கோடி கோடியாக பணத்தை கொட்டி தரும் கொட்டைப்பாக்கு பரிகாரம். தெருக்கோடியில் நிற்பவரும் பல கோடிக்கு அதிபதியாகலாம்.

kottai-pakku
- Advertisement -

என்னுடைய வாழ்க்கை ரொம்ப ரொம்ப நல்லா தாங்க போயிட்டு இருந்துச்சு. ஆனா இடையில் கொஞ்ச நாட்களாக வீட்டில் தீராத பண கஷ்டம். சேமித்து வைத்திருந்த சேமிப்பு எல்லாம் கரைந்து விட்டது. சிறுக சிறுக சேமித்த பணம் எல்லாம் அடமானத்திற்கு சென்று விட்டது. இடையில் கொஞ்ச காலம் வேலையில்லாத சூழ்நிலை. வருமானத்தில் தடை. கொஞ்சம் கொஞ்சமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. இப்படி மொத்தமாக குடும்பம் கஷ்டத்தில் மூழ்கி விட்டது. இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். நாங்கள் தற்போது தேவையான அளவு பணத்தை கையில் வைத்திருக்கின்றோம். மன நிம்மதியும் செல்வக் கடாட்சமும் எங்கள் வீட்டில் நிறைவாக தான் இருக்கிறது. மேலும் மேலும் பணம் சம்பாதித்து சேர்க்க வேண்டும். சொத்து சுகம் சேர்க்க வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயமாக உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும்.

எப்படி? இன்று இந்த பரிகாரத்தை செய்து விட்டால் நாளை கோடீஸ்வரர் ஆகி விடலாமா என்று கேட்காதீங்க. நீங்கள் இருக்கின்ற நிலமையை விட அடுத்த படிக்கு முன்னேறி செல்வதற்கு இந்த பரிகாரம் ஒரு தூண்டுகோலாக அமையும். வெறும் 10,000 தான் சம்பளம் வாங்குறீங்க. அப்படின்னா ஆறு மாதத்திற்குள் உங்களுடைய சம்பளம் 15,000 ஆக உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. பரிகாரத்தை செய்து கூடவே உங்களுடைய முயற்சியை கைவிடக் கூடாது.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள். கொட்டைப்பாக்கு, ஒரே ஒரு நெல்லிக்காய். சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருளை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிவப்பு நிற துணியில் இந்த இரண்டு பொருட்களையும் வைக்க வேண்டும். கொட்டைப்பாக்கு 8, பெரிய நெல்லிக்காய் 1, சிவப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். (பூஜை அறையில் விளக்கு ஏற்றி குலதெய்வத்தை பிரார்த்தனை செய்த பின்பு பரிகாரத்தை செய்ய வேண்டும்.)

இந்த 2 பொருட்களும் அவ்வளவு எளிதில் சீக்கிரமாக காய்ந்து போகாது. கொட்டைப்பாக்கு கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் வண்டு பிடிக்கும். ஆகவே மாதத்திற்கு ஒரு முறை பழைய பொருட்களை எடுத்து கால் படாத இடத்தில் அல்லது செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிட்டு, மீண்டும் அந்த துணியை துவைத்து புதியதாக கொட்டை பாகையும் நெல்லிக்காயையும் வைத்து வரவேண்டும்.

- Advertisement -

இப்படி செய்தால் பணம் வைக்கும் இடத்தில் இருக்கும் தரித்திரம் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகி, பணப்பெட்டியில் பணம் மீண்டும் மீண்டும் சேரும். அடமானம் வைத்த நகைகளை எல்லாம் திரும்பவும் மீட்டெடுப்பதற்கு உண்டான காலமும் வரும். கிரக சூழ்நிலை சரியில்லை ஏழரைச் சனி நடக்கிறது. தொழிலில் நஷ்டம் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொழில் செய்யக்கூடிய இடத்தில் இருக்கும் கல்லாப்பெட்டியிலும் இந்த முடிச்சை வைக்கலாம். வரக்கூடிய பிரச்சனைகளை முழுமையாக தடுத்து நிறுத்தி விடும் முடியும் என்று சொல்ல முடியாது. வரக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க சுலபமான வழிகள் கிடைக்கும்.

பெரிய பெரிய பிரச்சனையில் சிக்கி அதல பாதாளத்தில் விழாமல் பிரச்சனை லேசாக இருக்கும் போதே அதிலிருந்து தப்பிப்பதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு வழிவக்கும். கெட்ட நேரத்திலும் சில நல்லதை கொடுக்கும் பரிகாரம் தான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருதோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -