இந்த 4 நட்சத்திரம் கொண்டவர்களை வாராகி அம்மனுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இவர்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். தவிர, வராகி அம்மனுக்கு பிடிக்காத துரதிஷ்டசாலிகளும் இருக்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா உங்களுக்கு?

varahi1
- Advertisement -

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய புழு பூச்சி முதல் நல்லவர்கள் கெட்டவர்கள் வரை எல்லா உயிரினங்களையும் படைத்தது அந்த இறைவன் தான். அந்த அம்பாள் தான். உலகத்திற்கே தாயாக இருந்து பாதுகாப்பவள் சக்தி தேவி. அந்த சக்தி தேவியின் சுரூபமே இந்த வாராகி தாயும். அம்மாவுக்கு தன் பிள்ளைகள் நல்லவர்களாக இருந்தாலும், பிடிக்கும் கெட்டவர்களாக இருந்தாலும் பிடிக்கும். ஆனால், ஜோதிடத்தின் அடிப்படையில் வாராகி அன்னைக்கு பிடித்த நட்சத்திரங்கள் என்று நான்கு நட்சத்திரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த நட்சத்திரங்கள் என்னென்ன என்பதை பற்றியும், வாராகி தாய்க்கு பிடிக்காதவர்கள் என்றும் இந்த பூமியில் சில பேர் உள்ளார்கள். அவர்கள் யார் யார் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

வாராஹிக்கு ரொம்பவும் பிடித்த நட்சத்திரம்:
கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி, இந்த நான்கு நட்சத்திரங்களும் வராஹி அன்னைக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாக சொல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்த நான்கு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வரத்தை வாராகி அன்னையிடம் கேட்டாலும் அது உடனே கிடைத்து விடும். சரிங்க, நாங்க எல்லாம் இந்த நான்கு நட்சத்திரத்தில் அடங்கவில்லை. எங்களுடைய நட்சத்திரம் வேறு. நாங்கள் என்ன செய்வது. நீங்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் வாராகி அன்னையை வழிபாடு செய்யும்போது உங்களுக்கான வரங்களையும் அந்த வாராகித்தாய் அள்ளிக் கொடுத்து விடுவாள்.

- Advertisement -

அப்போ வாராஹி தாய்க்கு பிடிக்கவே பிடிக்காதவங்க என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அதில் யார் யார் இருப்பார்கள். கெட்ட எண்ணம் கொண்டவர்கள். அடுத்தவர்களை வாழ விடாமல் தடுப்பவர்கள். அடுத்தவர்களுக்கு ஏவல் பில்லி சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றலை தூண்டி விடுபவர்கள். அடுத்தவர்கள் கெட்டுப் போக வேண்டும் என்று சில பேர் சாமி கும்பிடுவாங்க. இப்படிப்பட்ட குணம் கொண்டவர்களை எல்லாம் வாராகி தேவிக்கு சுத்தமாக பிடிக்காது. தீய எண்ணத்தோடு மனதில் அழுக்கோடு யாராலும் வாராகி தாயே நெருங்கவே முடியாது.

தீராத கஷ்டம் தீர வாராஹி அன்னைக்கு ஏற்ற வேண்டிய விளக்கு:
உண்மையான பக்தியோடு வாரம் தோறும் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் எமகண்ட நேரத்தில் வாராகி அன்னை சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு போங்க. அங்கே ஒரு வாழை இலையில் பச்சரிசியை பரப்பி வையுங்க.

- Advertisement -

ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து, அந்த பச்சரிசியின் மேல் நிற்க வைத்து, அந்த தேங்காய்குள் இலுப்பை எண்ணெய் ஊற்றி, சிவப்பு நிறத்தில் திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து வேண்டிக்கொண்டால், நீங்கள் எவ்வளவு பெரிய கஷ்டத்தில் இருந்தாலும் உங்களை காப்பாற்ற அந்த வாராஹி அன்னை ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உதவுவால்.

இதையும் படிக்கலாமே: காலம் காலமாக வட்டி மட்டுமே கட்டும் கடன் தொல்லையில் இருந்து விரைவில் மீண்டு வெளியே வந்து, இனி ஆய்சுக்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையே வராம இருக்க ஒரு கட்டி வெல்லம் போதும்.

தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமை இந்த தீபத்தை ஏற்றி தான் பாருங்களேன். நல்லது நிச்சயம் நடக்கும். வாராஹி தாயை உண்மையோடு வழிபட்டவர்கள் யாரும் கைவிடப்பட்டது இல்லை என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -