அம்மன் பாதங்களிலிருந்து இந்த 1 பழத்தை மட்டும் வீட்டிற்கு கொண்டு வாருங்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனை காற்றில் கரைந்து போகும்.

amman
- Advertisement -

கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமா. சக்தி தேவியை பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவனில் பாதி சக்தி. அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ஆணில் பெண் பாதி, பெண்ணில் ஆண் பாதி என்பதை உணர்த்துவதற்காக தான் இந்த அவதாரம் எடுக்கப்பட்டது. அந்த சக்தி தேவியின் அருளால் நிச்சயமாக நம்முடைய குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் எந்த அம்மன் கோவிலில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். கரும்புள்ளிகள் இல்லாத எலுமிச்சம் பழமாக இருக்கட்டும். கூடவே வெற்றிலை பாக்கு, பூ, பழம் தேங்காய் அர்ச்சனைக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள். அம்மன் கோவிலுக்கு சென்று குருக்களிடம் அர்ச்சனை பொருட்களோடு சேர்த்து இந்த ஒரு எலுமிச்சம் பழத்தையும் கொடுங்க. எலுமிச்சம் பழத்தை அம்மன் பாதங்களில் வைத்து பூஜை செய்ய சொல்லுங்க. உங்களுடைய பெயர் உங்கள் கணவரின் பெயர் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அம்மனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். என்னுடைய வாழ்க்கைத் துணையோடு நான் சேர்ந்து வாழ வேண்டும். சண்டை சச்சரவு இல்லாமல் வாழ வேண்டும் என்று. பிறகு அர்ச்சனை தட்டை வாங்கிக் கொள்ளுங்கள். அம்மன் மடியில் வைதத்த அந்த ஒரு எலுமிச்சம் பழத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள். வீட்டிற்கு கொண்டு வந்த எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி நன்றாக காய விட்டு விடுங்கள்.

காய்ந்த எலுமிச்சம் பழத்தோடு ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து எரிய விட்டு விடுங்கள். எலுமிச்சம்பழம் முற்றிலும் சாம்பல் ஆகிவிடும். இந்த சாம்பலில் கொஞ்சமாக எண்ணெய் அல்லது நெய் விட்டு குழைத்தால் ஒரு மை நமக்கு கிடைக்கும். இந்த மையை தினம் தோறும் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். என்னுடைய வாழ்க்கை துணை என்னோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்து இந்த திலகத்தை நெற்றியில் இட்டு வர கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை கணவனும் செய்யலாம். மனைவியும் செய்யலாம். சந்தோஷமான இல்லற வாழ்க்கையில் நிம்மதி வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். ரொம்ப நாட்களாக கணவன் மனைவி பிரிந்தே இருக்கிறார்கள். அவர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இருவரில் யாருக்காவது ஒருவர் மனதில் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும் பட்சத்தில் அம்மன் மீது நம்பிக்கை வைத்து பரிகாரத்தை செய்பவர்களுக்கு கூடிய சீக்கிரத்தில் நல்ல காலம் பிறக்கும்.

மனப்பொருத்தம் பார்த்து சில திருமணம் நடத்தி வைத்திருப்பார்கள். சிலர் ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் நடத்தி வைத்திருப்பார்கள். எப்படி திருமணம் நடந்திருந்தாலும் சரி புரிதல் இல்லாத குடும்பத்தில் நிச்சயமாக பிரச்சனை வரும். புரிதல் என்பது காதல் திருமணத்திலோ, அல்லது பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணத்திலோ இல்லை. அது மனது சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். மனதாற உண்மையாக குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் குடும்பத்தில் பிரச்சனை வராது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -