வெற்றி எப்போதும் உங்கள் பக்கம் நிற்க வேண்டுமா? இந்த விநாயகரை கொண்டு வந்து வீட்டில் வச்சுக்கோங்க. எந்த தோல்வியும் உங்களை நெருங்காது.

pillaiyar
- Advertisement -

முழுமுதற் கடவுளான விநாயகர் வழிபாட்டை பற்றி நாம் அறியாதது ஒன்றும் இல்லை. நாம் எல்லோருக்குமே தெரியும், ஒரு காரியம், தடையில்லாமல் நடக்க வேண்டும் என்றால் முதலில் இந்த விநாயகரை தான் வழிபட வேண்டும் என்று. ஆனால் இன்று நாம் பார்க்கப் போவது ஒரு வித்தியாசமான, இதுவரை நீங்கள் கேள்விப்படாத விநாயகர் வழிபாட்டை பற்றி தான். இந்த விநாயகரை எங்கு பார்த்தாலும் விடாதீங்க. வாங்கி வந்து வீட்டில் வைத்து தினமும் இவரை இரண்டு கை கூப்பி கும்பிட்டு வழிபாடு செய்து வந்தால், உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி குவிய தொடங்கி விடும். தோல்விகள் உங்களைக் கண்டு துவண்டு போகும். அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த விநாயகர், எந்த விநாயகராக இருக்கும் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், ஆன்மீகம் பதிவை தொடர்ந்து படியுங்கள்.

வெட்டிவேர் விநாயகர் மகிமை:
பொதுவாக தர்பை புல்லுக்கு பவர் அதிகம் என்று சொல்லுவார்கள். வெள்ளருக்க வேருக்கு பவர் அதிகம் என்று சொல்லுவார்கள். அதே போல தான். வெட்டி வேருக்கும் பவர் அதிகம். நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியது. வெட்டிவேரை வைத்த இடம் குளிர்ச்சியாக இருக்கும். அந்த வெட்டிவேரிலேயே விநாயகரை வாங்கிக் கொண்டு வந்து நம் வீட்டில் வைத்து விட்டால், வெற்றி குளிர்ச்சியாக நம் வீட்டிலேயே தங்கிவிடும். அதுதாங்க சூட்சமம்.

- Advertisement -

வெட்டிவேரில் நிறைய இடங்களில் பிள்ளையார் செய்து விற்கப்படுகின்றது. அதிலிருந்து ஒரு பிள்ளையாரை வாங்கி வந்து உங்களுடைய வரவேற்பு அறையில் வைத்து தினமும் வழிபாடு செய்யலாம். பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம். நிலை வாசலில் இந்த வெட்டிவேர் பிள்ளையாரை மாட்டி வைத்தால் உங்களுடைய வீட்டுப் பக்கம் எதிர்மறை சக்தி வரவே வராது. வீட்டிற்குள் கண் திருஷ்டி நுழையாது. உங்கள் வீடு ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கும்.

எந்த இடத்திற்கு இன்டர்வியூக்கு போனாலும் வேலை கிடைக்கவில்லை. இந்த வெட்டி வேர் விநாயகரை ஒருமுறை வணங்கி விட்டு முயற்சி செய்து பாருங்கள். வேலை உடனடியாக கிடைக்கும். சொந்த தொழில் தொடங்குவதில் தடை. இந்த வெட்டிவேர் விநாயகரை வீட்டில் வாங்கி வைத்து பத்து நாள் வழிபாடு செய்து பாருங்கள். சொந்த தொழில் தொடங்குவதில் இருந்த தடைகள் விலகும்‌

- Advertisement -

வீட்டில் சுபகாரிய தடை விலக இந்த வெட்டிவேர் விநாயகரை வாங்கி வைத்து தினமும் அந்த வெட்டிவேர் விநாயகரிடம் உங்களுடைய வேண்டுதலை வையுங்கள் போதும். அவர் உங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பார்.

இதையும் படிக்கலாமே: கல்லாப்பெட்டியில் வெள்ளிக்கிழமை இந்த ஒரு பூவை வைத்தால் போதும். பல லட்சங்களை கொட்டிக் கொடுப்பாங்க மகாலட்சுமி.

தினமும் இந்த விநாயகருக்காக சிறப்பு பூஜை எல்லாம் செய்ய வேண்டாம். விளக்கு ஏற்றும் போது ஊதுவத்தியை இந்த விநாயகருக்கும் சேர்த்து காண்பியுங்கள். விநாயகர் சந்தோஷமாக உங்கள் வீட்டில் அமர்ந்து கொள்வார். வெட்டிவேரில் செய்த விநாயகர் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றியை கொடுத்துக் கொண்டே இருப்பார். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த விநாயகர் கிடைத்தால் வாங்கி வைத்து வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -