, வசீகரமான தோற்றத்தை பெற, தினம்தோறும் இந்த திலகத்தை நெற்றியில் இட்டு வந்தாலே போதும்.

thilagam
- Advertisement -

ஒருவருடைய முகத்தையும் நிறத்தையும் வைத்து, அதாவது தோற்றத்தை வைத்து இவர்கள் ராசியானவர்கள், இவர்கள் ராசி இல்லாதவர்கள் என்று அடுத்தவர்களுடைய மனது புண்படும்படி பேசுவது என்பது தவறான ஒரு விஷயம்தான். இருப்பினும், நிறைய இடங்களில் இந்த வார்த்தையை நாமே கேள்விப்பட்டிருப்போம். ‘இவர்கள் எதிரே வந்தால் நடக்காத நல்ல காரியம் கூட நடந்துவிடும். இவர்களுடைய முகத்தில் அந்த தெய்வமே குடியிருப்பது போல தெரிகிறது.’ என்று சொல்லுவது வழக்கம் அல்லவா? இப்படிப்பட்ட தெய்வ கடாட்சம் நிறைந்த, தேஜஸ் நிறைந்த வசீகரமான முகத்தைப் பெற ஆன்மீக ரீதியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு சிறிய தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

korosanai

கோரோசனை. இறை வழிபாட்டிற்கு, இறை சக்தியை நிலை நிறுத்துவதற்கு இந்தப் பொருள் பயன்படுத்தப் படுகின்றது. இந்த கோரோசனைக்கு அடுத்தவர்களை ஈர்க்கக்கூடிய வசிய தன்மையும் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. வசிய தன்மை என்றவுடன் உடனே தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நல்லதை தன்பக்கம் கவரக்கூடிய, ஒரு தன்மையைத்தான் வசிய தன்மை என்று சொல்லுவார்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக சிகப்பு சந்தனம். மனதிற்கு குளிர்ச்சியைக் கொடுத்து சாந்தப்படுத்த கூடிய சக்தி இந்த சிவப்பு சந்தானத்திற்கு உண்டு. நாட்டு மருந்து கடைகளில் இருந்து கொஞ்சம் ஒரிஜினலாக இருக்கும் கோரோசனையும் சிகப்பு சந்தனத்தையும் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த திலகத்தை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்.

ஒரு சிறிய டப்பாவில் கொஞ்சம் கோரோசனை, கொஞ்சம் சிகப்பு சந்தனம், சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் இந்த இரண்டு பொருட்களில் ஏதாவது ஒன்றை ஊற்றி இந்த கோரோசனையும் சிகப்பு சந்தனத்தையும் குழைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். மனதார குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு இந்த திலகத்தை தயார் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு நெற்றியில் விபூதி வைக்கும் பழக்கம் இருந்தாலும் சரி, அல்லது பெண்களாக இருந்தால் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ளும் பழக்கமாக இருந்தாலும் சரி, முதலில் இந்த கோரோசனை திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு அதன் பின்பு அதன் மேலே விபூதி குங்குமத்தை வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. ஆக மொத்தத்தில் இந்த வாசனை நிறைந்த கோரோசனை நெற்றியில் திலகமாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

thilagam1

இந்த கோரோசனை திலகத்தை சிகப்பு சந்தனத்தோடு சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது நமக்கு நிறையவே நல்ல பலன்கள் கிடைக்கும். சில வேலைகளுக்கு திறமையோடு சேர்த்த, தோற்றத்தில் அழகும் தேவைப்படும். நான் சொல்வதை அடுத்தவர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றாலே, நாம் பார்ப்பதற்கு கொஞ்சம் வசீகரிக்கும் தோற்றத்தில் இருக்க வேண்டும். இந்த திலகத்தை இட்டுக்கொண்டால் வெள்ளையாக மாறிவிடுவீர்கள். அழகு கூடும் என்பது அர்த்தம் கிடையாது. அடுத்தவர்களை கவரும் வசீகரிக்கும் தன்மை நமக்குள் வந்துவிடும். நாம் பேசுவதை நாலுபேர் காது கொடுத்துக் கேட்பார்கள். நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். நம்முடைய முகம் ராசியான முகமாக மாறும். தொடர்ந்து 48 நாள் இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டால் வித்தியாசத்தை உங்களாலேயே உணர முடியும். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -