வறுமை நீங்கி பணம் பெருக வீட்டில் வியாழன் கிழமை அன்று ஏற்ற வேண்டிய விளக்கு என்ன? இந்த விளக்கை ஏற்றும் எளிய முறையை நாமும் தெரிந்து கொள்வோமா?

lashmikuberar
- Advertisement -

வறுமையை நீக்கி பணத்தை கொட்டிக் கொடுக்கும் இந்த ஒரு விளக்கு அற்புத விளக்காகவே கருதப்படுகிறது. வீட்டில் எவ்வளவு விளக்குகள் நாம் வைத்திருந்தாலும், இந்த ஒரு விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் நம்முடைய செல்வம் பெருகுவதாக பக்தர்கள் இடையே ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அப்படியான ஒரு அதிர்ஷ்டம் தரும் விளக்கு என்ன? இதை எப்படி ஏற்றி வழிபட வேண்டும்? இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக தகவலாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வறுமை நீங்க முதலில் செல்வக் கடவுளர்களை நாம் வழிபடுவது வழக்கம். அந்த வகையில் அனைவரும் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வழிபடுவதை பார்த்திருப்போம். செல்வத்தின் அதிபதியாக இருக்கக்கூடிய இந்த மகாலட்சுமிக்கு இணையாக இருக்கக் கூடியவர் குபேரர். இந்த குபேரனுக்கு வியாழன் கிழமை தோறும் இந்த விளக்கை ஏற்றி வழிபடுவதன் மூலம் நம்முடைய செல்வ வளம் பெருகும் என்பது நியதி.

- Advertisement -

ஒவ்வொரு வியாழன் கிழமையிலும் குபேரனுக்கு குபேர விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கக்கூடிய ஒரு எளிய பரிகாரமாக இருக்கிறது. இந்த விளக்கு ஏற்றி குபேரனை வழிபடுவதன் மூலம் நம்முடைய வீட்டில் வறுமை நீங்கி பணமானது பெருகும். செல்வங்களும் குவியும் என்பது நம்பிக்கை. குபேர விளக்கு என்பது கீழே இருக்கும் படத்தில் காட்டி உள்ளவாறு இருக்கும். இந்த ஒரு விளக்கை ஒவ்வொரு வியாழன் கிழமை அன்றும் குபேரனுடைய படம் அல்லது விக்கிரகத்திற்கு முன்பு வைத்து சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

குபேர பகவானுக்கு நாணயங்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். எனவே ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயங்களை 108 என்கிற எண்ணிக்கையில் எப்பொழுதும் பூஜை அறையில் வைத்திருக்க வேண்டும். இந்த நாணயங்களை வைத்து குபேர பகவானுக்கு ஒவ்வொரு வியாழன் கிழமை அன்றும் அர்ச்சனை செய்ய வேண்டும். குபேர நாணயங்கள் கூட தனியாக விற்கப்படுகிறது. ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் பொழுது, இந்த ஒரு மந்திரத்தையும் நீங்கள் உச்சரித்து வர வேண்டும்.

- Advertisement -

ஸ்ரீ லக்ஷ்மி குபேர மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம!

குபேர தீபத்தை குபேர திசையான வடக்கு திசையில் வைத்து ஏற்றி வைத்த பின் தொடர்ந்து 108 முறை நாணய அர்ச்சனை செய்து, ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் பொழுதும் இந்த மந்திரத்தை உச்சரித்து வர குபேரனுடைய அருள் கிடைக்கும். ஒரு விதமான அதிர்வலைகள் உண்டாகும். இதனால் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய வறுமை நீங்கி, எவ்விதமான பொருளாதாரப் பிரச்சினைகளும் உடனே அகன்று, தொழில் வளம் சிறக்கும். மேலும் செல்வங்கள் பெருகும், பணமானது குவியும்.

குபேரனுக்கு ரொம்பவும் பிடித்தது ஊறுகாயும், நெல்லிக்காயும். இந்த ஊறுகாய், நெல்லிக்காய் எவர் வீட்டில் அதிகமாக இருக்கிறதோ, அவர்களுடைய வீட்டில் வறுமை என்பது இருக்காது என்கிற நம்பிக்கையும் உண்டு எனவே இவற்றை குறைவில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். ஊறுகாயை கொஞ்சம் போல் தினமும் சாப்பாட்டில் சேர்த்து வாருங்கள். ஊறுகாயிலும் நெல்லிக்கனி குபேரனுக்கு ரொம்பவும் உகந்ததாக கருதப்படுகிறது. குபேரன் நெல்லி மரத்தை வளர்த்து தான் இழந்த செல்வங்களை மற்றும் நாடு, நகரங்களை எல்லாம் மீட்டு எடுத்தாராம். எனவே நெல்லிக்காய் ஊறுகாயை எப்பொழுதும் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள், வறுமையை போக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -