இந்த ஒரு பொருளை மட்டும் நீங்கள் தானமாக தந்தால் போதும், இவ்வுலகில் வாழும் நாட்கள் மட்டுமல்லாது, வானுலகில் வாழும் நாட்களுக்கும் சேர்த்து புண்ணிய பலனை பெறுவீர்கள்.

dhanam
- Advertisement -

நாம் செய்யும் தான தர்மங்கள் பரிகாரங்கள் வழிபாடுகள் அனைத்தும் உலகில் நாம் வாழும் நாட்கள் வரை நல்ல ஆரோக்கியத்துடனும், செல்வ செழிப்புடனும் வாழ வழி வகுக்கும். ஆனால் இந்த ஒரு பொருளை தானமாக கொடுப்பதால், இவ்வுலகில் மட்டுமில்லாமல் வானுலகத்தில் வாழும் நாட்களுக்கும் சேர்த்து புண்ணியத்தை தேடித் தரும். அந்த பொருள் வேறொன்றும் இல்லை குடை தான்.

இந்த குடை குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். தானங்கள் பலவகை உண்டு. இந்த தானங்களில் குடைதானம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த குடை, வெயில், மழை என எல்லா காலத்திலும் ஒருவரை காக்கும். இதை போலவே இந்த பொருளை தானமாக கொடுக்கும் போது நமக்கும் இவ்வுலகம், அவ்வுலகம் இரண்டிலும் புண்ணிய பலன் கிடைக்கும்.

- Advertisement -

இந்த குடைதானம் பாவம் தீர்க்க, கடன் பட்டவர்கள், கஷ்டப்படுபவர்கள், தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் இந்த தானத்தை செய்யலாம். எப்படி அன்னதானத்தை ஏழை, எளியவர்களுக்கு செய்யலாமோ, அதே போல் இந்த குடை தானமும் இல்லாத ஏழை எளிவர்களுக்கு தானமாக குடுக்கலாம்.

நம் வீடு தேடி வரும் சிறு சிறு வியாபாரம் செய்பவர்கள் மழைக் காலங்களில் எல்லாம் நனைந்து கொண்டே வியாபாரம் பார்ப்பார்கள். அவர்களுக்கு கொடுக்கலாம். நம் வீட்டுக்கு அருகாமையில் வறுமை சூழ்நிலையில் உள்ளவர்கள், அவர்கள் வீட்டு பிள்ளைகள் மழை காலங்களில் பள்ளிக்கு செல்லும் போது குடை இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இது போன்றவர்களுக்கு இந்த குடை தானத்தை கொடுத்தால் அவர்களும் அதன் பலனை அனுபவிப்பார்கள். நிறைய பேர் ரோட்டோரங்களில் வெயிலில் கடை வைத்து இருப்பார்கள். அவர்களுக்கு பெரிய குடையாக வாங்கி தானம் கொடுக்கலாம்.

- Advertisement -

இப்போது எல்லாம் பெரும்பாலும் யாரும் குடையை உபயோகப்படுத்துவதில்லை அதற்கு பதிலாக ரெயின் கோட் வந்துவிட்டது. ஆகவே குடை தானத்திற்கு பதிலாக ரெயின் கோர்டை கூட தானமாக தரலாம். நீங்கள் கொடுக்கும் இந்த தானம் அதை பெறுபவர், இதை வாங்கி உபயோகிக்கும் சூழ்நிலையில் உள்ளவராக பார்த்துக் கொடுங்கள். நாமும் கொடுத்தோம் என்று யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கக் கூடாது.

இந்த பூமியில் வாழும் நாட்களில், நல்ல முறையில் வாழவே நாம் பெரும்பாடு படுகிறோம். அதற்கான புண்ணியத்தை தேடியே அலைகிறோம். என்ன தான் கவனமாக இருந்தாலும் எங்கோ ஒரு சிறு தவறு நடந்து விடுகிறது. அதை சரி செய்யவும், நாம் குழந்தைகளுக்கு புண்ணியத்தை சேர்க்கவுமே நம் காலம் ஓடி விடுகிறது. இதில் வானுலகம் சென்று வாழ எங்கு புண்ணியத்தை சேர்ப்பது என்று கலங்குபவர், எல்லாம் இந்த குடை தானம் செய்யுங்கள். இது போன்ற தான தர்மங்கள், பரிகாரங்கள் எல்லாம் நாம் தெரியம்மால் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு தானே தவிர, தெரிந்தே நாம் செய்யும் பாவங்களுக்கு அல்ல.

- Advertisement -