வாழையடி வாழையாக வாழ வாழைப்பூ பரிகாரம்

mahalakshmi vazhaipoo
- Advertisement -

நம் ஒவ்வொருவரும் அனுதினமும் இறைவனிடம் வேண்டுவது நாம் நன்றாக இருக்க வேண்டும்.நமக்குப் பிறகு நம்முடைய தலைமுறையினர் நன்றாக வாழ வேண்டும் என்று தான். இன்றளவும் நம் பலரை சந்தித்திருப்போம் வாழையடி வாழையாக அவர்கள் குடும்பம் நல்ல நிலையில் அமோகமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இதற்கு முக்கிய காரணமாக பித்ருக்களின் ஆசிர்வாதமும் தலைமுறை தோஷம் எதுவும் இல்லாததும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி இன்று அவர்கள் வாழும் காலத்தில் செய்யும் தான தர்மங்கள் நல்ல காரியங்கள் அவர்களின் அடுத்த தலைமுறை நன்றாக வாழ வைக்கும். சரி இப்போது நாமும் நல்ல முறையில் வாழ்ந்து நம்முடைய தலைமுறையினரும் நல்ல முறையில் வாழ என்ன செய்ய வேண்டும்.

- Advertisement -

அதற்கு நாம் அறவழியில் நடப்பதுடன் சேர்த்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தையும் பெற வேண்டும் அது மட்டும் இன்றி மகாலட்சுமி தாயாரை இப்படி வழிபடுவதன் மூலமும் நம்முடைய இந்த வேண்டுதல் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குடும்பம் வாழையடி வாழையாக தழைத்து வாழ பரிகாரம்

வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது வாழைமரம் தான். வாழை மரத்தில் மட்டும்தான் ஒவ்வொரு பொருளும் வீணாகாமல் பயன்படும். அத்துடன் வாழைமரம் குலை தள்ளிய உடனே அடுத்த ஒரு புதிய கன்று உருவாக்கும். ஆகையால் தான் இன்றளவும் திருமணம் போன்ற விசேஷங்கள் வாழைமரம் கட்டுவதை ஐதிகமாக வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த வாழை மரத்தில் உள்ள வாழை பூவை கொண்டு தான் இப்போது நாம் இந்தபரிகாரத்தை செய்யப் போகிறோம். இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்று செய்ய வேண்டும். அதற்கு ஒரு வாழைப்பூவை வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் பிரியாணி இலை, பன்னீர், சந்தனாதி தைலம் இவைகளையும் வாங்கி கொள்ளுங்கள்.

இந்த வாழைப்பூவை சுத்தம் செய்து அதில் உள்ள பூக்களை மட்டும் தனியாக எடுத்து விடுங்கள். அதே போல் பிரியாணி இலைகளையும் தனியாகஒரு கிண்ணத்தில் கொட்டி விடுங்கள். இரண்டிலும் கொஞ்சமாக பன்னீர் தெளித்து கலந்து விடுங்கள். அதன் பிறகு இவை இரண்டிலும் சந்தனாதி தைலத்தை ஒரே ஒரு சொட்டு மட்டும் விட்டு அனைத்து இடத்திலும் படுவது போல தடவி விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக இதை மாலையாக தொடுக்க வேண்டும். முதலில் இரண்டு வாழைப்பூவை வைத்து பூ கட்டுவது போல கட்டிக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு பிரியாணி இலை, இரண்டு வாழைப்பூ அடுத்து ஒரு பிரியாணி இலை இப்படியாக மாலையை முழுவதுமாக கட்டி முடித்து விடுங்கள். இந்த மாலையை உங்கள் வீட்டில் அருகில் உள்ள மகாலட்சுமி தாயார் ஆலயம் அல்லது நாராயணர் ஆலயத்திற்கு சென்று சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த மாலையை சூட்டி வழிபட்ட பிறகு மாலையை வீட்டிற்கு கொண்டு வந்து விட வேண்டும் மாலையை போட்ட உடனே வாங்கி விடாதீர்கள். சிறிது நேரம் தெய்வத்தின் மீது மாலை இருக்கட்டும். அதன் பிறகு வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமி தாயார் படத்தில் மாலையை போட்டு விடுங்கள்.

இதே போல அடுத்த வாரம் புதன்கிழமையும் மாலை கட்டி கோவிலுக்கு கொண்டு சென்று சாற்றிய பிறகு வீட்டுக்கு கொண்டு வாருங்கள். அப்பொழுது பழைய மாலை எடுத்து ஒரு கவரில் போட்டு வைத்து விடுங்கள். இது போல 18 வாரங்கள் செய்ய வேண்டும்.இந்த வாழைப்பூக்களையும் பிரிஞ்சி இலையும் நன்றாக காய வைத்து வீட்டில் சாம்பிராணி போடும் போது அதில் போட்டு விடலாம் வாய்ப்பில்லாதவர்கள் ஓடும் நேரில் போட்டு விடுங்கள்.

இந்த பரிகாரத்தை புதன்கிழமை காலை முதல் இரவு 7 மணி வரை உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தில் ஆலயத்திற்கு சென்று இதுபோல செய்து விடுங்கள். இந்தபரிகாரத்தை தொடர்ந்து செய்ய செய்ய உங்களுடைய செல்வநிலை உயர்ந்து நல்ல முறையில் மாற்றம் ஏற்படும். இத்துடன் உங்களுடைய அடுத்த சந்ததி இதற்கான பலனை அனுபவித்து நல்ல முறையில் வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கர்ம வினைகளை நீக்கும் முருகன் வழிபாடு

இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதுபோல வழிபட்டு நல்ல முறையில் வாழுங்கள் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -