எதிரி தொல்லை நீங்க கோட்டை மாரியம்மன் கோவில் பரிகாரம்

ethiri tholai neenga
- Advertisement -

மனிதனை முன்னுக்கு வரவிடாமல் தடுக்கக் கூடிய பிரச்சனைகளில் முதலாவதாக எதிரி தொல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் இவர்கள் நம்முடனே இருந்து கொண்டு நம்முடைய ஒவ்வொரு முயற்சியிலும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் நம்முடைய நெருங்கிய வட்டத்திற்குள் தான் இருப்பார்கள்.

இவர்கள் தான் செய்கிறார்கள் என்று நமக்கு நன்றாக தெரிந்தாலும் பல நேரங்களில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. இந்தப் பிரச்சனை ஒருபுறம் இருக்க இன்னும் சிலருக்கு தனக்கு என்ன பிரச்சனை என்றே புரியாது அவர்களால் எதையும் சரிவர செய்ய முடியாது. மனம் ஏதோ ஒரு குழப்பத்திலே இருக்கும். இதையெல்லாம் நம்முடைய வாழ்க்கையை பெருமளவு பாதிக்கும்.

- Advertisement -

இதுபோல எதிரி பிரச்சனை மனக்குழப்பம் போன்றவற்றால் துன்பப்படுபவர்கள் செய்யக் கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

எதிரி தொல்லை நீங்க மாரியம்மன் பரிகாரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதிலும் இந்த பரிகாரத்தை திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் செய்வது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது அங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் மாரியம்மன் ஆலயத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

சனிக்கிழமை செய்வதாக இருந்தால் அதற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய சில முறைகள் உண்டு ஒரு மஞ்சள் நிற துணியில் 11 நாணயத்தை வைத்து முடிச்சாக கட்டி பூஜை அறையில் வைக்க வேண்டும். அப்போது இந்த பரிகாரத்தை நான் செய்ய வேண்டும் அதற்கு உங்களுடைய அனுமதி வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

அடுத்து சனிக்கிழமை அன்று மாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் போது எட்டு தேங்காய் 8 எலுமிச்சை பழம் 8 ஊமத்தங்காய் 8 குமட்டிக்காய் இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு செல்லுங்கள் செல்லும் போது ஒரு சிறிய பத்தியும் எடுத்துச் செல்லுங்கள். கோவிலுக்கு எடுத்து செல்லும் தேங்காயின் மேல் உள்ள நாரையெல்லாம் எடுத்து சுத்தம் செய்த பிறகு கொண்டு செல்லுங்கள்.

- Advertisement -

இப்போது கோவிலிற்கு சென்றவுடன் முதலில் பிரகாரத்தை ஒரு முறை சுற்றி வந்த பிறகு நீங்கள் கொண்டு சென்ற பொருட்கள் அனைத்தையும் இரண்டாக நறுக்க வேண்டும். அதே போல் தேங்காய் உடைத்து அங்கே இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள். அதன்பிறகு அங்கே குளிக்க வசதி இருந்தால் குளியுங்கள் அல்லது கை கால் முகம் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இரண்டு அர்ச்சனை தட்டு வாங்குங்கள். ஒரு அர்ச்சனை உங்கள் பேருக்கு செய்ய வேண்டும் இன்னொரு அர்ச்சனை உங்களுக்கு யார் எதிரியை யார் உங்களுக்கு தொல்லை தருகிறார்களோ அவர்கள் பேருக்கு செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் மனக்குழப்பத்தில் இருக்கிறீர்கள் அல்லது எதில் யாரென்று தெரியவில்லை என்றாலும் இவராகத்தான் இருக்கும் என்று யாரையாவது நீங்கள் நினைத்திருந்தால் அவர் பேரிலே பண்ணுங்க.

வீட்டிற்கு திரும்ப வரும் போது உங்கள் பேரில் செய்த அர்ச்சனை தட்டை மட்டும் வீட்டிற்கு கொண்டு வாருங்கள் உங்கள் எதிரியின் பேரில் செய்த அர்ச்சனை தட்டை அங்கேயே வைத்து விட்டு வந்துவிட வேண்டும். கோட்டை மாரியம்மன் கோவில் இந்த பரிகாரத்தை செய்பவர்கள் 11 நாட்கள் அங்கேயும் தங்கி இருந்து செய்யுங்கள் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம்.

எங்களால் அங்கு சென்று செய்ய முடியாது அவ்வளவு வசதி இல்லை என நினைப்பவர்கள் அருகில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று கோட்டை மாரியம்மன் நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பதினோராவது நாள் கடைசியாக பரிகாரத்தை செய்யும் பொழுது அந்த 11 ரூபாய் முடிச்சு கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வேண்டிய வரத்தைத் தரும் விரலி மஞ்சள்

இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுடைய எதிரி தொல்லை மனக்குழப்பம் பயம் வாழ்க்கையில் உள்ள தடை அனைத்தையும் தீர்த்து உங்களை நல்லதொரு வளமான வாழ்க்கையை வாழவைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -