குழப்பங்கள் நிறைந்த குடும்பத்தில் அமைதி நிலவ, இந்த ஒரு விளக்கை மட்டும் ஏற்றுங்கள். இந்த தீபம் முழுவதும் எரிந்து முடியும் போது, உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் இருள் விலகி இருக்கும்.

vilakku-pray
- Advertisement -

வாழ்க்கையில் பிரச்சனைகள் குழப்பங்கள் அவ்வப்போது வரலாம், போகலாம். ஆனால், சில வீடுகளில் குழப்பங்களும் பிரச்சனைகளும் சண்டை சச்சரவுகளும் தான் வாழ்க்கையாக இருக்கும்‌. இப்படிப்பட்ட குடும்பத்தில் மன நிம்மதி இருக்காது. குடும்பத்தில் ஒரு அமைதி இருக்காது. சூனியம் பிடித்த வீடு போல இருக்கும். திடீரென்று பிரச்சனை தலை தூக்கும். நேற்று வரை நன்றாக இருந்த குடும்பம், இன்று நடுத்தெருவில் வந்து நிற்கும். அவமானப்படும். வீட்டில் இருக்கும் பிள்ளைகள் பாதை மாறி சென்றிருப்பார்கள். பெற்றவர்களுக்கு கோடி கோடியாக பணம் இருந்தும் நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் என்னதான் தீர்வு. நம் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களை எப்படி சரிசெய்வது. இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு இந்த பரிகார தீபத்தை ஏற்றுங்கள்.

எப்போதுமே நமக்கு ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் தான். இது நம்மில் எல்லோருக்கும் தெரியும். அந்த எதிர்மறை ஆற்றலை அடித்து துவம்சம் செய்யக்கூடிய சக்தி நெருப்புக்கும் மட்டும்தான் உள்ளது. பஞ்ச பூதங்களில் இந்த நெருப்புக்கும் மட்டும் பில்லி சூனியம் செய்வினை கண்திருஷ்டி எல்லாவற்றையும் பொசுக்க கூடிய தன்மை உடைய சக்தியாக சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் தினம் தோறும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

ஒரு மண் அகல்விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், இரண்டையும் சம அளவு கலந்து ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த எண்ணெயில் கொஞ்சமாக துளசி இலை சாறை பிழிந்து விடவேண்டும். ஒருசில துளசி இலைகளை கையிலெடுத்து கசக்கிப் பிழியும் போது அதிலிருந்து சாறு கிடைக்கும். இரண்டிலிருந்து மூன்று சொட்டு சாறு கிடைத்தாலும் அந்த எண்ணெயில் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி குலதெய்வத்தை இஷ்ட தெய்வத்தையும் மனதார வழிபடுங்கள்.

பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றிவைத்து, தீபத்திற்கு முன்பாக அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியான நிலையில், இறைவனை வழிபாடு செய்யுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு வழி கிடைக்க வேண்டும் என்று இறைவனின் பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக குடும்பத்திலுள்ள குழப்பங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

- Advertisement -

வாரத்தில் ஒரு நாள் எந்த கிழமை வேண்டுமென்றாலும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றிக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். காலை மாலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஒரு மணி நேரம் இந்த தீபம் உங்களுடைய வீட்டில் சுடர்விட்டு ஒளிரட்டும். உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் எரிந்து அழிந்து போகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

இந்த தீபத்தை தொடர்ந்து ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. திடீரென உங்கள் வீட்டில் பிரச்சனை தலை தூக்குகிறது. திடீரென உங்களுக்கு மன குழப்பம் வருகிறது. எதிர்பாராத சண்டை சச்சரவுகளில் காரணமாக குடும்பத்தில் ஒற்றுமை இல்லை என்றால், மன அமைதிக்காக மனக்குழப்பத்தை தீர்ப்பதற்காக குடும்பத்தில் சந்தோஷம் வரவேண்டும் என்பதற்காக இந்த தீபத்தை ஏற்றி அனைவரும் பலன் அடையலாம். இறை நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -