வாழ்க்கையில் இப்போது நீங்கள் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தாலும், இனி வரும் காலகட்டத்தில் உங்கள் பண கஷ்டம் தீரும். தினமும் இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும்.

Kuberan valipadu
- Advertisement -

தினமும் ஏதேதோ பரிகாரங்கள் படிக்கின்றோம் செய்கின்றோம். எவ்வளவு வழிபாட்டு முறைகள். ஆனால் கஷ்டம் என்னமோ தீர்ந்தபாடாக இல்லை. இந்த பரிகாரங்கள் வழிபாட்டு முறைகளுக்கு எல்லாம் பலன் உண்டா. இல்லை ஏமாற்று வேலையா. இந்த சந்தேகம் உங்களுக்கு இருக்குதா. பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு இன்று ஒரு குட்டி கதையை பார்க்கலாம். இறைச்சி பதப்படுத்தக் கூடிய ஒரு தொழிற்சாலையில் ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். மாலை 6:00 மணி ஆகவிட்டது. வீட்டிற்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு. எல்லோரும் கிளம்பும் சமயத்தில், இவருக்கு மட்டும் ஒரு வேலை வந்தது. அவசரமாக ஒரு ஃப்ரீசர் பாக்ஸை சரி செய்ய வேண்டும் என்று, ஃப்ரீசர் பாக்ஸை திறந்து விட்டு, அந்த ஃப்ரீஸருக்குள் போய் அமர்ந்து சரி செய்து கொண்டிருக்கிறார்.

தெரியாமல் அந்த ஐஸ் பெட்டியின் கதவு மூடி லாக் ஆகிவிட்டது. உள்ளே இருக்கும் இவரால் அந்த கதவை திறக்க முடியவில்லை. அப்படியே விட்டால் ஐஸ் கட்டியில் உறைந்து போய் நிச்சயமாக இவருடைய உடல் உறைந்து போகும். உயிர் நீங்கிவிடும். அதாவது செத்துப் போயிருவாரு. கதவை தட்டி தட்டி பார்க்குறாரு யாரும் திரவில்லை. வேலை செய்பவர்கள் எல்லாம் வீட்டுக்கு போயிட்டாங்க.

- Advertisement -

இப்படி யோசிச்சுக்கிட்டே ஐஸ் பெட்டிக்குள் இருக்கும்போது ஒருத்தர் வந்து ஃப்ரீசர் கதவை திறந்து, உள்ளே சிக்கிக் கொண்ட அந்த நபரை காப்பாற்றி விட்டார். எப்படியோ உயிர் பிழைத்தோம் என்று கதவைத் திறந்த அந்த நபருக்கு நன்றியை தெரிவித்தான் தொழிலாளி. சரிங்க, எல்லோரும் வேலையில் இருந்து கிளம்பி போய்ட்டாங்களே! நீங்க மட்டும் எப்படி உள்ளே வந்தீங்க. நான் இந்த ஐஸ் பெட்டியில் சிக்கிக்கொண்டது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார்.

நான் 30 வருஷமாக இந்த தொழிற்சாலையில் தான் வேலை செய்கின்றேன். உள்ளே வேலை செய்யக்கூடிய ஆட்களுக்கு நான் யார் என்ன என்பதை தெரியாது. என்னை ஒரு மனிதனாக கூட என்னை யாரும் மதித்ததில்லை. ஆனால், நீங்கள் மட்டும் தான் காலையில் தொழிற்சாலைக்கு உள்ளே நுழையும் போது, எனக்கு குட் மார்னிங் சொல்லிட்டு உள்ளே வருவீங்க. வீட்டுக்கு திரும்பும் போது சின்ன சிரிப்புடன் தலை அசைத்து விட்டு வீட்டுக்கு போவீங்க‌.

- Advertisement -

ஆனா இன்னைக்கு நீங்கள் உள்ளே வருவதை நான் பார்த்தேன். வெளியில் சென்றதாக எனக்கு நினைவில் வரவில்லை. அதனால் தான் உள்ளே வந்து நீங்கள் இருக்கீங்களா, இல்ல போயிட்டீங்களா என்று பார்க்க வந்ததாக, அந்த வாட்ச்மேன் சொன்னார். தினமும் அந்த தொழிலாளி செய்த அந்த ஒரு சின்ன விஷயத்திற்கு கிடைத்த பெரிய பலன் என்னன்னு பாருங்க. ஆக நாம் செய்யும் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட பின்னாடி ஒரு பெரிய விஷயம் மறைந்திருக்கும். இந்த கதையை படிக்கும் போது அது உங்களுக்கே நன்றாக புரிந்திருக்கும்.

பணக்கஷ்டம் தீர சொல்ல வேண்டிய குபேர மந்திரம்:
சரிங்க, இப்போது பண கஷ்டம் தீர்வதற்கு தினமும் நம் உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை பற்றி பார்ப்போம். தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குபேரரை மனதார நினைத்து, வாசம் நிறைந்த ஊதுவத்தி சாம்பிராணி இப்படி ஏதாவது ஒன்றை போட்டு வீட்டை மணக்க மணக்க வைத்துவிட்டு குபேரரை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள் போதும். நம்பிக்கையோடு தினமும் இதை செய்து வந்தாலே உங்கள் பண கஷ்டம் ஒரு சில நாட்களில் தீரும். கடன் சுமை படிப்படியாக குறையும். நீங்கள் தினமும் நம்பிக்கையோடு சொல்ல வேண்டிய குபேர மந்திரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

ஓம் குபேர தனாதிபாய தனம் ஆகர்ஷய ஆகர்ஷய நம:

இதையும் படிக்கலாமே: இந்த 4 நட்சத்திரம் கொண்டவர்களை வாராகி அம்மனுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இவர்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். தவிர, வராகி அம்மனுக்கு பிடிக்காத துரதிஷ்டசாலிகளும் இருக்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா உங்களுக்கு?

இந்த மந்திரத்தை தினமும் 27 முறை சொன்னால் கூட போதும். தொடர்ந்து இந்த மந்திரத்தை உச்சரித்து வரும்போது ஒரு சில நாட்களில் உங்கள் குடும்ப கஷ்டம் தீர்ந்து வாழ்வில் படிப்படியாக முன்னேற்றத்தை அடைய நல்ல வழிகளை அந்த இறைவன் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பான். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -