பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எளிமையான இந்த பூஜை முறையை இனி மேலாவது நம் வீட்டில் செய்து பணத்தடைகளை உடைத்து எறிந்து சகல செல்வங்களையும் பெறலாம்.

lakshmi-coins
- Advertisement -

நம் முன்னோர்களிடம் நாம் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது அவர்கள் “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று ஆசீர்வதிப்பார்கள். அப்படிப்பட்ட 16 வகையான செல்வங்களையும் எவன் ஒருவன் ஒருங்கே பெறுகிறானோ அவனே இவ்வுலகில் கோடீஸ்வரனாக திகழ்கிறான். அப்படிப்பட்ட கோடீஸ்வர யோகம் பெறுவதற்கு வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய பூஜை முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

செல்வங்களுக்கு அதிபதியாக திகழ்பவள் மகாலட்சுமி தாயார். அந்த மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான ஆசீர்வாதம் பெறுவதற்கு நாம் பல பரிகாரங்களையும், பல வழிபாட்டு முறைகளையும் பின்பற்றி வருகிறோம். அவ்வாறு பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளில் மிகவும் எளிமையாக வீட்டிலேயே செய்யக் கூடிய வழிபாட்டு முறையை தான் இப்பொழுது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இந்த பூஜையை நாம் வெள்ளிக்கிழமை தோறும் செய்யலாம். நம்மால் இயன்றால் அனு தினமும் செய்யலாம். மாதப்பிறப்புகளில் செய்யலாம். இந்த பூஜையை செய்வதற்கு நமக்கு 16 ஒரு ரூபாய் நாணயங்கள் தேவைப்படும். வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுது நீராடி வாசலில் கோலமிட்டு தெய்வங்களுக்கு மலர்களை சாற்ற வேண்டும். இப்பொழுது ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தாம்பாளத்தில் 15 நாணயங்கள் வட்டமாகவும் நடுவில் ஒரு நாணயம் என்று 16 நாணயங்களை வைக்க வேண்டும். அருகில் மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து அவருக்கு வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து தூபம் தீபம் ஆராதனை காட்டி அவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது அந்த 16 நாணயங்களிலும் சிறிது தீர்த்தத்தை இடவேண்டும். அவ்வாறு தீர்த்தத்தை இடும் பொழுது “ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ” என்று கூறியவாறு இடவேண்டும். அதன் மேல் சந்தனத்தை வைக்க வேண்டும். அப்பொழுதும் “ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ” என்று கூற வேண்டும். சந்தனத்தின் மேல் குங்குமத்தை வைக்க வேண்டும். அதற்கு மேல் சிறிது அச்சதைகளை (மஞ்சள் கலந்த பச்ச அரிசி) போட வேண்டும். பிறகு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு நாம் செய்யும் ஒவ்வொரு முறையும் “ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ” என்று கூறியவரே செய்ய வேண்டும்.

- Advertisement -

மகாலட்சுமியின் அஷ்டோத்திரம் தெரிந்தால் அதை பாராயணம் செய்யலாம். பிறகு நெய்வேத்தியமாக கற்கண்டு, உலர் திராட்சை, பால் பாயாசம், பஞ்சாமிர்தம் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம். பிறகு தூப தீபம் காட்ட வேண்டும். கடைசியாக ஆராத்தி எடுக்க வேண்டும். இந்த பூஜையை முடித்த பிறகு அந்த தாம்பாளத்தை வடக்கு பார்த்தவாறு சிறிது நகர்த்தி வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: திருமண வயதை கடந்தும் இன்னும் மணம் ஆகாமல் துன்பப்படுகிறார்வர்கள் இந்த ஒரு எளிய தானத்தை செய்தால் உங்கள் மனதிற்கு ஏற்றார் போல் மணவாழ்க்கை விரைவில் அமையும்.

இந்த பூஜையை மேற்கொள்ளும் பொழுது நாம் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து செய்ய வேண்டும். அடுத்த வாரம் பூஜை செய்யும் பொழுது இதே நாணயங்களை தண்ணீரில் கழுவி விட்டு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நாம் செய்வதால் மகாலட்சுமியின் கடாட்சம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். பணத் தடைகள் ஏதேனும் இருப்பின் அந்த தடைகள் உடைந்து பல மடங்கு பணம் நமக்கு வந்து சேரும். செல்வாக்கு உயரும். அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.

- Advertisement -