குலதெய்வம் எதுவென்றே தெரியாதவர்கள் ஒரே கைப்பிடி மண்ணை வைத்து இதை செய்தால் குலதெய்வமே உங்களை தேடி வந்து அருள் புரியும்.

kuladheivam
- Advertisement -

குலதெய்வ வழிபாடு என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நம்முடைய குலத்தை தழைக்க வைப்பதால் தான் அந்த தெய்வத்திற்கு குலதெய்வம் என்று பொருள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானருக்கு தங்களுடைய குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் அவதிப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் முன்னோர்கள் தொழில் தொடர்பாக இடம் விட்டு இடம் புலம் பெயர்ந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

குலதெய்வம் தெரியாமல் போனதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், குலதெய்வ வழிபாடு செய்யவில்லை என்றால் நம்முடைய குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் நம்மால் ஒரு நிலையில் நிற்க முடியாது. இந்த குலதெய்வம் எங்கு உள்ளது அதை எப்படி வணங்க வேண்டும் என்பதை எல்லாம் குலதெய்வமே நேரில் வந்து உங்களுக்கு அருள் பாலிக்க இந்த பரிகாரம் பெயர் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய அருமையான ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

குலதெய்வம் எதுவென்று தெரிந்து கொள்ள
இந்த வழிப்பாட்டை புதன்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் வளர்பிறை புதன்கிழமை அன்று செய்வது சிறந்தது. இதற்கு நமக்கு புற்றுமண் தேவை உங்கள் வீட்டில் அருகில் கோவில்களில் இருக்கும் புற்றில் இருந்து சிறிதளவு மண்ணை கொண்டு எடுத்து கொள்ளுங்கள். இதை எடுக்கும் போது கவனமாக எடுக்க வேண்டியது அவசியம். இந்த மண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இப்போது இந்த மண்ணில் கொஞ்சம் தண்ணீரை குழைத்து பிள்ளையார் பிடிக்க வேண்டும். இந்த பிள்ளையாருக்கு அவல், பொறி, கடலை, தேங்காய், பூ, வெற்றிலை, பாக்கு, பழம் எல்லாம் வைத்து வணங்க வேண்டும். இத்துடன் ஒரே ஒரு துண்டும் வைத்து வணங்க வேண்டும். நைவேத்தியமாக நீங்கள் ஏதாவது ஒரு இனிப்பு வகையை செய்து வைத்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் வைத்த பிறகு ஊதுபத்தி ஏற்றி வைத்து ஒரு அகல் தீபத்தையும் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த தீபத்தின் முன் அமர்ந்து புற்று மண் விநாயகரை மனதில் நினைத்துக் கொண்டு உங்கள் குலதெய்வம் எதுவென்று உங்களுக்கு தெரிய வேண்டும் எனவும், அது எங்கு உள்ளது குலதெய்வத்திற்கான வழிபாடுகளை நாங்கள் எப்படி செய்ய வேண்டும். எங்களுடைய குடும்பம் தழைத்தோங்க எங்களுக்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் என்று உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். அப்படி வேண்டும் போது கீழே உள்ள இந்த மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.

சங் வங் சிவாய நம
என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இதை குறைந்தது 108 முறை இதற்கு மேலும் சொல்வதாக இருந்தால் தாராளமாக சொல்லலாம். இது போல 21 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் மட்டும் நைவேத்தியம் வெற்றிலை பாக்கு பழம் எல்லாம் வைத்து வணங்குங்கள். அடுத்தடுத்த நாட்களில் வெறும் அவல் பொரி கடலை மட்டும் வைத்து தீபம் ஏற்றி வழிபட்டாலே போதும். உங்களால் முடியும் எனில் தினமும் கூட இப்படி வழிபடலாம்.

- Advertisement -

இந்த மந்திரம் 1008 முறை சொல்லும் போது இதற்கான ஒரு மந்திர உரு ஏறி உங்கள் குலதெய்வத்தை இந்த மந்திரமும் உங்களுடைய வேண்டுதலும் சென்றடையும் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் ஒரு நாளிலே 1008 முறை உங்களால் சொல்ல முடிந்தாலும் விசேஷம் தான். இந்த மந்திரம் சொல்லி வழிபடும் நாட்களில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து செய்தால் இன்னும் விரைவில் உங்களுடைய வேண்டுதல் பலிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வெற்றி எப்போதும் உங்கள் பக்கம் நிற்க வேண்டுமா? இந்த விநாயகரை கொண்டு வந்து வீட்டில் வச்சுக்கோங்க. எந்த தோல்வியும் உங்களை நெருங்காது.

குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் தினம் தினம் துன்பப்படுபவர்கள் இந்த முறையில் பரிகாரத்தையும் செய்து மந்திர வழிபாட்டையும் செய்யும் போது நிச்சயம் குலதெய்வம் உங்களுக்கு வந்து அருள் புரியும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறையில் உங்களுடைய குலதெய்வத்தை கண்டறிந்து கொள்ளலாம் என்ற தகவலுடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -