வீட்டில் இருக்கும் உங்கள் குலதெய்வம் உங்கள் வேண்டுதல்களை உடனே நிறைவேற்ற வெள்ளிக்கிழமையில் இந்த 1 பொருளை வைத்து வழிபாடு செய்தால் போதுமே!

kula-dheivam-lemon
- Advertisement -

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதன் மற்றும் குடும்பத்திற்கு முதன்மை தெய்வமாக கருதப்படுவது அவரவர்களுடைய குலதெய்வம் தான். குலதெய்வ அருள் இன்றி வேறு எந்த தெய்வத்தின் அருளும் கிடைப்பதில்லை என்கிறது சாஸ்திரம். பெரும்பாலான மக்களுக்கு தங்களுடைய குல தெய்வம் யார் என்பது தெரியும் ஆனால் ஒரு சிலருக்கு குலதெய்வம் என்னவென்றே தெரியாமல் கூட இருக்கலாம். வழிவழியாக குலதெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு அடுத்தடுத்த சந்ததியும் சகல சவுபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நியதி. அந்த வகையில் நம் வீட்டிற்குள் இருக்கும் குலதெய்வத்திடம் நாம் வேண்டிய வரங்களை உடனே பெற என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

குலதெய்வம் என்பது நம் வீட்டின் நிலைவாயில் மற்றும் பூஜை அறையில், பூஜை அறையில் இருக்கும் கண்ணாடியில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. நிலை வாசலில் இருக்கும் குலதெய்வத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் வெள்ளிக்கிழமை தோறும் நிலவாசல் படியில் அகல் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். தினமும் ஏற்ற முடியாதவர்கள் வெள்ளிக்கிழமையில் நிலைவாசலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, அகல் தீபம் ஏற்றி, மாவிலைத் தோரணம் கட்டி வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் உடைய பரிபூரண அருள் கிடைக்கும். கட்டுப்பட்ட குலதெய்வத்தின் கட்டும் உடையும். எனவே தவறாமல் இதனை கடைப்பிடிப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

மேலும் வெள்ளிக்கிழமை அன்று அன்றாட பூஜை செய்யும் பொழுது கட்டாயம் குலதெய்வத்தை வேண்டி குலதெய்வம் படம் வைத்து இருப்பவர்கள் குலதெய்வத்தின் முன்பு அகல் தீபம் ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். அதில் நெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அது போல் இந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டால் சகலமும் வசமாகும். தேவகனி என்று சொல்லப்படும் எலுமிச்சை தான் அது. எலுமிச்சை பழத்தை வைத்து, குலதெய்வ மந்திரம் உச்சரித்து வழிபட்டு வந்தால், உங்களுடைய குலதெய்வம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள் புரியும்.

thiruchendur

குலதெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகன் மற்றும் காமாட்சி அம்மனை குலதெய்வமாக ஏற்று வழிபட்டு வரலாம். கீழ்வரும் இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து உங்கள் வேண்டுதல்களை வைத்தால் எங்கிருந்தாலும் உங்கள் குரலுக்கு உடனே உங்கள் குலதெய்வம் செவி சாய்க்க ஓடோடி வரும். அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது குலதெய்வத்தின் பெயரையும் சேர்த்து உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்:
ஓம் திருச்செந்தூர் முருகன் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா!

kula-dheivam

திருச்செந்தூர் முருகன் எனும் இடத்தில் உங்களுடைய குலதெய்வத்தின் உடைய பெயரை சேர்த்து உச்சரிக்க வேண்டும். இது போல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீங்கள் குல தெய்வத்தை நினைந்து நிலைவாசல் பூஜை செய்து, பின்னர் பூஜையறையில் இது போல் எலுமிச்சை பழம் வைத்து மந்திரத்தை உச்சரித்து வந்தால் வேண்டிய வேண்டுதல்கள் உடனே பலிக்கும். அனைத்து தெய்வத்தினுடைய அருளும் கிடைக்க குல தெய்வத்தின் உடைய அருள் நமக்கு முதன்மை என்பதை மறவாதீர்கள். குலதெய்வ சாப நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரத்தை அனைவருமே செய்யலாம். குலதெய்வ சாபம் இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நல்ல பலனைக் கொடுக்கும். சாப நிவர்த்தி அடைந்தால் தோஷங்கள் விலகி துன்பங்கள் யாவும் நீங்கும்.

- Advertisement -