தினமும் இந்த அம்மனின் பெயரை உச்சரித்து வழிபாடு செய்தாலே போதும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கு வாய்ப்பே இல்லை. குடும்பம் என்றைக்கும் ஒற்றுமையாக இருக்கும்.

buvaneshwari-amman
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் கணவன், மனைவி, பிள்ளைகள், இவர்கள் மட்டும் சேர்ந்து இருப்பது தான் குடும்பம் என்று ஆகிவிட்டது. அப்பா, அம்மா, மாமனார், மாமியார், தாத்தா, பாட்டி, சித்தப்பா சித்தி, அண்ணன் தம்பி, என்று கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலமெல்லாம் காணாமலேயே போய்விட்டது. நம்முடைய குடும்பத்தின் சூழ்நிலை மாற மாற குடும்பத்தின் இருக்கும் சந்தோஷமும் குறைந்துகொண்டே தான் வருகின்றது. நல்லது கெட்டதை எடுத்து சொல்வதற்கு முதியவர்கள் வீட்டில் கிடையாது. குழந்தைகள் விளையாடுவதற்கு சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா என்ற உறவுகள் இன்று இல்லை. ஒரு டிவி, மிஞ்சிப் போனால் ஒரு கைபேசி யோடு ஒருநாள் முடிந்து போய் விடுகின்றது. சரி, இதெல்லாம் இருக்கட்டும். இப்போது இருக்கின்ற உறவுகள் ஆவது சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

fight-1

கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடும்பமாக இருந்தாலும் சரி நல்லது கெட்டதுக்கு கலந்து கொள்ள, பேச்சு வார்த்தைக்காகவாவது உறவுகள் வேண்டாமா? உறவுகளை ஒதுக்கி வைக்காதீர்கள். விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள் என்றுமே கெட்டுப் போவதில்லை என்ற ஒரு தகவலோடு இந்த பதிவினை தொடங்குவோம். உறவுகளை பலப்படுத்த கூடிய ஒரு ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

குடும்ப ஒற்றுமைக்கு நம் தினம்தோறும் வழிபடவேண்டிய அம்மன் புவனேஸ்வரி அம்மன். புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மனை தினம்தோறும் மனதார வேண்டி வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தாலே போதும். புவனேஸ்வரி தாயாரின் திருவுருவப் படத்தை பூஜை அறையில் வைத்துக்கொண்டால் மிகவும் நல்லது.

buvaneshwari-amman1

குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது. உடன்பிறந்தவர்கள் உற்றார் உறவினர்கள், பங்காளிகள் அனைவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, தினமும் இந்த மூன்று வரி மந்திரத்தை ஒரு முறை உச்சரியுங்கள் போதும். உங்களுடைய குடும்பம் சண்டை போட்டு தனித்தனியாக பிரிந்து இருந்தாலும் அந்த உறவுகள் கூடிய சீக்கிரத்திலேயே ஒன்று சேர்ந்து விடும்.

- Advertisement -

ஒருவேளை நீங்கள் சொந்த பந்தங்களுடன் ஒற்றுமையாக இருந்தால், அந்த பந்தம் மேலும் வலுப்பெறவும் தினமும் காலையில் இந்த மந்திரத்தை உச்சரித்து பூஜை அறையில் வழிபாடு செய்யலாம். குடும்ப ஒற்றுமைக்காக உச்சரிக்க வேண்டிய புவனேஸ்வரி தாயாரின் மந்திரம் உங்களுக்காக இதோ.

deepam

ஓம் ஆம் ஹ்ரோம் ஸ்ரீம்
ஸ்ரீ புவனேஸ்வரி
ஸ்ரீம் ஹ்ரீம் வசி வசி நமஹ.

buvaneshwari-ammantemple

இந்த மந்திரத்தை நீங்கள் அடுத்தவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கூட உச்சரிக்கலாம். எடுத்துகாட்டிற்கு அம்மா அப்பா சண்டை போட கூடாது என்பதற்காக பிள்ளைகள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இப்படி புவனேஸ்வரி தாயாரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை தினம்தோறும் உச்சரித்து வர குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவு இருக்காது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -