Krunal Pandya T20 : இரண்டாவது போட்டியில் நிச்சயம் இதுவே நடக்கும் அடித்துச்சொல்கிறேன் – தடாலடி

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 டி20 போட்டியால் கொண்ட தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. அன்று நடந்து முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி அந்த போட்டியில் குறைந்த ரன்கள் அடித்ததே அந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரமணமாக பார்க்கப்படுகிறது.

Toss

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு மைதானத்தில் மாலை 6.30 துவங்க உள்ளது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும். இந்திய மண்ணில் இதுவரை இந்திய அணி தொடரை இதுவரை இழந்தது கிடையாது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி வீரரான க்ருனால் பாண்டியா அளித்த பேட்டியில் : கடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடாமல் தோல்வி பெற்றது. ஆனால், அது நிரந்தரம் அல்ல. எப்போதும் நம் அணி தொடர்ச்சியான தொலவ்விகளை சமீபத்தில் பெற்றது கிடையாது. மேலும், இந்த போட்டிக்காக நம் அணி வீரர்கள் கடுமையாக தயாராகி வருகிறார்கள்.

Krunal

எனவே, இன்றைய போட்டியில் நம் அணி வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். நிச்சயம் இந்த போட்டியினை இந்திய அணியே வெல்லும் என்றே நான் கூறுவேன். இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பினை தரும் என்றும் க்ருனால் பாண்டியா கூறினார்.

- Advertisement -