குலதெய்வத்தை நினைத்து இந்த 1 வரியை எழுதினால் போதும். குடும்ப கஷ்டத்திற்கு தீர்வு தர குல தெய்வமே நேரில் இறங்கி, நம்முடன் துணைக்கு வரும்.

amman
- Advertisement -

சில சமயம் திக்கு தெரியாமல் எக்கச்சக்கமான பிரச்சனையில் சிக்கித் தவிப்போம். எந்தப் பிரச்சனைக்கு எந்த முடிவு எடுப்பது என்று தெரியாமல் மனதில் ஒரே குழப்பமாக இருக்கும். திக்கு தெரியாதவர்களுக்கு தெய்வம் தானே துணையாக இருக்க முடியும். அதிலும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடிய குலதெய்வத்தை மனதில் நினைத்து இந்த ஒரு வரியை எழுதினால் போதும். பிரச்சனைகளுக்கும், குழப்பத்திற்கும் ஒரு தீர்வு தர அந்த குலதெய்வம் உங்களுடன் துணையாக வந்து நிற்கும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு வரி மந்திரத்திரம் என்ன, ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பிரச்சனைக்கு தீர்வு தரும் குலதெய்வ பரிகாரம்:
பிரச்சனையில் சிக்கி தவிக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு இந்த பரிகாரத்தை யோசிக்காமல் செய்து விடுங்கள். கண் முன்னே குலதெய்வம் மனித ரூபத்தில் வந்து நிற்கும். முதலில் பூஜை அறை, வீடு எல்லாவற்றையும் சுத்தம் செய்து விடுங்கள். குலதெய்வத்தின் திருவுருவப்படத்திற்கு முன்பு மண் அகலில் விளக்கு ஒன்று ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

வாசனை நிறைந்த சாம்பிராணி தூபம் போட்டுக் கொள்ளுங்கள். புதியதாக நோட்டுப் புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள். வரி உள்ள நோட் புக், வரி இல்லாத நோட்டு அது உங்களுடைய விருப்பம். நீல நிற பேனாவில் உங்களுடைய குல தெய்வத்தின் பெயரை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுத வேண்டும். எத்தனை முறை எழுதுவீங்களோ அது உங்களுடைய விருப்பம்.

உதாரணத்திற்கு மாரியம்மன் உங்கள் குலதெய்வமாக இருந்தால் ‘ஓம் மாரியம்மன் துணை’ என்று எழுத வேண்டும். முனீஸ்வரர் என்றால் ‘ஓம் முனிஸ்வரரே துணை’ என்று எழுத வேண்டும். இப்படி அந்த நோட்டுப் புத்தகத்தில் தினமும் உங்க குலதெய்வத்தின் பெயரை எழுதி, அவரே துணை என்று கூப்பிட பிரச்சனைகளுக்கு தீர்வு தர, குழப்பங்களுக்கு விடிவு காலம் பிறக்க அந்த குலதெய்வம் ஒரு வழியை காட்டிக் கொடுக்கும்.

- Advertisement -

தினமும் காலையில் நேரமில்லை என்றால், மாலை நேரத்தில் எழுதுங்கள். மாலையில் நேரமில்லை என்றால் காலையில் எழுதுங்கள். குறைந்தது 11 முறை எழுதினாலும் தவறு கிடையாது. அந்த நோட்டுப் புத்தகம் முழுக்க, தினமும் குலதெய்வத்தை துணைக்கு அழைத்து இந்த ஒரு வரியை எழுதி விடுங்கள். குலதெய்வ கோவிலுக்கு எப்போது நீங்க போறீங்களோ, அப்போது அந்த நோட்டு புத்தகத்தை கொண்டு போய் குலதெய்வத்தின் கோவிலில் வைத்து விட்டு வர வேண்டும் அவ்வளவு தான்.

தீராத பிரச்சனைக்கும் தீர்வு தர இந்த பரிகாரத்தை செய்யலாம். குடும்பம் எந்த குழப்பத்திலும் சிக்கிக் கொள்ளக்கூடாது. குடும்பம் நிறைவான சந்தோஷத்தில் இருக்க வேண்டும். துணையாக குலதெய்வத்தை அழைத்து வீட்டில் அமர வைக்க வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். குடும்பம் சுபிட்சம் பெறும். குடும்பத்திற்கு எதிர்பாராத ஆபத்துக்களை வரவிடாமல் அந்த குலதெய்வம் தடுக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் மூட்டை மூட்டையாக தங்கம் சேர அட்சய திருதியை அன்று இந்த குபேர மூட்டையை கட்டி யாருக்கும் தெரியாமல் வைத்து விடுங்கள். அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற்று தரும் ரகசிய தாந்திரீக பரிகாரம்.

குலதெய்வத்தின் நாமத்தை எழுதுவதில் எவ்வளவு அற்புதம் சக்தி உள்ளது என்பதை பரிகாரத்தை செய்பவர்கள் மட்டும் தான் உணர முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன எளிமையான பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -