உடல் எடையை குறைக்க இந்த 1 பொருள் இருந்தால் போதுமே. தினமும் இதை தண்ணீரில் போட்டு குடித்தாலே 30 நாட்களில் உடல் எடை பாதியாக இளைக்கும்.

kudampuli
- Advertisement -

உடல் எடையை குறைப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளது. எப்படி தான் டயட்டை பின்பற்றி வந்தாலும் உடல் எடை குறைந்த பாடாக இல்லை. மேலும் மேலும் எடை கூடிக்கொண்டே தான் போகிறது. தொப்பை பிரச்சனை வேற, என்று அவதிப்படுபவர்கள் தொடர்ந்து 30 நாட்கள் பின் சொல்லக்கூடிய இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். உடனடியாக உடல் எடையை குறைப்பதற்காக ஊசி போட்டுக் கொள்வது, மருந்து மாத்திரை சாப்பிடுவது, சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களின் அளவை உடனடியாக நிறுத்தி உடல் எடையை குறைப்பது, போன்ற தவறை என்றைக்குமே செய்யக்கூடாது.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட வேண்டும். உடல் எடையை குறைப்பதற்கு தேவையான உடற்பயிற்சியை செய்ய வேண்டும். அதேசமயம் உடல் எடையும் குறைய வேண்டும். இப்படி சரிசமமாக எல்லா வேலைகளையும் செய்யும் போது தான் பக்க விளைவுகள் இல்லாத உடல் எடை குறைவு நமக்கு ஏற்படும். இல்லை என்றால் உடலில் ஊட்டச்சத்து குறைந்து, நீர் சத்து குறைந்து, உடல் ஆரோக்கியம் கெட்டுப் போய் அதுக்காக தனியாக ஒரு ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டிய நிலைமை வந்துவிடும். சரி குறிப்பை பார்த்து விடுவோம். உடல் எடையை குறைக்க குடம்புளியை வைத்து ஒரு பானம் தயாரிப்பது எப்படி.

- Advertisement -

கேரளாவில் இந்த குடம்புளியைதான் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இப்போது தமிழ்நாட்டிலும் பரவலாக இந்த புளி கிடைக்கிறது. குடம்புளி உடல் எடையை குறைப்பதற்காக மட்டும் பயன்படுத்தக்கூடிய பொருள் அல்ல. குடம்புளியை சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தவும், வயிற்றுக்குள் இருக்கக்கூடிய அல்சர் என்று சொல்லப்படும் புண் பிரச்சனையை சரி செய்யவும் இந்த குடம்புளி பயனுள்ளதாக இருக்கும்.

குடம்புளியை சமையலுக்கு பயன்படுத்தினாலும் அல்லது வேறு எந்த குறிப்புக்கு பயன்படுத்தினாலும் அதை ஒரு முறை நன்றாக கழுவி விட்டு அதன் பின்பு பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அதன் மேலே தூசு அதிகமாக இருக்கும். முதலில் 2 சிறிய துண்டு குடம்புளிகளை தனியாக எடுத்து கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு, 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி அந்த குடம் புளியை ஊறவைத்து விடுங்கள். இரவு முழுவதும் குடம்புளி தண்ணீரில் ஊறட்டும். அப்படி இல்லை என்றால் நான்கு மணி நேரம் ஆவது புளி தண்ணீரில் ஊற வேண்டும்.

- Advertisement -

தண்ணீரில் புளி நன்றாக ஊறிய பின்பு அந்த தண்ணீரில் 10 புதினா இலைகள், 1/2 இன்ச் அளவு இடித்த இஞ்சி, உப்பு 2 சிட்டிகை, போட்டு நன்றாக கலந்து அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் போல கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். பின்பு இதை வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குளிக்கலாம். தவறு கிடையாது. காலையில் குடிக்க முடியாதவர்கள் உணவு சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து எப்போது வேண்டும் என்றாலும் குடிக்கலாம்.

தினமும் இந்த தண்ணீரை குடித்து உடன் சரியான உடற்பயிற்சியும் எடுத்து சத்தான சரியான ஆகாரங்களை சாப்பிட்டு எண்ணெய் பண்டங்களை தவிர்த்து விட்டால் உங்களுடைய உடல் எடை குறைவதில் வேகமாக நல்ல வித்தியாசம் தெரியும். ட்ரை பண்ணி பாருங்க. இரண்டு டம்ளர் அளவு இந்த பானத்தை தயார் செய்து இருக்கின்றோம். இரண்டு பேர் இதை குடிக்கலாம்.

பின்குறிப்பு: 1 டம்ளர் அளவு தண்ணீருக்கு ஒரு சிறிய துண்டு குடம்புளி பயன்படுத்தினால் போதும். நிறைய குடம்புளியை போட்டு ஊற வைத்து தண்ணீரில் கொதிக்க வைத்தால் தண்ணீர் அதிக புளிப்பு சுவையில் கிடைக்கும். அதை பருகுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். உங்களுடைய தண்ணீரின் அளவைப் பொறுத்து குடம்புளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -