குடும்பத்தில் நடக்கும் சண்டை மனக்குழப்பங்கள் தீர்ந்து நிம்மதியாக வாழ ஒரே ஒரு நாள் மட்டும் இரவு தூங்கும் முன்பு இந்த மூன்று பொருள்களை ஒன்றாக சேர்த்து எரித்து விடுங்கள் போதும்.

- Advertisement -

நாளெல்லாம் என்ன தான் பாடுபட்டு உழைத்து கலைத்தாலும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் மனதில் ஒருவித அமைதியும் சந்தோஷமும் வர வேண்டும். அப்போது தான் மனம் மகிழ்ச்சியாகவும் அடுத்த நாள் நம்முடைய வேலைகளை நிம்மதியாக தொடரவும் முடியும். ஆனால் வீட்டிற்குள் எப்போது நுழைந்தாலும் சண்டையும் சச்சரவுமாகவும் தொடர்ந்து கொண்டே இருந்தால், குடும்பம் பாதிப்பதுடன் நம்மால் அடுத்த வேலைகளில் மனதை செலுத்த முடியாது. இதனால் நாம் மட்டுமின்றி நம்மை சுற்றி உள்ளவர்கள் குழந்தைகள் என அனைவருமே பாதிப்படைவார்கள்.

இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் சில நேரங்களில் சண்டை முடிந்த பிறகு எதற்காக இது நடந்தது என்று தெரியாமல் குழம்பிப் போவோம் காரணமே இல்லாமல் எரிச்சல் அடைவோம் இப்படி பல குடும்பங்களில் நடக்க தான் செய்கிறது. இந்த எதிர்மறை ஆற்றல் நம் வீட்டில் இருந்தும் நம்மில் இருந்தும் விலக ஆன்மீகம் நமக்கு ஒரு அருமையான பரிகாரத்தை தந்திருக்கிறது. அதைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் நிம்மதியாக இருக்க
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை இரவு தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை மாலையில் உங்களுடைய பூஜை வேலைகள் எல்லாம் முடிந்து உணவு உண்ட பிறகு இரவு தூங்க செல்லும் முன்பாக இந்த பரிகாரத்தை செய்து விட்டு பின் உறங்க செல்லுங்கள். இந்தப் பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகு கல்லுப்பு தர்ப்பைப்புல். கடுகும் கல் உப்பும் நம் வீட்டிலே இருக்கும், தர்ப்பை புல்லை மட்டும் கடைகளில் வாங்கி முன்கூட்டியே வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை இரவு நீங்கள் சாம்பிராணி தூபம் போடுவது போல இதற்கு நெருப்பை தயார் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த அனலை வீட்டில் வரவேற்பு அறையில் வைத்த பிறகு கடுகு கல் உப்பு தர்ப்பை அனைத்திலும் சிறிதளவு மட்டும் இதில் சேர்த்து போட்டு அப்படியே வைத்து விடுங்கள். இரவு முழுவதும் இது உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் இருக்கட்டும். மறுநாள் காலையில் இதை யார் காலிலும் படாத ஒரு இடத்தில் கொண்டு போய் போட்டு விடுங்கள்.

- Advertisement -

இதை சாம்பிராணி புகை போடுவது போல் போட முடியாதவர்கள். கற்பூரம் அல்லது பச்சை கற்பூரத்தை வைத்து எரித்து அதிலும் போடலாம் அதை உங்கள் விருப்பம் போல செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 5 வாரங்கள் செய்ய வேண்டும். அதற்குள்ளாகவே உங்களுடைய இந்த பிரச்சனைகள் மனக்குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும். அதன் பிறகு எப்போதெல்லாம் வீட்டில் இது போல சூழ்நிலை நிலவுகிறது என்று உங்களுக்கு தோன்றுகிறதோ அந்த சமயங்களில் இது போல செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எளிமையான இந்த பூஜை முறையை இனி மேலாவது நம் வீட்டில் செய்து பணத்தடைகளை உடைத்து எறிந்து சகல செல்வங்களையும் பெறலாம்.

இந்த திருஷ்டி கழிப்பது சுற்றி போடுவது இதையெல்லாம் எதிர்மறை ஆற்றல்கள் உடம்பிலும் நம்மை சுற்றி உள்ள இடத்திலிருந்தும் போவதற்காக நம் முன்னோர்கள் காலத்தில் முதலே கடைப்பிடித்து வந்த பழக்கம் தான். இப்போது அதில் ஒரு சில பொருள்களை மாற்றி போட்டு செய்கிறோம் அவ்வளவு தான். இதனால் எந்த ஒரு பாதிப்பும் யாருக்கும் கிடையாது நம் வாழ்க்கையை நாம் நிம்மதியாக வாழ நாம் தானே வழி தேடி கொள்ள வேண்டும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் செய்து பாருங்கள்.

- Advertisement -