குலதெய்வ அருள் பெற தீபம்

kula dheiva arul pera
- Advertisement -

ஒருவர் எத்தனை வழிபாடுகளையும், பூஜைகளையும் செய்தாலும் கூட குலதெய்வ வழிபாடு செய்யா விட்டால் இதை அனைத்தும் பயனற்றது. ஆகையால் தான் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து குலதெய்வ வழிபாட்டிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அதை இன்றளவும் பின்பற்றியும் வருகிறோம்.

ஒரு குடும்பத்தில் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அவர்களால் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் முன்னேற முடியாது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை என்றே சொல்லலாம். குலதெய்வம் என்பதே நம்முடைய குலத்தை தழைத்து வாழ வைக்கக் கூடிய தெய்வம் என்று தான் பொருள்.

- Advertisement -

அத்தகைய குலதெய்வம் நம் வீட்டில் எப்போதுமே தங்கி நமக்கு அருள் புரிய நாம் அவர்களை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபடும் நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றினால் அவர்களின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குலதெய்வ அருள் கிடைக்க வழிபாடு

குலதெய்வ வழிபாடு என்பது அவரவர் முறைப்படி செய்வது தான் சிறந்தது. ஏனெனில் ஒவ்வொருவரின் குலதெய்வமும் ஒவ்வொன்றாக இருக்கும். அவர்களுக்கென்று அவர்கள் காலங்காலமாக ஒரு முறையை பின்பற்றி வந்திருப்பார்கள். அதன்படி தான் குலதெய்வத்தை வணங்க வேண்டும்.

- Advertisement -

அதை எந்த காரணத்திற்க் கொண்டும் மாற்றக் கூடாது. அப்படி வழிபடும் தெய்வத்திற்கு தீபம் ஏற்றுவது அனைத்து வழிபாட்டு முறையிலும் முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் தீபத்தின் ஒளியிலே தெய்வம் வாசம் செய்வதாக நம்பிக்கை. அப்படி ஏற்றப்படும் தீபம் தான் இந்த வழிபாட்டில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதற்கு பயன்படுத்தும் எண்ணையும் மிகவும் முக்கியம்.

குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்வதோடு உங்கள் பூஜை அறையில் குலதெய்வத்திற்கென்று ஒரு அகல் விளக்கை வைத்து விடுங்கள். அதில் இலுப்பை எண்ணெய் ஊற்றி பஞ்சித் திரி போட்டு தினந்தோறும் குலதெய்வத்தை நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டிற்கும் உங்களுடைய வழிபாட்டு முறைக்கு மேலும் சக்தியை கொடுக்கும். இதனால் எந்த தீங்கும் ஏற்படாது. மாறாக இந்த எண்ணையின் வீரியத்தன்மைக்கு குலதெய்வம் உங்கள் வீட்டின் நிச்சயம் வந்து தங்கி அருள் புரியும் என்று சொல்லப்படுகிறது.

இலுப்பை எண்ணெய் தீபம் என்பது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றளவும் பின்பற்றி வரக்கூடிய வழக்கமாக உள்ளது. அதே போல் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு நிரந்தரமாக கிடைக்க குலதெய்வ கோவிலுக்கு இந்த எண்ணெயும் நீங்கள் வாங்கி கொடுக்கலாம்.

அதுமட்டுமின்றி உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டுதல் நிமித்தமாக வழிபடும் போதும் இலுப்பை எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபடும் போது அது சீக்கிரத்தில் நிறைவேற்றி தரக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இந்த எண்ணெய்க்கு இறையருளை அதிகமாக ஈர்த்து தரக் கூடிய தன்மை உள்ளது.

இதையும் படிக்கலாமே: நவகிரகத்தால் வரும் பாதிப்புகள் நீங்க நவதானிய பரிகாரம்

உங்கள் குலதெய்வத்திற்கு இந்த இலுப்பை எண்ணெய் தீபத்தை தினந்தோறும் ஏற்றி உங்கள் முறைப்படி அவரை வணங்கி வரும் போது அவர் நிச்சயம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்கி விடுவார். அத்துடன் உங்கள் குலத்தை தழைத்து வாழ செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

- Advertisement -